TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label தமிழ் பாடங்கள். Show all posts
Showing posts with label தமிழ் பாடங்கள். Show all posts

யாப்பிலக்கணம்-பகுதி=1

தமிழ் இலக்கணம்

யாப்பிலக்கணம்

இது ஆறு வகைப்படும்.
1.   எழுத்து-எ.கா(அ)
2.   அசை-எ.கா(அக)
3.   சீர்-எ.கா(அகர)
4.   தளை
5.   அடி
6.   தொடை

·         எழுத்து:-

குறில்,நெடில்,ஒற்று என மூவகையாக பிரித்துக்கூறுவர்.
எழுத்து ,அசைக்கு உறுப்பாக அமையும்.

·         அசை

குறில்,நெடில்,ஒற்று எனும் எழுத்துகளால் அசைக்கப்படுவது.
இது 2 வகைப்படும்.
§  1.நேரசை
§  2.நிரையசை

v  நேரசை-

  •                குறில் தனித்தும் (எ.கா -ப)
  •    குறிலுடன் ஒற்றும்(எ.கா - பல்)
  •    நெடில் தனித்தும் (எ.கா - பா)
  •    நெடிலுடன் ஒற்றும்(எ,கா - பால்)

இவ்வாறு வருவது நேரசை ஆகும்

v  நிரையசை –

  •             இரு குறில் இணைந்து வருவது(எ.கா - பட).
  •    இரு குறிலுடன் ஒற்று வருவது (எ.கா – படம்)
  •    குறிலுடன் நெடில் வருவது (எ.கா -படா)
  •    குறில்,நெடிலுடன், ஒற்று வருவது (எ.கா-படார்)

இவ்வாறு வருவது நிரையசை ஆகும்.

{இரு ஒற்று எழுத்துகள் ஒன்றாய் வந்தால்,ஒரு எழுத்தாய் கொள்ள வேண்டும்.
எகா-அக்க்-இவ்வாறு வந்தால் அது நேரசை
எ,கா-அகட்ட் இவ்வாறு வந்தால் அது நிரையசை}

·         சீர்

§  ஓரசைச்சீர்
§  ஈரசைச்சீர்
§  மூவசைச்சீர்

v  ஒரசைச்சீர்

Ø  வெண்பாவின் ஈற்றில் நேரசை,நிரையசை உள்ள ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமைவது அசை (அ) ஓரசைச்சீர் எனப்படும்.
Ø  இவை 2 விதமாக வரும்.இவற்றின் வாய்பாடு
நேரசை –நாள்
நிரையசை –மலர்
Ø  வெண்பாவின் ஈற்றில் குற்றியலுகர எழுத்துகள் வந்தால்,அவற்றின் வாய்பாடு
நேர்பு – காசு
நிரைபு –பிறப்பு
(அதாவது கொடுக்கப்படும் சீர், கு,சு,டு,து,பு,று, எனும் வல்லின குற்றியலுகற எழுத்தைக்கொண்டு முடிந்தால் இவ்வாறு கொள்ள வேண்டும்)

எ.கா;-

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வளங்கா தெனின்.
இதன் ஈற்றுச்சீர்
தெனின்
இது
தெ(த்+எ)  /னி(ன்+இ)  /ன்
குறில் + குறில் +ஒற்று =நிரையசை
இதன் வாய்பாடு மலர்.

எ.கா

வாரி வளங்குன்றிக் கால்.
இதன் ஈற்றுச்சீர்
கால்
அதாவது
கா(க்=ஆ)  /  ல்
நெடில் + ஒற்று =நேரசை
வாய்பாடு -நாள்

எ.கா

பகவன் முதற்றே உலகு
இதன் ஈற்றுச்சீர்,
உலகு
அதாவது
உ  / ல(ல்+அ)  / கு
குறில்+குறில்+கு(குற்றியலுகர எழுத்து)
நிரை+(குற்றியலுகர எழுத்து)
எனவே இது
நிரைபு.
இதன் வாய்பாடு பிறப்பு என்று வரும்.

எ.கா;-

செய்யாமை செய்யாமை நன்று

இதன் ஈற்றுச்சீர்,
நன்று
அதாவது,
ந(ந்+அ)  / ன்  /று
குறில்+ஒற்று+று(குற்றியலுகர எழுத்து)
நேர்+(குற்றியலுகர எழுத்து)
எனவே இது நேர்பு ஆகும்.
எனவே இது காசு எனும் வாய்பாடை கொண்டு முடியும்.

v  ஈரசைச்சீர்

நேர்,நிரை எனும் இரண்டு அசை இணைந்து வரும் சீர்கள்.
Ø  நேர் + நேர்  = தேமா
Ø  நிரை + நேர் = புளிமா
Ø  நிரை + நிரை = கருவிளம்
Ø  நேர் + நிரை = கூவிளம்
§  இவை ஆசிரிய உருச்சீர் எனவும் வழங்கப்படும்.
§  மேலே காணும் நான்கு சீர்களும் ஆசிரியப்பாவிற்கு உரியவை.

எ.கா;-

எல்லா     =     எல்+லா    =     நேர்+நேர்        =           தேமா
விளக்கும்  =     விளக்+கும் =     நிரை+நேர்       =           புளிமா

v  மூவசைச்சீர்

§  ஈரசைச்சீர்கள் நான்குடனும் நேர்,நிரை ஆகிய இரண்டயும் தனித்தனியாக இறுதியில் சேர்த்தால் மூவசைச்சீர் 8 ஆக உருவாகும்.
§  மூவசைச்சீரை இரு வகையாகப்பிரிக்கலாம்.
o   காய்ச்சீர்-4
1.   நேர்+நேர்+நேர்            =     தேமாங்காய்
2.   நிரை+நேர்+நேர்           =     புளிமாங்காய்
3.   நிரை+நிரை+நேர்   =     கருவிளங்காய்
4.   நேர்+நிரை+நேர்           =     கூவிளங்காய்
§  இந்த காய்ச்சீர்கள் நான்கும் வெண்பா விற்கு உரியவை.
§  ஆதலால் இவை வெண்பா உரிச்சீர் எனவும் வழங்குவர்.


o   கனிச்சீர்-4
1.   நேர்+நேர்+நிரை                 =     தேமாங்கனி
2.   நிரை+நேர்+நிரை         =     புளிமாங்கனி
3.   நிரை+நிரை+நிரை        =     கருவிளங்கனி
4.   நேர்+நிரை+நிரை         =     கூவிளங்கனி
§  இவை வஞ்சிப்பாவிற்கு உரியவை.ஆதலால் வஞ்சி உரிச்சீர் என வழங்குவர்.

எ.கா

விளக்கல்ல           =விளக்+கல்+ல  =நிரை+நேர்+நேர் =புளிமாங்காய்
சான்றோர்க்குப்      =சான்+றோர்க்+குப்     =நேர்+நேர்+நேர்  =தேமாங்காய்




·         தளை

§  சீர் ஒன்றோடோன்று கட்டப்பட்டு இருப்பது , தளை எனப்படும்.இது 7 வகைப்படும்.

1.   நேரொன்றிய ஆசிரியத்தளை

·         ‘மா’ முன் நேர் வருவது.
·         அதாவது தேமா,புளிமா உடன் நேர் அசைச்சீர் வருவது.

·         எ.கா;-

¨       பாரி பாரி
¨       பா+ரி பா+ரி
¨       நேர்+நேர் நேர்+நேர்
¨       தேமா நேர்+நேர்
¨       (இந்த இரண்டாவதாக வரும் நேர்+நேர் –ல் முதலாக வரும் நேர்-ஐ மட்டும் எடுத்திக்கொள்ளவும்.)
¨       தேமா நேர்
¨       மா முன் நேர் வருவதால் இது நேரொன்றாசிரியத்தளை

2.   நிரையொன்றாசிரியத்தளை

¨       ‘விளம்’-முன் நிரை வருவது
¨       கருவிளம்,கூவிளம் ஆகியவற்றின் முன்னால் நிரை வருதல்

¨       எ.கா;-

Ø  பலர்புகழ் கபிலர்
Ø  பலர்+புகழ்  கபி+லர்
Ø  நிரை+நிரை நிரை+நேர்
Ø  கருவிளம் நிரை+நேர்
Ø  (இந்த இரண்டாவதாக வரும் நிரை+நேர் –ல் முதலாக வரும் நிரை-ஐ மட்டும் எடுத்திக்கொள்ளவும்.)
Ø  இதில் விளம் முன் நிரை வந்துள்ளது.எனவே இது நிரையொன்றிய ஆசிரியத்தளை
நேரொன்றிய மற்றும் நிரையொன்றிய ஆசிரியத்தலைகள் ஆசிரியப்பாவிற்கு உரியவை.

3.   இயற்சீர் வெண்டளை

·         இது 2 வகையாக அமையும்.
¨       1.‘மா’-முன் நிரை வருவது

எ.கா;-

Ø  அகர முதல
Ø  அக+ர முத+ல
Ø  நிரை+நேர் நிரை+நேர்
Ø  புளிமா நிரை+நேர்

2.’விளம்’ முன் நேர்வருவது

எ.கா;-

Ø  பூம்புகார் போற்றுதும்
Ø  பூம்+புகார் போற்+றுதும்
Ø  நேர்+நிரை நேர்+நிரை
Ø  கூவிளம் நேர்+நிரை

4.   வெண்சீர் வெண்டளை

·         ‘காய்’ முன் நேர் வருவது.

·         எ.கா;-

¨       யாதானும் நாடாமல்
¨       யா+தா+னும்   நா+டா+மல்
¨       நேர்+நேர்+நேர்  நேர்+நேர்+நேர்
¨       தேமாங்காய் நேர்+நேர்+நேர்
இயற்சீர் வெண்டளையும்,வெண்சீர் வெண்டளையும் வெண்பா விற்கு உரியவை.

5.   கலித்தளை

§  ‘காய்’ முன் நிரை வருவது

§  எ.கா;-

தாமரைப்பூ    குளத்தினிலே
தா+மரைப்+பூ   குளத்+தினி+லே
நேர்+நிரை+நேர் நிரை+நிரை+நேர்
கூவிளங்காய் நிரை+நிரை+நேர்
·         இது கலிப்பா விற்கு உரியது.


6.   ஒன்றிய வஞ்சித்தளை

§  ‘கனி’ முன் நிரை வருவது

§  எ.கா;-

செந்தாமரை   குளத்தினிலே
செந்+தா+மரை குளத்+தினி+லே
நேர்+நேர்+நிரை நிரை+நிரை+நேர்
தேமாங்கனி நிரை+நிரை+நேர்

7.   ஒன்றாத வஞ்சித்தளை

·         ‘கனி’-முன் நேர் வருவது
v  ஒன்றிய மற்றும் ஒன்றாத வஞ்சித்தலைகள் வஞ்சிப்பாவிற்கு உரியவை.


அடி மற்றும் தொடைகள் ஆகிய இரண்டும் அடுத்த பகுதியில்.



என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பதிணென்மேல்கணக்கு நூல்கள் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்

பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் பற்றி படிக்க  இங்கே அழுத்துங்கள்


என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம்-பகுதி 2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

Share:

யாப்பிலக்கணம் தொடர்ச்சி

யாப்பிலக்கணம்

தொடர்ச்சி

இதன் முந்தையப்பதிவைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

அடி

·         சீர்கள் அடுத்ததடுத்துவருவது அடி எனப்படும்.
·         இது 5 வகைப்படும்.
1.   குறளடி       =    2 சீர்கள்.
2.   சிந்தடி        =    3 சீர்கள்.
3.   அளவடி      =    4 சீர்கள்.
4.   நெடிலடி      =    5 சீர்கள்.
5.   கழிநெடிலடி   =    5க்கும் மேற்பட்ட சீர்கள்.
·         பா’-வகை
Ø  இது 4 வகைப்படும்.
பா
ஓசை
தளை
வெண்பா
செப்பலோசை
இயற்சீர்.வெண்சீர் வெண்டளை
ஆசிரியப்பா
அகவலோசை
நேர்,நிரை ஒ,ஆ,தளை
கலிப்பா
துள்ளல் ஓசை
கலித்தளை
வஞ்சிப்பா
தூங்கல் ஓசை
ஒன்றிய,ஒன்றாத ஆசிரியத்தளை.


தொடை

Ø  தொடை எட்டு வகைப்படும்.
1.   மோனை
2.   எதுகை
3.   முரண்
4.   இயைபு
5.   அளபெடை
6.   இரட்டைத்தொடை
7.   அந்தாதி
8.   செந்தொடை

1.மோனை
Ø  முதலெழுத்து ஒன்றி வருவது.
Ø  இது எட்டுவகைப்படும்.
Ø  சீர்மோனை        =    7
Ø  அடி மோனை      =    1

·         அடிமோனை
¨       முதலடியின் முதலெழுத்தும்,இரண்டாம் அடியின் முதலெழுத்தும்,ஒன்றி வருவது.
¨       எ.கா
ன்னெஞ்  சறிவது  பொய்யற்க பொய்த்தபின்
ன்னெஞ்சே தன்னை சுடும்


·         வழிமோனை (அ) சீர்மோனை
Ø  சீர்தோறும் முதலெழுத்து ஒன்றி வருதல்.
Ø  வகைகள்
சீர்மோனை
வரும் சீர்கள்
1.   இணை-மோனை
1,2
2.   பொழிப்பு
1,3
3.   ஒருஊ
1,4
4.   கூழை
1,2,3
5.   கீழ்க்கதுவாய்
1,2,4
6.   மேல்கதுவாய்
1,3,4
7.   முற்று
1,2,3,4

2.எதுகை

  • Ø  செய்யுளின் முதலெழுத்து அளவு ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
  • Ø  இது 8 வகைப்படும்.
  • Ø  அடி எதுகை                =    1
  • Ø  சீர் எதுகை            =    7
  • v  அடி எதுகை
  • ·         அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது.
  • ·         எ.கா
  • ர முதல எழுத்தெல்லாம் ஆதி
  • வன் முதற்றே இலகு
  • v  சீர் எதுகை
  • Ø  சீர் தோறும் இரண்டாம் எ.உத்து ஒன்றி வருவது.
  • Ø  எ.கா
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பாக்கி
§  வகைகள்
அடி எதுகை
அடிகள்
இணை-எதுகை
1,2
பொழிப்பு
1,3
ஒருஊ
1,4
கூழை
1,2,3
கீழ்க்கதுவாய்
1,2,4
மேல்கதுவாய்
1,3,4
முற்று
1,2,3,4

3.முரண்-தொடை

  • Ø  அடிகளிலோ,சீர்களிலோ,சொல்லோ பொருளோ முரண்படுவது.
  • Ø  இது 8 வகைப்படும்.
  • Ø  அடி முரண்           =    1
  • Ø  சீர் முரண்            =    7
  • v  அடி முரண்
  • Ø  எ.கா
  • இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
  • துன்பம் கூறுதல் இலன்.

  • v  சீர்-முரண்(1,2)
  • Ø  இணை முரண்
  • எ.கா
  • பொய்மையும் வாய்மை யிடத்தே புரை தீர்ந்த
  • v  பொழிப்பு முரண்(1,3)
  • Ø  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
  • v  ஒருஊ முரண்(1,4)
  • Ø  புறத்தூய்மை நீரால் அமையும் அகத்தூய்மை
  • v  கூழை முரண்(1,2,3)
  • Ø  கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
  • v  கீழ்க்கதுவாய் முரண்(1,2,4)
  • Ø  மாலை யாமம் குழற்வரும் வைகைறை
  • v  மேற்கதுவாய் முரண்(1.3.4)
  • Ø  வானவர்கள் மலர்மாறி மண்ணிரைவிண்ணுலகில்
  • v  முற்று முரண்(1,2,3,4)
  • Ø  நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்



4.இயைபுத்தொடை
Ø  செய்யுளின் அடிகளிலும் சீர்களிலும் இறுதி எழுத்தோ,அசையோ,சீரோ ஒன்றி வருவது.
Ø  இதுவும் எட்டு வகைப்படும்.

5.அளபெடைத்தொடை
அடிதோறும் (அ) சீர்தோறும் அளபெடுத்து வருவது .
இதுவும் எட்டு வகைப்படும்
எ.கா
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச்  சான்றாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லா மழை
(இது அடி அளபெடை எனப்படும்)



ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்பட விமர்சனத்திற்கு இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பிற கட்டுரைகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *