சங்கம் மருவிய
கால இலக்கியங்கள்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்
·
கி.பி.3ம் நூற்றாண்டு முதல் 6-ம் நைற்றாண்டு
வரையிலான காலம்
·
இக்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்
·
இக்கால இலக்கியத்திற்கு இருண்டகால இலக்கியம்
எனும்பெயரும் உண்டு.
· “நாலடி நாண்மணி நாநாற்பது ஐந்திணை
முப்பால் கடுங்கோவை பழமொழி-மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி
என்பனவே
கைந்நிலைய வாங் கீழ்க்கணக்கு”
1.
அறநூல்கள் - 11
2.
அகநூல்கள் - 6
3.
புறநூல் - 1
·
அறநூல்கள்
1.
நாலடியார் - சமண
முனிவர்கள்
2.
நாண்மனிக்கடிகை - விளம்பிநா்கனார்
3.
இன்னா நாற்பது - கபிலர்
4.
இனியவை நாற்பது - பூதஞ்சேந்தனார்
5.
திரிகடுகம் - நல்லாதனார்
6.
ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்
7.
பழமொழி - முன்னுரையரையனார்
8.
சிறுபஞ்சமூலம் - காரியாசன்
9.
ஏலாதி - கணிமேதாவியார்ர
10.
திருக்குறள் - திருவள்ளுவர்
11.
முதுமொழிக்காஞ்சி - கூடலூர்க்கிழார்
·
அகநூல்கள்
1.
ஐந்திணை ஐம்பது - மாறன் பொறையனார்
2.
ஐந்திணை எழுபது - மூதாவையார்
3.
திணைமொழி ஐம்பது - கண்ணன்
சேந்தனார்
4.
திணைமாலை நூற்றைம்பது - கணிமேதாவியார்
5.
கார் நாற்பது - கண்ணன்
கூத்தனார்
6.
இந்நிலை - பொய்கையார்
·
புறநூல்
1)
களவழி நாற்பது - பொய்கையார்
1.நாலடியார்
·
திருக்குறளுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும்
நீதி நூல்
·
தொகுத்தவர் – பதுமனார்
·
வேறுபெயர்கள்
¨
வேளாண் வேதம்
¨
நாலடி நானூறு
¨
குட்டித்திருக்குறள்
·
திருக்குறள் போலவே அறம்,பொருள்,இன்பம் என்ற
3 பிரிவுகளை உடையது.
§
அறத்துப்பால் - 13 அதிகாரங்கள்
§
பொருட்பால் - 24 அதிகாரங்கள்
§
காமத்துப்பால் - 3 அதிகாரங்கள்
·
இந்நூல் 400 பாடல்களை கொண்டுள்ளது.
·
G.U.போப் இந்நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்
·
நாலடியார் கருத்துப்படி நன்மை செய்வோர் வாய்க்கால்
போன்றோர்.
·
பாடல் வரிகள்
§ “கல்வியழகே அழகு”
§ “கல்விக்கரையில கற்பவர்
நாள் சில”
§ “நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு
துரையுண்டு”
§ “செல்வம் சகடக்கால் போல்
வரும்”
2.நாண்மனிக்கடிகை
·
கடிகை என்பதற்கு துண்டு என பொருள்.4 மணித்துண்டுகள்
இணைந்த மாலை போல் ஒவ்வொரு பாடலிலும் 4 கருத்துகள் இடம்பெற்றுள்ளதால் இப்பெயரை பெற்றது.
·
இந்நூலின் 7,100 வது பாடலை போப் மொழிபெயர்த்துள்ளார்.
·
இந்நூல் 100 பாடல்களைக்கொண்டுள்ளது.
·
பாடல் வரிகள்
Ø ‘இளமைப்பருவத்து கல்லாமைக்குற்றம்’
Ø ‘அல்லவை செய்வார்க்கு அறம்
கூற்றம்’
Ø ‘செல்வது வேண்டின் வெகுளி
வேண்டல்’
3.இன்னா நாற்பது
·
துன்பம் தரும் செயல்களைத்தொகுத்துக்கூறும்
நூல்
·
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் இன்னா என்று
முடிவதால் இப்பெயர் பெற்றது.
·
40 பாடல்களைக்கொண்டது
·
பாடல்வரிகள்
§ ‘ஊணைத்தின்று ஊனைப்பெருக்குதல்
இன்னா’
§ ‘உண்ணாது வைக்கும் பெரும்பொருள்
இன்னா’
4.இனியவை நாற்பது
·
இனிய செயல்களை 40 பாடல்களில் தொகுத்துக்கூறியதால்
இப்பெயரைப்பெற்றது.
·
பாடல்வரிகள்
§ ‘ஊணைத்தின்று ஊனைப்பெருக்காமை
இனிது’
§ ‘மானம் அழிந்த பின் வாழாமை
இனிது
5.திரிகடுகம்
·
திரி என்றால் 3.கடுகு என்றால் காரமான பொருள்.
·
திப்பிலி,சுக்கு,மிளகு எனும் மூன்றினால்
ஆன பொருளுக்கு திரிகடுகம் எனப்பெயர்.இதில் ஒவ்வொரு பாடலிலும் வரும் 3அறக்கருத்துகள்
மக்களின் மனமயக்கத்தைப்போக்கும்.
·
இது 100 வெண்பாக்களை உடையது.
·
பாடல்வரிகள்
§ ‘நெஞ்சம் அடக்குதல்
வீணாகும்’
§ ‘தாளாளன் என்பான் கடன்பட
வாழாதான்’
6.ஆசாரக்கோவை
·
ஆசாரம் - ஒழுக்கம், கோவை - ஒடுக்கிக்கூறல்
·
நாள்தோறும் செய்யவேண்டிய கடைகள் பற்றி கூறுகிறது
·
இது ஆரிடம் எனும் வடமொழிநூலை மூலமாக கொண்டது.
7.பழமொழி
·
நீதிக்கருத்தை விளக்கிக்காட்டும் வகையில்
அமைந்த நூல்.
·
திருக்குறள்,நாலடியாரோடு ஒருங்கே வைத்து
எண்ணத்தக்க பெருமை உடைய நூல்
·
தொல்காப்பியர் இதனை முதுசொல் எனக்குறிப்பிடகிறார்.
·
இதன் வேறுபெயர்கள்
¨
பழமொழி நானூறு
¨
உலக வசனம்
¨
முதுமொழி
·
இது 400 பாடல்களை உடையது
·
‘பாம்பின் கால் பாம்பறியும்’
·
‘ஆற்றுநா வேண்டுவது இல்’
8.சிறுபஞ்சமூலம்
·
பஞ்சம் - 5, மூலம் - வேர்.
·
இந்நூல் கடவுள் வாழ்த்துடன் 97வெண்பாக்களை
கொண்டது.
·
சிறுவழுதுணை,நெருஞ்சி,சிறுமல்லி,பெருமல்லி,கண்டங்கத்திரி
ஆகிய 5 வேர்கள் உடலுக்கு வலிமைக்கொடுப்பதைப்போல இந்நூலில் அமைந்த 5 கருத்துகள் மக்கள்
மனதிற்கு வலிமை கொடுக்கும்.
·
பாடலின் விளக்கம்
§ “கண்ணுக்கு அழகு இரக்கம்
கொள்ளுதல்
காலுக்கழகு இரந்து செல்லாமை
இசைக்கழகு கேட்டார் நன்றென்றல்
ஆராய்ச்சிக்கழகு முடிவை
துணிந்துரைத்தல்
அரசனுக்கழகு குடிமக்கள்
வருந்தாமல் காத்தல்”
9.ஏலாதி
·
ஏலம்,இலவங்கம்,நாககேசரம்,சுக்கு,மிளகு,திப்பிலி
ஆகிய 6 மருந்துப்பொருட்கள் கலவை.
·
இந்நூல் 4 அடியில் 6 அறக்கருத்துகளை கூறுகிறது.
·
இந்நூல் சிறப்பாயிரம்(முன்னுரை),தற்சிறப்பாயிரம்(முடிவுரை)
உட்பட 81 வெண்பாக்களை உடையது.
·
இந்நூலின் நற்கருத்து கற்பவரின் அறியாமையை
விலக்கும்.
·
இது தமிழருக்கு அருமருந்து போன்ற இலக்கியம்.
·
பழி இல்லா மன்னன் நூல்கள் போற்றும்படி வாழ்வான்
என இந்நூல் கூறுகிறது.
·
இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார் சமண சமயம்
சார்ந்தவர்.
திருக்குறள்,முதுமொழிக்காஞ்சி, மற்றும் பிற
நூல்கள் அடுத்தப்பதிவில்.
Could you please suggest any general knowledge books for tnpsc group 1 main exam paper 3
ReplyDeleteமிக்க நன்று
ReplyDeleteமிக நல்ல பதிவு.. நன்றி.
ReplyDelete