TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - பாரதிதாசன்

·         பாரதிதாசன் 29-04-1891 ல் புதுவையில் பிறந்தார் .
·         இயற்பெயர் கனகசுப்புத்தினம் ; பெற்றோர் – கனகசபை , இலக்குமி அம்மாள் .
·         பாரதிதாசன் தன் 16-வது வயதில் புதுவை கால்வே கல்லூரி (அ) அரசினர் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார் . இதற்கு முன்னர் நிரவி அரசு பள்ளியில் பணியாற்றினார் .
·         தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிஞன் வேரில்லாத மரம் , கூடில்லாத பறவை என்று பாடிய ரஷ்யநாட்டுக் கவிஞர் இரசூல் கம்சதேவ் போலவே பாரதிதாசனும் விளங்குகிறார் .
·         பாரதியார் மீது கொண்ட பற்றின் காரணமாக , தம் பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார் .
·         பாரதிதாசன் இளம்வயதிலேயே பிரெஞ்ச் , தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார் .
·         புதுவையில் வெளியான ஏடுகளில் கிறுக்கன் , கிண்டல்காரன் , பாரதிதாசன் எனப் பல புனைப்பெயர்களில் இவர் எழுதிவந்தார் .
·         இயற்கையை வர்ணித்துப் பாடுவதில் இணையற்ற கவிஞர் – பாரதிதாசன் .
·         தன்நண்பர்கள் முன்னால் பாடு என பாரதியார் கூற ,
‘எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா’ என்று பாடினார் .
இந்த பாடலை , பாரதியார் , ஶ்ரீசுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனகசுப்புரத்தினம் பாடியது எனக் குறிப்பிட்டு , சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பி வைத்தார் .
·         பாரதிதாசனை பின்தொடர்ந்த கவிஞர்கள் தங்களைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என அழைத்துக்கொண்டனர் . உதாரணம் – வாணிதாசன் , முடியரசன் ,  சுரதா, கம்பதாசன் .
·         பிற்காலத்தில் சிறகடித்த வானம்பாடிகளுக்கு எல்லாம் முதலெழுத்தும் , தலையெழுத்தும் பாரதிதாசனே ஆவார் .
·         குடும்பக் கட்டுப்பாடு பற்றி , இந்தியாவிலேயே முதன்முதலாக பாட்டு எழுதிய பெருமை பாரதிதாசனையே சாரும் .
·         பாரதிதாசன் 1929 –ம் ஆண்டு குடியரசு , பகுத்தறிவு போன்ற பெரியாரின்  ஏடுகளில் பாடல் , கட்டுரை எழுத ஆரம்பித்தார் .
·         பாரதிதாசன் 1931-ல் புதுவை முரசு என்ற ஏட்டினை ஆரம்பித்தார் .
·         பாரதிதாசன் குயில் என்ற இலக்கிய இதழை நடத்திவந்தார் .
·         1938 – ல் பாரதிதாசனின் முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தது .
·         செக் மொழியில் பாரதிதாசன் பாடல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
·         பாரதிதாசன் 1946 , ஜூன் 29 ல் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார் . ( விழாத்தலைமை – சோமசுந்தர பாரதியார் )
·         பாரதிதாசன் 1954- ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் .

பாரதிதாசன் சிறப்புப்பெயர்

1. பாவேந்தர் , 2. புரட்சிக்கவி (அழைத்தவர் - அண்ணா) , 3. புதுமைக்கவிஞர் , 4. பகுத்தறிவுக்கவிஞர் , 5. இயற்கைக் கவிஞர் , 6. புதுவைக்குயில் ,          7. தமிழ்நாட்டின் ரசூல் கம்சதேவ் , 8. பூங்காட்டுத்தும்பி ( அழைத்தவர் - வாணிதாசன்) .

பாரதிதாசன் மறைவு

·         21-04-1964 ல் இயற்கை எய்தினார் .(இடம் – அரசு மருத்துவமனை , சென்னை)
·         தமிழ்நாடு அரசு 1990-ல் பாரதிதாசன் படைப்புகளை நாட்டுடமையாக்கியது .

பாரதிதாசன் எழுதிய நூல்கள் 

·         பாண்டியன் பரிசு , எதிர்பாராத முத்தம் , சேரதாண்டவம் , சஞ்சீவ பருவதத்தின் சாரல் , இளைஞர் இலக்கியம் , வீரத்தாய் , நல்லதீர்ப்பு , தமிழச்சியின் கத்தி , சௌமியன் , குறிஞ்சித்திரட்டு .
·         காதல் நினைவுகள் , காதலா ? கடமையா ? , இரணியன் , இசையமுது , மணிமேகலை வெண்பா , கண்ணகி புரட்சிக் காப்பியம் , படித்த பெண்கள் , தமிழியக்கம் .
·         பிசிராந்தையார் – சாகித்திய அகாதமி பெற்ற நாடகம் .
·         குடும்ப விளக்கு – கற்ற பெண்ணின் சிறப்பு .
·         இருண்ட வீடு – நகைச்சுவை நூல் .
·         அழகின் சிரிப்பு – இயற்கை .

பாரதிதாசன் புகழுரை

·         மன்னவருக்கு மன்னன் மகாகவிஞன் பேரறிஞன் தன்னெறி இல்லாத தமிழ்
-    கண்ணதாசன்
·         அவர்தம் பாடல்களை படிக்கின்ற அந்நியனும் தமிழனாகிவிடுவான்
-    சிதம்பரச்செட்டியார்
·         பாரதிக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு உண்மையான கவி
-    கு.ப.ராசகோபாலன்.
·         அறிவுக்கோயிலைக்கட்டி , அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞன்.
-    புதுமைப்பித்தன்

பாரதிதாசன் கவிதைவரிகள்


இன்பத்தமிழ் கல்வி யாவரும் கற்றவர்
என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
(புதுவை அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல்)
எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
இனமீன்ற தமிழ்நாடு தமக்கும் என்னால்
திணையளவு நலமேனும் கிடைக்குமென்றால்
செத்தொழியும் நாள் எனக்குத் திருநாளே !
இனிமைத்தமிழ் எமது – எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்தாள் நல்லமுது .
எளியநடையில் தமிழ்நூல்கள் எழுதிடவும் வேண்டும்
இலக்கணநூல் புதிதாக இயற்றுதல் வேண்டும் .
தமிழெங்கள் பிறவிக்குத் தாய் .
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் .
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே !
தமிழே நீ ஒரு பூக்காடு நானோர் தும்பி
எல்லோருக்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நகர்கிற திந்தவையம்
கொலை வாளினை எடடா – மிகு
கொடியோர் செயல் அறவே
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்
முதல் அமைச்சராய் வரவேண்டும் .
தமிழுக்கு அமுதென்று பேர்
உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே
ஏழ்மையினால் ஒரு தமிழன் படிப்பில்லையென்றால்
இங்குள்ள அனைவரும் நானிடவும் வேண்டும்
தமிழின் விந்தையை எழுத தரமோ !
உள்ளே தொட்டால் உசிரில் இணைக்கும் தெள்ளு தமிழ்
தமிழென்று தோல்தட்டி ஆடு – நல்ல
தமிழ்வெல்க வென்று தினம்பாடு
செந்தமிழ் நடுந்தேனே செயலினை
மூச்சினை உனக்கு அளித்தேனே !
தமிழைப் பழித்தவனைத் தாய்த்தடுத்தாலும் விடாதே
நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்
இருட்டறையில் உள்ளதடா உலகம்
புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடுசாய்ப்போம் .
பொதுவுடைமைக் கொள்கையை திசையெங்கும் சேர்ப்போம் .
மதம் , மனிதனின் மாற்றுச்சட்டை
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே !
பாரடா உன் மானிட சமூகத்தை
கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள்
பெண்களுக்கு கல்வி வேண்டும் – குடித்தனம் பேணுதற்கே !
அகரமுதலி ஒன்றை நாளும் படித்துவருவாய்
நிகரில்லாத சொற்கள் நினைவில் பெறுவாய்
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே !
தமிழே ஆதி தாயே வாழ்க
மானிட சமுத்திரம் நாளொன்றுக்கு
பிரிவில்லை எங்கும் பேதமில்லை
சாவிலும் தமிழ்ப்படித்து சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும் .
Share:

3 comments:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *