TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label ஆலோசனைகள். Show all posts
Showing posts with label ஆலோசனைகள். Show all posts

TNPSC தேர்வுகளில் , ஜெயிக்கலாம் வாங்க - 3

வணக்கம் நண்பர்களே !!

நம் நண்பர்களின் படிப்பு வெறி எந்தளவிற்கு இருக்கிறது என்பது , என் கடைசி இரண்டு பதிவில்தான் தெரிந்துகொண்டேன் . என் ப்ளாக்கரே , ஸ்தம்பிக்கும் அளவிற்கு படித்துக்கொண்டிருக்கிறார்கள் . இதே வேகத்தை TNPSC பாடங்களை படிப்பதிலும் காட்டினால் , மிகமகிழ்ச்சியடைவேன் . ஏனோ வந்தோம் , இவனின் அறிவுரைகளை கேட்டோம் , சென்றோம் என இருந்துவிடாமல் , உங்களின் ஆலோசனைகளையும் கமெண்ட்டிவிட்டு செல்லுங்கள் . முதலிரண்டு பாகங்களை படிக்காதவர்கள் கீழே கிளிக்கி படித்துவிட்டு , தொடரவும் .

TNPSC தேர்வில் , ஜெயிக்கலாம் வாங்க - 1

TNPSC தேர்வில் , ஜெயிக்கலாம் வாங்க - 2



3. கணிதத்தை கரெக்ட் பண்ண சிலவழிகள்


தேர்வுக்கு படிப்பவர்களை , கன்னத்தில் கைவைத்து கடுப்பாக்குவது , பெரும்பாலும் கணிதமே ! விஜய் படங்களைப்போல் வருமா வராதா என்று நம்மை எண்ணவைத்து , மார்க்கை எண்ணிப்பார்க்கும்போது குறைத்துவிடும் . அப்படிப்பட்ட கடின கணிதத்தை ஒருகை பார்க்க சிலவழிகளை சொல்கிறேன் , முயற்சித்துப்பாருங்கள் .

1.   கணக்கு சத்தியமா எனக்கு வரமாட்டேங்குதுங்க

2.   நோட்ஸ் எதாச்சும் இருந்தா ரெபர் பண்ணுங்க .

3.   ஈஸியா கணக்கு போட ஏதாச்சும் வழிமுறை இருக்கா ?

4.   எப்படி படிக்கறதுனே புரியல . புக்க பார்த்தாலே தூக்கம் தூக்கமா வருது .

5.   கணக்க தவிற மத்த சப்ஜெக்ட் , எனக்கு ஓ.கே ங்க



இதுதான் உங்களில் பெரும்பாலானோர் என்முன் வைக்கும் கருத்து . கேள்விகளுக்கு , ஒவ்வொன்றாக பதிலளிக்கிறேன் .

1.   கணக்கு ஒரு சப்ஜெக்ட் . அது எப்போதும் நம்மைச்சுற்றி, எல்லாவழியிலும் நிறைந்திருக்கும் .நீங்கள் ஐடி துறையில் சிஸ்டம் அனலிஸ்டாக வேலை செய்திருந்தாலும் , ப்ரோகிராமினூடே , கணக்கு கண்டிப்பாக வரும் . தமிழ் ஆசிரியர் எனில் , ஒவ்வொரு இலக்கியத்திலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ,  இலக்கணத்தில் உள்ள அணிகளின் எண்ணிக்கை என அதிலும் கணிதம் நிறைந்திருக்கும் . நீங்கள் வெறும் பத்தாம் வகுப்புதான் படித்திருக்கிறீர்கள் என்றாலும் , உங்களின் குடும்பச்செலவினைப்பற்றிய அடிப்படை கணிதமாவது நீங்கள் அறிந்துதான் வைத்திருப்பீர்கள் .வட்டிக்கு பணம் வாங்கும்போது , மாதவட்டி சதவீதத்தை வைத்தே . எவ்வளவு வட்டி என்று கண்டுபிடிக்க முடிகின்ற உங்களால் , சாதாரணமான தனிவட்டி கணிதத்தை கண்டுபிடிக்க முடியாதா ? அப்படி முடியாதென்றால் எதனால் நம்மால் முடியவில்லை என்று யோசித்துள்ளீர்களா ? ரொம்ப சிம்பிள் . வாழ்க்கையில் நாம் உபயோகப்படுத்தும் கணிதத்திற்கு , நாம் ஏற்கனவே பயிற்சி எடுத்துள்ளோம் , நம்மையும் அறியாமல் . அது தொடர்ந்து தொடர்ந்து செய்யப்படும்போது , தானாகவே நமக்குள் அது இடம்கொள்கிறது . இதே மெத்தேட் தான் இங்கும் .தொடர்பயிற்சியின் மூலம் , கணக்கை , ஈஸியாக சமாளித்துவிடலாம் . எனவே , தொடர்பயிற்சியனை மேற்கொண்டால் , எதுவும் சாத்தியமே !!!


2.   கணிதம் படிக்க நோட்ஸ் கேட்பவர்கள் யாரும் பாஸ் செய்வது கடினம் . கையில் நெய்யை வைத்துக்கொண்டு , வெண்ணையை தேடி அலைபவர்களுக்கு சிறந்த உதாரணம் நீங்கள்தான் .அழகாக சமச்சீர் புத்தகங்களை எடுத்து கணக்குகளுக்கு பயிற்சி செய்தாலே பாஸ் ஆகிவிடலாம் . ஒருசில மனோதத்துவ கணக்குகள் மற்றும் புதிர்கணக்குகளை மட்டும் நம் தளத்திலேயே வெளியிட்டுவிடுகிறேன் . மிஞ்சி மிஞ்சிபோனால் அத்தகைய கணக்குகள் 4 – 7 வரை தான் வரும் .மிச்சமிருக்கும் அத்தனை கணக்குகளும் , புத்தகத்தின் மாதிரியிலிருந்துதான் எடுக்கப்படும் . எனவே, சிலபஸ்ஸில் காணப்படும் தலைப்புகளை உள்ளடக்கிய கணக்குகளை பயிற்சியெடுக்க ஆரம்பியுங்கள் . அதுவே எளிமையான , சிறந்த வழி . (புத்தகத்தில் ஒரு சில பயிற்சி கணக்குகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் தவறாக இருக்கும் . அதையும் கவனத்தில் கொள்க) .


3.   கணக்கு என்றாலே ஈஸி தான் . மனதிலிருந்து கடினம் என்ற வார்த்தையை தூக்கிப்போடுங்கள் . அது ஒரு சப்பை மேட்டர் என்று மனதின் உள் நிறுத்துங்கள் . ஒரு மொக்கைக்கதை சொல்கிறேன் , கேளுங்கள் . என்னுடைய பத்தாம் வகுப்பு வரை , கணிதத்தில் என்னுடைய மதிப்பெண் மிஞ்சி மிஞ்சி போனால் 50 வரும் . 10ஆம் வகுப்பு முதல் இடைத்தேர்வில் 45 மதிப்பெண் . காலாண்டு தேர்வில் 36 தான் . செம காண்டாகி , இது என்னடா பெரிய கணக்கு என்று இரண்டு இரவுகள் விடாமல் , ஒரு நோட்டை எடுத்துவைத்து இருக்கும் அத்தனை பார்முலாவையும் முதலில் மனப்பாடம் செய்தேன் . அடுத்து எ.கா கணக்குகள் அனைத்தையும் போட்டு பார்க்க ஆரம்பித்தேன் . பின் பயிற்சி கணக்குகள் . நம்பினால் நம்புங்கள் , இரண்டு இரவில் எனது கணிதப்புத்தகத்தில் உள்ள அனைத்து கணக்குகளுக்கும் , ஆசிரியர் நடத்தும்முன்பே போட்டுமுடித்துவிட்டேன் . அதன்பின் ஹாட்ரிக் சென்டம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை .( பைனல் தேர்வில் 99 தான் ) . கணக்கில் தண்டமாக இருந்த நானே சென்டம் வாங்கும்போது , உங்களால் முடியாதா என்ன ? இதற்காக நான் செய்த காரியம் , முதலில் என் மனதில் இருந்த கணிதம் பற்றிய தவறான புரிதலை நீக்கியது.  அடுத்தது , முழு முயற்சியுடன் , வெறிகொண்டு பயிற்சியெடுத்தது . கணக்கை யாரும் படிக்க முயற்சிக்காதிர்கள் . அதனால் , நேரம்தான் விரயம் ஆகும் . ஒரு நோட் கொண்டு பயிற்சியெடுங்கள் . அதுவே போதும் . தெருநாய்க்கு உதவினால் , மனிதாபிமானம் , அதே கணக்கிற்கு உதவினால் , கணிதாபிமானம் .


4.   மேலே சொன்னதுதான் , 4வது கேள்விக்கும் விடை .எக்காரணத்தைக்கொண்டும் கணக்கை , போகிறபோக்கில் தெருநாய் அடிபட்டு கிடப்பதை பார்க்கும் பார்வையில் பார்த்துவிட்டு செல்லாதீர்கள் . அதே தெருநாயை , ஹாஸ்பெடலுக்கு தூக்கிச்சென்று , கட்டுப்போட்டு அனுப்ப முயற்சி செய்வதுபோல் , கணக்கை போட்டு பார்க்க முயற்சியுங்கள் .


5.   இந்த கேள்விக்கு எனது பதில் இதுதான் .எக்காலத்திலும் கணக்கை விட்டுவிட்டு மற்ற சப்ஜெக்ட்களை படித்து பாஸ் செய்தவர்களை நான் இதுவரை பார்த்ததில்லை .அவர்கள் அப்படி பாஸ் செய்திருந்தாலும் , தெரிந்தோ தெரியாமலோ , கணக்கு பாடம் குருட்டாம்போக்கில் உதவியிருக்கவேண்டும் . 20 மதிப்பெண்களை விட்டுவிட்டு  , வேறெதில் மார்க் வாங்கமுடியும் ? தமிழில் என்னதான் முக்கினாலும் 100 க்கு 90ஐ தாண்டாது . கணக்கு தவிர மற்ற கடின சப்ஜெக்ட்கள் எனப்பார்த்தால் , தாவரவியல் , இந்திய சட்டம் , வணிகவியல் மற்றும் பொருளாதாரம் . இவற்றில் இருந்து வரும் கேள்விகளில் தான் பெரும்பாலோனர் மார்க்கை கோட்டை விடுகிறார்கள் . இதிலிருந்து வரும் 60க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு , நாம் முக்கி விடையளித்தாலும் 40 , தாண்டாது . நடப்பு நிகழ்வுகள் 20 மதிப்பெண்கள் என்றாலும் 15 தான் தொடமுடியும் . எப்படி பார்த்தாலும் 145 – 150 மதிப்பெண்களைத்தான் எடுக்க முடியும் . இதைக்கொண்டு எப்படி வேலை கிடைக்கும் ? எனவே , தயவு செய்து கணக்கை தவிக்கவிட்டு , நீங்களும் ரிசல்ட் சமயத்தில் தவிக்காதிர்கள் .



இதுதவிர , வேறுமுறைகள் வேண்டுமெனில் தரமான நோட்ஸ்களை படிக்கலாம் . அதுகுறித்து , கணிதமேதையும் என் நண்பருமான திரு சக்தியை தொடர்புகொள்ளுங்கள் .  அவருடைய ப்ளாக் ஐடி மற்றும் அவரின் ஈ-மெயில் முகவரி , கீழே கொடுக்கிறேன் . (அவரு முழாண்டுத்தேர்வுல சென்டம் அடிச்சவரு . M.Sc , B.Ed படிச்ச கணித ஆசிரியரும் கூட .)

ஈ - மெயில் முகவரி - sakthe888@gmail.com


ப்ளாக்கர் ஐடி - http://sakthe888.blogspot.in/




எனது ப்ளாக்கில் , என்னால் முடிந்தவரை கணிதப்பதிவுகளை வழங்கி வருகறேன். அதில் ஏற்படும் சந்தேகங்களை என்னிடம் கமெண்டினால் மட்டுமே , என்னால் உதவ முடியும் . தொடர்ந்து எழுத முயற்சித்தாலும் , நேரமின்மை வாட்டுவதால் எழுத முடியவில்லை . கணிதம் பற்றிய பதிவுகளை , இனி தான் தொடர்வதாக , நண்பர் திரு. சக்தி என்னிடம் கூறியுள்ளார் . போகிற போக்கில் , அவருக்கு ஒரு மெயில் தட்டுங்கள் . கண்டிப்பாக உதவுவார் .

இந்த பதிவில் ஏதேனும் சந்தேகங்கள் , குறைகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் . என்னுடைய பதிவில் நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருக்கலாம்ம. அதையும் சுட்டிக்காட்டுங்கள் . போகிற போக்கில் , உங்களுடைய ஆலோசனைகளையும் கூறிவிட்டு செல்லுங்கள் . இப்போதெல்லாம் , சாதாரண திரைப்படங்களை பற்றியே சூப்பர் , அருமை , சமார்னு கமெண்டினால் மாத்திரமே தெரிகிறது . மேலும் , ஏதேனும் கேள்விகள் , இப்பதிவில் விடப்பட்டிருந்தால் , கமெண்டில் தெரிவியுங்கள் . அதற்கும் விடையளித்துவிட்டு செல்கிறேன் . அப்படியே , Google -ன் வழியே என்னை ஃபாலோ செய்துவிட்டு செல்லுங்கள் . பதிவுகளை உடனுக்குடன் படிக்கவும் , என்னை தொடர்புகொள்ளவும் , எளிதாக இருக்கும் .

இப்போதான் பார்த்தேன் . இது என்னுடைய 100 - வது பதிவு !!! (சும்மா ஒரு விளம்பரம்தான்)

அன்புடன்

**** மெக்னேஷ் திருமுருகன்





Share:

TNPSC தேர்வுகளில் , ஜெயிக்கலாம் வாங்க - 1





வணக்கம் நண்பர்களே !!!


TNPSC தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை நம்முள் பலருக்கு இருக்கும் . காரணம் , இன்றைய சூழ்நிலை அப்படி .என்னதான் முட்டிமோதி கல்லூரியில் படித்தாலும் , வேலை என்று ஒன்று கிடைப்பது பெரும்பாடாகவே உள்ளது . அதையும் தாண்டி கிடைக்கும் வேலையை செய்ய நம் மனம் ஒப்பிவில்லையாயினும் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் . என் நண்பர்களுல் பலர் என்ஜினியரிங் முடித்துவிட்டு , ஒரு ITI மாணவன் செய்யும் வேலைக்கு விண்ணப்பித்து , 4000 , 5000 சம்பளத்துடன் வேலைக்கு செல்கிறார்கள் . MCA / MBA முடித்தவர்களின் நிலையோ அதைவிடக்கேவலம் . வேறுவழியே இல்லாமல் , மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்து , மார்க்கெட்டில் கூவி விற்பதுபோல பொருள்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் .

அத்தகைய நிலையில் இருக்கும் நண்பர்கள் , TNPSC தேர்வில் படித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கிறார்கள் . இன்னும் வேலை கிடைக்காமல் , வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் படிக்கலாமே என்ற எண்ணம் கொண்டவர்கள் , இல்லத்தரசிகள் என்று பலரின் சிந்தனை TNPSC-ன் பக்கமே உள்ளது . அத்தகைய TNPSC தேர்வில் வெற்றிபெற , என்னால் முடிந்த சில ஆலோசனைகளை வழங்குகிறேன் .

1 . அரசுவேலைதான் உங்களுக்குவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருங்கள் . அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு இஷ்டத்துடன் படிக்க ஆரம்பியுங்கள் .

2. சோம்பேறித்தனத்தை ஒழித்து மூட்டைக்கட்டுங்கள் . வேலை கிடைத்தபின் , எப்படியும் தானாக அந்த சோம்பேறித்தனத்தை அனுபவித்துக்கொள்ளலாம் . நாளை படிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் , எக்காலத்திலும் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதை மனதில் நிறுத்தி வையுங்கள் .

3. நேரத்தை வீணடிக்காதிர்கள் . உங்களுல் பலர் , குடும்பச்சூழ்நிலையின் காரணமாக , பல்வேறு இடங்களில் வேலை செய்துகொண்டிருப்பீர்கள் .உங்களுக்கு கிடைப்பது மிச்சில மணிநேரங்களாக இருக்கும் . அதை முடிந்தவரை வீணாக்காமல் , படிக்க ஆரம்பியுங்கள் . குடும்பம் முக்கியம்தான் . ஆனால் , அக்குடும்பத்தை காப்பாற்ற , நிலையான கௌளரவமான வேலை தேவை என்பதை மனதில்பதியவைத்துக்கொள்ளுங்கள் .

4. எந்நேரத்திலும் ,எப்படிப்பட்ட மனநிலையிலும் உங்களின் முடிவில் இருந்து மாற்றிக்கொள்ளாதிர்கள் . ஒருமுறை முயற்சித்தேன் , இரண்டுமுறை முயற்சித்தேன் , எழுதிய தேர்வுகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்துவிட்டது என்று மனதை விட்டுவிடாதிர்கள் . தேர்வில் வெற்றிபெறுவதற்கும் ஒரு நேரம் அமையவேண்டும். அந்த பொன்னான நேரத்திற்காக காத்திருப்பதில் எவ்வித குற்றமுமில்லை .

5. உங்களின் நண்பன் , மனைவி ,கணவன் , குழந்தை , பெற்றோர் , உறவினர் என்று யார் என்ன சொன்னாலும்  , முயற்சிப்பதை விட்டுவிடாதிர்கள் . இன்று வசைபாடுபவர்கள் , நாளை உங்களுக்கு வேலை கிடைத்ததும் , பல்லிளித்துக்கொண்டு நிற்பார்கள் . மு்ககியமாக , நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எகத்தாள பேச்சுகளை காதிலே ஏற்றிக்கொள்ளாதீர்கள் .

6. படிப்பதை , குருட்டு மனப்பாடம் செய்வதெல்லாம் கல்லூரி வரை வேண்டுமானால் பயணளிக்கலாம் . ஆனால் , TNPSC தேர்வுகளில் குருட்டு மனப்பாடம் என்பது , தன் கண்ணையே குருடாக்கிக்கொள்வது போன்றதுதான் . எனவே , முடிந்த வரை புரிந்து படிக்க முயற்சியுங்கள் . (மண்டையில் ஏறமாட்டேங்குதுங்கனு சொல்றவங்க மனப்பாடம் பன்னிடுங்க . ஒரு சில டைம் , அது கை கொடுக்கும் )


7. நாம் என்ன படிக்கவேண்டும் என்பதே தெரியாமல் , 6 முதல் 12 வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டும் என்ற நினைப்பில் படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் , 6க்கு அடுத்து 7 ஆம் வகுப்பு புத்தகங்களைக்கூட உங்களால் படிக்க முடியாது . தேர்வுக்கான அறிவிப்பு வரும்போது , சிலபஸ் வெளியிடுவார்கள்  . அதில் , என்னென்ன பாடங்கள் படிக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள் .அந்த CHAPTER-களை மட்டும் படித்தால் போதும் . இல்லையேல் ‘வீழலுக்கு இறைத்த நீராகி விடும் ’

8. படிக்கமுடியவில்லை  , வீட்டில் பிரச்சினை , கணக்கு கடினம் , எதை படிப்பது , எப்படி படிப்பது என்ற கேள்விகளால் மனம் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளும் . இந்த பதிவின் இறுதியில் , தமிழ் பாடங்களை எப்படி படிக்கலாம் என்பதை , என் அனுபவத்திலிருந்து தெரிவிக்கிறேன் . அதன்படி முயற்சி செய்துபாருங்கள் .

9. மணமாகாத தோழர் மற்றும் தோழிகளுக்கு ,

மனது அலைபாய்கிறது , காதல் பிரச்சினை , குடும்ப சூழ்நிலை , நண்பர்களிடையே பிரச்சினை என்பதெல்லாம் , நாம் படிக்கும் போது கண்டிப்பாக நம் மனதை அலைபாய வைத்துவிடும் .தேர்வில் வெற்றிபெறும்வரை காதல்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டரும் , நண்பர்களுக்கு மெமோவும் கொடுத்துவிடுங்கள் . குடும்ப பிரச்சினைகளை மனதில் இருந்து ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள் . இதைச்செய்தால் , உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் காத்திருக்கும் .


10  உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குழுவா்கப்படிக்கும்போது , அவன் இதைப்படித்துவிட்டாயா ? அதைப்படித்துவிட்டாயா என்று கேள்வி கேட்டால் , அவனை உங்கள் லிஸ்டில் இருந்து தூக்கிவிடுங்கள் . நாம் படிப்பதையும் கெடுத்து , நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார்கள்


சரி !!! தமிழ்பாடத்தை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் . மேலே கூறியவற்றை சரியானபடி பின்பற்ற முடியும் என்பவர்கள் , கீழே தொடர்ந்து படிக்கலாம் . இல்லையேல் ‘ஒன் ஸ்டெப் பேக் மேன்’ தான் .

தமிழ்ப்பாடங்களை படிக்கும் முறை


·          6- 12 வரை உள்ள மனப்பாட திருக்குறள்களை  தினம் இரண்டு என்ற வீதம் இப்போதிலிருந்து (இந்த பதிவின் தேதியிலிருந்து) படியுங்கள் . ஒவ்வொரு குறளின் விளக்கமும் , அர்த்தமும் புரிந்து கொண்டு படியுங்கள் . காலையில் படிக்கும் குறள்களை , மாலையில் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள் .

·         வாரம் இரு செய்யுள் பாடல்களை (எ.கா , சிலப்பதிகாரம் , மணிமேகலை , புறநானுறு ETC) மனப்பாடம் செய்யுங்கள் . காப்பியங்கள் வருகின்றன எனில் , பாடப்பகுதியில் இடம்பெற்ற கதையையும் , கதை நிகழும் விவரத்தையும் , கண்டிப்பாக சேர்த்து மனப்பாடம் செய்துகொள்ளுங்கள் . இதையும் இருவேளையும் படிக்கவேண்டும்


·         அடுத்து , செய்யுளில் உள்ள நூல்களின் பெருமைகள் மற்றும் நூலாசிரியரின் சிறப்புகளையும் சேர்த்து செய்யுள் மனப்பாடம் செய்யும்போதே படித்துக்கொள்ளுங்கள் .

·         முதலில் 6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தொடங்கி வரிசையாக படியுங்கள் .



·         மிச்சம் உள்ள 5 நாட்களில் , தினம் ஒரு உரைநடைப்பாடம் என்ற கணக்கில் படியுங்கள் . ஒரு பாடம் படித்தாலும் , தெளிவாக படிக்கவும்


இவையனைத்துமே மாத்திரை சாப்பிடுவது போல் , தினமும் காலை ஒருவேளையும் , மாலை ஒருவேளையுமாய்  படிக்கவேண்டும்  . இவ்வாறு படிக்கும்போது , குழப்பங்கள் , சந்தேகங்கள் போன்றவை இருக்காது .

இதில் இலக்கியம் மற்றும் உரைநடையைப்பார்த்தோம் . அடுத்தபதிவில் , இலக்கணம் எவ்வாறு படிப்பது என்பதனை பார்க்கலாம் .


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .

 இப்போது சிலநாள்களாக , என்னுடைய மற்றொரு தளமான விமர்சன உலகம் தளத்தில் , சிறுகதை , தொடர்கதை , சினிமா விமர்சனம் போன்றவைகளை எழுதுவதில் பிஸியாக இருந்ததால் , முன்போல் பதிவிடமுடியவில்லை . இனிவரும் காலங்களில் , தினம் ஒரு பதிவு என்று வெளியிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் . தொடர்ந்து ஆதரவளித்துவரும்  நண்பர்களுக்கு நன்றியுடன் 


----மெக்னேஷ் திருமுருகன்




இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்துங்கள்


தொடர்புடைய பதிவுகள்




Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *