TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

" இல்லம் தேடிக் கல்வி ” திட்டத்திற்காக மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படவுள்ள ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :

 கொரோனா பெருந்தோற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1.5 மணிநேரம் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் ) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " எனும் திட்டத்தை அரசு அறிவித்துள்ளார். 

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக திறமை , அற்பணிப்பு , ஆர்வம் , சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம் , பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளைப் பெற்ற , 5 ஆசிரியர்கள் மாவட்ட அளவிலும் மற்றும் 2 ஆசிரியர்கள் ஒன்றிய அளவிலும் ( Exclusively for this purpose with rich experience in community mobilization ) பிரத்யேகமாக மாவட்டக் குழுவினால் அடையாளம் காணப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலரால் முழுநேரம் இப்பணிக்காக மட்டுமே நியமிக்க வேண்டும். இப்பணிக்கென பிரத்யேகமாக ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். 


" இல்லம் தேடிக் கல்வி ” திட்டத்திற்காக மாவட்ட அளவில் முழுநேரமாக செயல்படவுள்ள 5 ஆசிரியர்கள் மற்றும் ஒவ்வொரு ஒன்றிய அளவில் செயல்படவுள்ள 2 ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி நடைமுறைபடுத்த அறிவுத்த வேண்டும்.


இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் , அனைத்து விதமான திட்டமிடும் பணிகளில் பங்கெடுக்க வேண்டும் . இல்லம் தேடிக் கல்வி மாவட்ட கலைப்பயணக் குழுவுடன் பயணித்து , கலை நிகழ்ச்சியின் போது இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப் பதிவிடும் செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.


மாவட்ட அளவில் நடைபெறும் கலைக்குழு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு , வழித்தட ( Route Chart ) மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு புணிகளில் ஈடுபடுதல் வேண்டும் . மேலும் கலைக்குழுவினருக்கு தேவையான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.


பள்ளிகளில் கலை நிகழ்ச்சி நடைபெறும் போது , தலைமை ஆசிரியர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் உரையாடி இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கிராமங்களில் சீரிய முறையில் செயல்பட களத்தைத் தயாரிக்க வேண்டும்.


பதிவு செய்த தன்னார்வலர்களிடம் , அவர்கள் ஏற்றுள்ள பணி எந்த அளவிற்கு சமூக முக்கியத்துவம் நிறைந்தது என்பதை உணர்த்த வேண்டும் . ஒவ்வொரு நாளும் இல்லம் தேடிக் கல்விச் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்து அதனை ஆவணப்படுத்த வேண்டும்.


மாவட்ட அளவில் ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள் ஆகியோருக்கான பயிற்சியின் போது பங்கேற்க வேண்டும்.


ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் , ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படும் போது உடனிருந்து வழிகாட்ட வேண்டும்.


 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முறையாக அமைப்பதற்கும் , இத்திட்டத்திற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் அந்தந்த சார்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் / பள்ளி மேலாண்மைக் குழு மூலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழிக்காட்டுதலை மேற்கொள்ள வேண்டும்.


 இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படத் தொடங்கிய பின் , அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு , கற்கும் குழந்தைகளையும் தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும் . மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும்.


ஒன்றிய அளவில் பணிகளை சிறப்பாகச் செயல்பட வைத்து , அவற்றைத் தொகுக்கும் பணியை ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகிய 2 ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவில் பணியை சிறப்பாகச் செயல்பட வைத்து , அவற்றைத் தொகுக்கும் பணியை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகிய 5 ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும்.


 மேலும் , மாவட்டங்களில் நிகழும் அனைத்து நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மாவட்ட தகவல் மற்றும் ஆவணக்காப்பு ( MDO ) ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதல் வேண்டும்.


மாவட்ட அளவில் 5 ஆசிரியர்கள் , ஒவ்வொரு ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கிராமங்கள்- ஒன்றியங்கள் - மாவட்டம் ஆகியவற்றை வலுவாக இணைக்கும் மக்கள் பாலமாக இருக்க வேண்டும். மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் இத்திட்டத்தில் செயல்படவிருக்கும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகளையும் குறைகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட திட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஏதுவான செயல்கள் மேற்கொள்ள வேண்டும் . மேற்காண் வழிமுறைகளை மாவட்டங்களில் தவறாது பின்பற்றுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.





Share:

SBI வங்கியில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் அறிவிப்பு - வீட்டுக்கடன் பெற தேவையான ஆவணங்கள் – முழு விபரம்!

 

பாரத் ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையார்களுக்கு குறைந்த வேட்டியில் வீட்டுக்கடன் வழங்கி வருகிறது. அதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


வீட்டுக்கடன்:


இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகளின் சேவைக் கட்டணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அறிவிப்பினை தொடர்ந்து வங்கிகளும் தங்களது வங்கியின் நிர்வாக சேவைக் கட்டணங்களை மாற்றி அமைத்து அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி செப்டம்பர் 16ம் தேதி முதல் 6.70% என்ற புதிய வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகிறது. பாரத் ஸ்டேட் வங்கியில் வீட்டுக்கடன் பெறுபவர்கள் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.


ஆவணங்கள்:


தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் அடையாள அட்டை, முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட வீட்டுக்கடன் படிவம், மூன்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் .

பான், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை

வீட்டு முகவரி ஆவணம் / சமீபத்தில் நீங்கள் மின்சார கட்டணம் கட்டிய ரசீது, டெலிபோன் பில், தண்ணீர் வரி கட்டிய ரசீது, பாஸ்போர்ட் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், ஓட்டுநர் உரிமம் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று.

வீடு கட்டும் இடம் தொடர்பான ஆவணங்கள்

கட்டுமானத்திற்கான அனுமதி:


விற்பனைக்கு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தம் ( மகாராஷ்ட்ராவில் மட்டும்) ஆக்குபன்சி சான்றிதழ்

பராமரிப்பு பில், மின்சார கட்டணம், சொத்து வரி ரசீது

அங்கீகரிக்கப்பட்ட திட்ட நகல் ற்றும் பில்டரின் பதிவு செய்யப்பட்ட வளர்ச்சி ஒப்பந்தம்

பில்டர் அல்லது விற்பனையாளருக்கு செய்யப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் காட்டும் கட்டண ரசீதுகள் அல்லது வங்கி கணக்கு அறிக்கை

வங்கிக் கணக்கு தொடர்பான ஆவணங்கள்

கடந்த ஆறு மாதங்களுக்கான பேங்க் அக்கௌண்ட் ஸ்டேட்மெண்ட்

இதற்கு முன்பு வேறெந்த வங்கிகளும் கடன் வாங்கியிருந்தால் அந்த கடன் தொடர்பான கணக்கு மற்றும் விபரங்கள்


வருமான ஆதாரம்:


மூன்று மாதங்களுக்கான மாத சம்பள சான்றிதழ்

கடந்த இரண்டு வருடங்களுக்கான படிவம் 16 இன் நகல் அல்லது கடந்த இரண்டு நிதியாண்டுகளில் வருமான வரித் துறையால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஐடி வருமானத்தின் நகல்

சம்பளம் வாங்காத விண்ணப்பதாரர்கள்:


தொழில் நடைபெறும் இடத்தின் முகவரி சான்று

கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஐ.டி. ரிட்டர்ன்ஸ்

கடந்த மூன்று ஆண்டுகளாக இருப்புநிலை, லாபம் மற்றும் இழப்பு கணக்கு

வணிக உரிம விவரங்கள்

TDS சான்றிதழ்

தகுதி சான்றிதழ்

Share:

PGTRB Online Exam - Study Materials , Old Question Papers, Model Question Papers, Model Online Test And Syllabus

 PGTRB Economics - Unit 10 ( Central Bank Study material ) - Srimaan Coaching Centre -  Download here


PGTRB History - Unit 8 ( Later Cholas and Pandyas ) Study Material - Srimaan Coaching Centre - Download here

PGTRB Physics - Book for Study And Reference - Global Coaching Centre - Download here

PGTRB Maths - Operation Research Model Question paper - National academy - Download here

PGTRB - Computer Instructor Web Scripting ( unit 9 ) Study Material - Srimaan Coaching Centre - Download here

PGTRB Physics - Solid State Physics Unit Test question Paper - Srimaan Coaching Centre - English Medium Download here

PGTRB English - Unit III Study Material And Question Bank - Rasi Academy - Download here
Share:

இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் - TNPSC தெளிவான அறிக்கை வெளியீடு.

 ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் வழியில் பயின்றோர் மட்டுமே தமிழ்வழி இட ஒதுக்கீடு பெறத் தகுதியானவர்கள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெளிவான அறிக்கை வெளியீடு.


தேர்வாணையத்தால் கடந்த 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 ( தொகுதி - 1 ) ல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 05.08.2021 அன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில் , 16.08.2021 முதல் 16.09.2021 வரை ( வேலை நாட்களில் ) ஸ்கேன் ( Scan ) செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ - சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் : 


1. பள்ளி முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை 

2. மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு 

3. பட்டப் படிப்பு இது குறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றதாக குறிப்பிட்டு முதனிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.


இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இது குறித்த குறிப்பாணையினை 05.08.2021 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share:

COVID-19 BED VACANCY ENQUIRY IN TAMILNADU

 


1.Apollo greams road

9841271680

2.Apollo hospital

Vangaram.

9551075131

3.chettinad hospital

Kelambakkam

8637445031

4.Dr.Mehta hospital 

9840080449

5.sundaram medical foundation

9884245646

6.Billroth hospital

8939990995

7.Chennai national hospital

9500024447

8.Fortis malar hospital

9884077560

9.Isabel hospital

9080592941

10.Kanchi kama kodi 

Child trust hospital

8754426447

11.Dr.Rela hospital

9840048485

12.Global hospital

9884132260

12.Hindu mission hospital

9710352474

13.Kavery hospital

9551942599

14.MGM hospital

9600048805

15.MIOT hospital

9841615433

16.Prasanth Hospital

9940123332

17.Saveetha medical college hospital

9841185648

18.SIMS hospital

7401681037 

19.Ramachandra Medical college hospital

9003178899

20.Vijaya hospital

9444052548


courtesy: kalviseithi

Share:

50 சதவீத அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வலியுறுத்தல்

 அனைத்து துறை அரசு பணியாளர்களும், 50 சதவீதம் சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிட வேண்டும்' என, அரசுக்கு, அரசு பணியாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து உள்ளன.


தமிழக அரசின் தலைமை செயலருக்கு, தமிழ்நாடு தலைமை செயலக சங்க முன்னாள் செயலர் வெங்கடேசன் அனுப்பியுள்ள மனு:கொரோனா தொற்றின் இரண்டாம் அலை, வெகு தீவிரமாக பரவி வருகிறது. தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நோய் பரவல் தினமும் அதிகரித்து வருகிறது.தலைமை செயலகம்மற்றும் அமைச்சு பணி தலைமை அலுவலகங்களில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர், சென்னையின் அண்டை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.அவர்கள், மின்சார ரயில்களை நம்பி உள்ளனர்.அலுவலக நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்களில், கூட்ட நெரிசல் எப்போதும் போல அதிகம் உள்ளது. 


மாநகர பஸ்களிலும், இதே நிலை தான். சென்னை மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும், அரசு ஊழியர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே, அலுவலகம் வந்து செல்கின்றனர்.தற்போது, நுாற்றுக்கும் மேலான தலைமை செயலக பணியாளர்கள், 1,000த்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.பல துறைகளின் தலைவர் அலுவலகங்களில், இட நெருக்கடி உள்ளது. 


இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழக அரசு, 50 சதவீத பணியாளர்களை, சுழற்சி முறையில் பணியாற்ற ஆணையிட்டது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மிகத் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதால், இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தலைமை செயலகம் உள்ளிட்ட, அனைத்து துறை ஊழியர்களை, 50 சதவீதம் என, சுழற்சி முறையில்பணியாற்ற, தமிழக அரசு ஆணையிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.

Share:

Anna University - புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அனுமதி

 அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரி மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்துசெமஸ்டர் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக ஒரு முறை மட்டும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் முறை அமலில் உள்ளது.இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 'சாப்ட்வேர்' வழியாக 'ஆன்லைனில்' இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

Share:

TNPSC துறைத்தேர்வுகளில் அதிரடி மாற்றம்.

 




 கடந்த 2017 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைப்படி துறைத் தேர்வுகள் வருடத்திற்கு இரு முறை அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. 


துறைத் தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஜூன் 2021-ல் நடைபெறவிருக்கும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்துகிறது. பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்களின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணினி வழித் தேர்வினை அறிமுகப்படுத்துவதற்கிணங்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன :


 * கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும்.

* விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளைப் பொருத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு ( Manual Writen Examination ) வகையிலேயே தொடரும் கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை கட்டாயமாக ஒருங்கிணைத்து எழுத வேண்டிய துறைத் தேர்வுகளை பொருத்தமட்டில் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளுக்கு தனித்தனியே தேர்வெழுத வேண்டும். 

* மேற்கூறிய பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறை நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளிலிருந்து உத்தேசமாக பின்வருமாறு நடத்தப்படவுள்ளது.

* கணினி வழி தேர்வுகள் 22.06.2021 லிருந்து 26.06.2021 வரை நடைபெறும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் 27.06.2021 லிருந்து நடைபெறும் 

• கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் கொள்குறிவகையிலான கணினி வழித் தேர்வு மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இரு வேறு தினங்களில் தேர்வெழுத வேண்டும்.

*நடைபெறவிருக்கும் துறைத்தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தினை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *