TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys
Showing posts with label TET Tsmil Notes. Show all posts
Showing posts with label TET Tsmil Notes. Show all posts

மாவட்டங்களும் தொழில்களும் - 1



வணக்கம் நண்பர்களே ! நீண்ட இடைவெளிக்குப்பின் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . இந்த பதிவின் வழியாக ஒவ்வொரு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழில்களை எழுதுகிறேன் . அனைத்து மாவட்டங்களிலும் இருக்கும் தொழில்களைப்பற்றி எழுதுவதால் பதிவு இரண்டு பிரிவுகளாக வழங்கியிருக்கிறேன் . மறக்காமல் படித்துவிட்டு கமெண்ட் தட்டிவிட்டு செல்லுங்கள் .

சென்னை


1.   INTEGRAL COACH FACYORY – பெரம்பூர் .
2.   CENTRAL LEATHER RESEARCH INSTITUDE
3.   HINDHUSTHAN TELEPRINTER .
4.   TITLE PARK (ELCOT , TITCO) – தரமணி
5.   STANDARD MOTORS
6.   டயர் , சைக்கிள் உற்பத்தி
7.   உரதயாரிப்பு
8.   கிண்டி தொழிற்பேட்டை
9.   தமிழ்நாட்டின் பள்ளத்தாக்கு – சென்னை
10. தெற்காசியாவின் டெட்ராய்டு – சென்னை
11. துறைமுகம்


திருவள்ளூர்


1.   ஆவடி – பீரங்கி தொழிற்சாலை
2.   எண்ணூர் – உரதொழிற்சாலை
3.   அம்பத்தூர் – தொழிற்பேட்டை
4.   எண்ணூர் – துறைமுகம்


காஞ்சிபுரம்


1.   INDRAGANDHI CENTER FOR ATOMIC RESEARCH – கல்பாக்கம்
2.   பட்டு உற்பத்தி
3.   HUANDAI கார் கம்பெனி - ஶ்ரீபெரும்புதூர் , இருங்காட்டுக்கோட்டை
4.   FORD கார் கம்பனி – மறைமலைந்கர்
5.   NOKIA FACTORY
6.   SAINT COPAIN MIRROR FACTORY


வேலூர்


1.   என்பீல்டு BIKE கம்பனி
2.   STEMCELL ஆய்வு நிறுவனம்
3.   தமிழ்நாடு வெடிபொருள் ஆலை
4.   ராணிப்பேட்டை தோல் தொழிற்சாலை
5.   BHEL – ராணிப்பேட்டை
6.   CMC மருத்துவமனை
7.   வைனு – பாப்பு தொலைநோக்கி மையம்
8.   தொழுநோய் ஆய்வு மையம் .
9.   ரசாயன தொழிற்சாலை
10. கரும்பு ஆராய்ச்சி மையம் – மேல்ஆத்தூர் .
11. விவசாய ஆராய்ச்சி நிலையம் .

திருவண்ணாமலை


1.   ஆரணிப்பட்டு
2.   நூற்பு ஆலை , அரிசி ஆலை


கடலூர்


1.   நெய்வேலி பழுப்புநிலக்கரி , அனல்மின்நிலையம் .
2.   யூரியா உற்பத்தி
3.   தமிழ்நாட்டின் முதல் சர்க்கரை ஆலை – நெல்லிக்குப்பம்
4.   உபநகிரி OIL REFIND FACTORY
5.   பன்ருட்டி – பலா , முந்திரி விளைச்சல் .

விழுப்புரம்


1.   சாதாரண உப்பு – மரக்காணம்
2.   பட்டுப்பூச்சி வளர்ப்பு


தர்மபுரி


1.   கிரானைட்
2.   பட்டு
3.   ஜவ்வரிசி
4.   தீப்பெட்டி


ஈரோடு


1.   துணிநூற்பு ஆலை
2.   மஞ்சள்
3.   ஜவுளி சந்தை
4.   பவானி ஜமுக்காளம்
5.   தோல் தொழிற்சாலை
6.   அந்தியூர் குதிரை சந்தை


நீலகிரி


1.   HINDHUSTAN PHOTO FILM FACTORY
2.   துப்பாக்கி வெடிமருந்து ஆலை – அரவங்காடு
3.   பாஸ்டியர் நிறுவனம் – வெறிநாய்க்கடி தடுப்பூசி மருந்து
4.   பைக்காரா , குந்தா – நீர்மின்சாரம் .
5.    புரோட்டின் தயாரிப்பு

கோவை


1.   பஞ்சுஆலைகள்
2.   மின்சாரப்பொருள்
3.   இயந்திரங்கள்
4.   காடம்பறை – நீர்விசைமின்சாரம்
5.   தென்னிந்தியாவின் மான்செஸ்டர் .


திண்டுக்கல்


1.   பூட்டுத்தயாரிப்பு
2.   தோல் ஆலை
3.   புகையிலை
4.   சுங்கடிப்புடவைகள்
5.   நூற்பு ஆலை
6.   தமிழ்நாட்டின் அதிக மலர் உற்பத்தி
7.   தமிழ்நாட்டின் ஹாலந்து
8.   சிறுமலை – வாழை


புதுக்கோட்டை


1.   சித்தன்னவாசல் ஓவியம்
2.   குடுமியான்மலை இசைக்கல்வெட்டு
3.   BHEL ஆலை (திருமயம்) – குழாய்கள் உற்பத்தி


சிவகங்கை


1.   மத்திய மின்வேதியியல் ஆய்வகம் – காரைக்குடி
2.   அச்சகங்கள்
3.   ரசாயணப்பொருட்கள்
4.   வீடியோகான் நிறுவனம்

விருதுநகர்


1.   தீப்பெட்டி
2.   பட்டாசு
3.   சிவகாசி (குட்டி ஜப்பான்)
4.   அச்சகங்கள்
5.   நூற்பு ஆலைகள்
6.   பருத்தி ஆராய்ச்சி மையம்
7.   பாலிமர் ஆராய்ச்சி மையம்
8.   கோழி ஆராய்ச்சி மையம்

ராமநாதபுரம்


1.   இந்தியாவின் முதல் கடல் உயிரி காப்பகம்
2.   நூற்பு ஆலை
3.   ரசாயணப்பொருட்கள்


தூத்துக்குடி


1.   SPIC , கோதாவரி – உரகம்பனிகள்
2.   அனல்மின்நிலையம்
3.   தமிழ்நாட்டின் நுழைவாயில்
4.   கனநீர் ஆலை
5.   ISO 9002 தரச்சான்றிதழ் பெற்ற முதல் துறைமுகம்
6.   தமிழ்நாட்டின் அதிக உப்பு உணவு உற்பத்தி
7.   கடற்கரையில் அணு தாது பெற்றுள்ள மாவட்டம்





Share:

தமிழ் அறிஞா் - ஈரோடு தமிழன்பன்



·         பிறப்பு – 28.09.1940 , ஊர் – ஈரோடு
·         பெற்றோர் – நடராஜா , வள்ளியம்மாள் .
·         இயற்பெயர் – ஜெகதீசன் , புனைப்பெயர் – விடிவெள்ளி
·         இவர் ஒரு ‘வானம்பாடி’ விஞர் .

சிறந்த தொடர்கள்

·         சதைத்திரண்டு உன் வார்த்தைகளின் வீரம்
கலகலத்து ஓடுகிறது எங்கள் உள்ளங்களில்

சிறப்புப் பெயர்

·         மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர் .

சிறந்த நூல்கள்

·         தோணி வருகிறது , தீவுகள் கரையேறுகின்றன ,  சூரியப்பிறைகள் , நிலவு வரும் நேரம் , ஊமை வெயில் , திரும்பி வந்த தேர்வலம்

·         வணக்கம் வள்ளுவா  - சாகித்திய அகாதமி வென்ற நூல் .


Share:

தமிழ் அறிஞா்கள் - மு.மேத்தா

மு.மேத்தா

·         பிறப்பு – 05.09.1945 , ஊர் – பெரியகுளம் , தேனி மாவட்டம்
·         இயற்பெயர் – முகமது மேத்தா .
·         ‘வானம்பாடி’ எனும் புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகமானார் .
·         சென்னை மாநிலக்கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார் .
·         ‘தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடகனின் அஞ்சலி’ எனும் கவிதை , இவருக்குபுகழ் தேடித்தந்த கவிதை ஆகும் .
·         இவர் எழுதிய ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூல் , தமிழக அரசின் பரிசைப் பெற்றது .
·         ‘சோழநிலா’ எனும் வரலாற்று நாவல் , ஆனந்தவிகடன் இதழ் நடத்திய பொன்விழா இலக்கிய போட்டியில் முதல் பரிசை வென்றது .
·         தமிழக அரசு வழங்கும் பாவேந்தர் விருதினை பெற்றுள்ளார் .

மேற்கோள்கள்

·         இலக்கணம் செங்கோல் யாப்பு – சிம்மாசனம் எதுகை பல்லக்கு மோனை தேர்கள்
·         மரங்களில் நான் ஏழை; எனக்கு வைத்த பெயர் வாழை

சிறந்த நூல்கள்

·         கண்ணீர் பூக்கள்ள , ஊர்வலம் , சோழநிலா , மனச்சிறகு , வெளிச்சம் வெளியே இல்லை . ஒருவானம் இரு சிறகு , காத்திருந்த காற்று , திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் , நந்தவன நாற்காலி .

·         ஆகாயத்தில் அடுத்தவீடு – சாகித்திய அகாதமி வென்ற நூல்
Share:

தமிழ் அறிஞா்கள் - சி. மணி & சிற்பி பாலசுப்ரமணியம்

சி.மணி

·         எழுத்து இதழின் தொடக்கக்கால எழுத்தாளர் .
·         பாலுணர்ச்சியை பச்சையாக எழுதுகிறார் மணி , என்றகுற்றச்சாட்டிற்கு  பதிலாக ‘பச்சையம்’ எனு கவிதையை எழுதியுள்ளார் .

சிறந்த நூல்கள்

·         நகரம் – கவிதை நூல்
·         வரும்போகும் , ஒளிச்சேர்க்கை , கொலைகாரர்கள்


சிற்பி பாலசுப்ரமணியம்

·         பிறப்பு 29.07.1936 , ஊர் – ஆத்துப்பொள்ளாச்சி
·         பெற்றோர் – பொன்னுசாமி , கண்டியம்மாள் .
·         பொள்ளாச்சி நல்லமுத்து மஹாலிங்கம்ம கல்லூரியில்  விரிவுரையாளராக பணியாற்றினார் .
·         கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக பணிபுரிந்தார் .
·         இவரது கவிதைகள் ஆங்கிலம் , கன்னடம் , மலையாளம் , மராத்தி , இந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது .
·         சாகித்திய அகாதமி,  ஞானபீட தொகுப்புகளில் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளது .

விருதுகள்

·         இவர் எழுதிய ‘மௌன மயக்கங்கள்’ ,’பூஜ்ஜியங்களின் சங்கிலி’ எனும் கவிதை நூல்கள் , தமிழ்நாடு அரசின் பரிசைப் பெற்றுள்ளது .
·         லலிதாம்பிகா அந்தர்ஜனம் என்பவர் மலையாளத்தில் எழுதிய நாவலை , அக்னிசாட்சி எனும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் . இந்நூல் , 2000 ஆண்டின் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதினை பெற்றது .
·         இவர் இயற்றிய ‘ஒரு கிராமத்து நதிக்கரையில்’ எனும் நூலுக்கு , 2002-ல் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
·         தமிழ் இலக்கிய உலகில் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமை , சிற்பிக்கு மட்டுமே உண்டு .
·         தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றுள்ளார்.
·         தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் , ஆங்கில இலக்கியநூல் பரிசு பெற்றுள்ளார் .
·         ‘கவிஞர்கோ’ எனும் பட்டம் , குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது.

சிறந்தநூல்கள்


·         சிரித்த முத்துகள் , நிலவுப்பூ , ஒளிபறவை , சர்ப்பயாகம் , சூரியநிழல் , ஆதிரை , அலையும் சுவடும் , புன்னகை பூக்கும் பூனைகள் , நீலக்குருதி .
Share:

தமிழ் அறிஞா்கள் - இரா.மீனாட்சி

இரா.மீனாட்சி

·         சி.சு.செல்லப்பாவின் எழுத்துக்காலத்தில் இருந்து எழுதி வருகிறார் .
·         கோவை அவினாசி அரசு உயர்நிலைப்பள்ளியில் முதன்முதலாக பாரதி சிலை வைக்க , அரசாணை பெற்று சிலை நிறுவி , பாரதியார் நூற்றாண்டு விழாவை நடத்தினார் .
·         ஆப்பிரிக்கா –இந்திய இளைஞர்களுக்கிடையே நட்புறவு பாலமாக , ‘ஆரோ’ வில் இளைஞர்கள் கல்வி மையத்தைத் துவங்கினார் .
·         சாகித்திய அகாதமியுடன் இணைந்து ‘வருங்காலக் கவிதையும் கவிதையின் வருங்காலமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தினார் .
·         ஆரோவில் இருந்து வெளிவரும் ‘கிராம செய்தி மடல்’ எனும் மாத இதழின் ஆசரியராக பணணியாற்றினார்.
·         ஶ்ரீ அரவிந்தர் பன்னாட்டு கல்வி ஆய்வுமையத்தில் பொறுப்பு உறுப்பினராக இருந்தார் .

விருதுகளும் பரிசுகளும்

·         இவர் எழுதிய ‘உதயநகரில் இருந்து’ எனும் புதுக்கவிதை நூலுக்கு 2006-ல் தமிழக அரசின் பரிசு வழங்கப்பட்டது .
·         புதுவை அரசின் கவிஞர் கல்லாடனார் விருது பெற்றார் .
·         ஐ.நா சபையின் பொன்விழாவையொட்டி , ஆரோவிற்கு வழங்கிய நட்புப்பரிசினை பெற்றார் .

சிறந்த நூல்கள்


·         நெறிஞ்சி , சுடுபூக்கள், தீபாவளி பகல் , செம்மன் மடல்கள் , வாசனைப்பூ .
Share:

தமிழ் அறிஞா்கள் - பசுவய்யா

பசுவய்யா – சுந்தர ராமசாமி

·         பிறப்பு – 30.05.1931 , ஊர் – தழுவியமகாதேவர் கோவில் (குமரி மாவட்டம்)
·         இயற்பெயர் – சுந்தர ராமசாமி
·         தொ.மு.சி.ரகுநாதன் ஆசிரியராக இருந்த ‘சாந்தி’ எனும் பத்திரிக்கையில் எழுதத்துவங்கினார் .
·         மலையாளத்தில் தகழி எழுதிய செம்மீன் , தேரோட்டியின் மகன் என்ற இருநாவல்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் .
·         சு.ரா பெயரில் தமிழ்கணிமைக்கான விருது , கனடாவின் ‘தமிழ் இலக்கியத் தோட்டம் ’ எனும் அமைப்பால் நடத்தப்படும் ‘காலச்சுவடு’ எனும் அறக்கட்டளை உதவியுடன் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது .
·         சு.ரா நினைவாக ஆண்டுதோறும் , இளம்படைப்பாளி ஒருவருக்கு , ‘நெய்தல் இலக்கிய அமைப்பு’ சுரா விருது அளித்து வருகிறது

சிறந்த நூல்கள்

·         ஒரு புளியமரத்தின் கதை , அக்கரைச் சீமையில் , பிரசாதம் , நடுநிசி நாய்கள், யாரோ ஒருவனுக்காக , ஜேஜே சில குறிப்புகள் .

Share:

தமிழ் அறிஞா்கள் - சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா

·         பிறப்பு – 29.09.1912 , மறைவு – 18.12.1998
·         ஊர் – சின்னமனூர் , தேனி மாவட்டம்
·         ‘சுதந்திரசங்கு’ எனும் இதழில் எழுதத்தெடங்கினார் .
·         ‘தினமணி’க்கதிரில் பிரபல எழுத்தாளர் துனிலனுக்கு உறுதுணையாக பணியாற்றினார் .
·         1958-ல் , ‘எழுத்து’ இதழை தொடங்கினார் .

சிறந்த நூல்கள்

·         நீ இன்று இருந்தால் , மாற்று இதயம் , சரசாவின் பொம்மை , மணல்வீடு , அறுபது , வெள்ளை , வாடிவாசல் , ஜீவனாம்சம் .
·         சுதந்திர தாகம் (சாகித்திய அகாதமி விருது வென்ற நூல்)

சிறப்புப்பெயர்


·         புதுக்கவிதையின் புரவலர்
Share:

தமிழ் அறிஞா்கள் - ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதை

புதுக்கவிதைத் தோற்றம்

·         அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனின் , புல்லின் இதழ்கள்  புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகிறது .
·         டி.எஸ்.எலியட் எழுதிய பாழ்நிலம் (THE WASTE LAND) எனும் கவிதைநூல் , நோபல் பரிசு பெற்றது . இது புதுக்கவிதை உலகில் புதுத்தாக்கத்தினை ஏற்படுத்தியது .
·         வால்ட் விட்மனின் முறையை பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி , நகரம் என்ற தன் கட்டுரையில் , மகான் என்று அவரைக் குறிப்பிடுகிறார் .
·         தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
·         பாரதி எழுதிய புதுக்கவிதை , ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது .
·         தமிழில் புதுக்கவிதையைத் தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
·         புதுக்கவிதை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த இதழ்கள் – எழுத்து , நடை , கலாமோகினி , கசடதபற , வானம்பாடி .
·         வல்லிக்கண்ணன் , ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
·         ‘புதுக்கவிதை இலக்கணம்’ எனும் நூலை எழுதியவர் – ராஜேந்திரன் .


ந.பிச்சமூர்த்தி

·         பிறப்பு – 15.08.1900 , மறைவு – 04.12.1976 , ஊர் – கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
·         பெற்றோர் – நடேச தீட்சிதர் , காமாட்சி அம்மாள்
·         இயற்பெயர் – வேங்கடமஹாலிங்கம் .
·         1924 – 1938 வரை வழக்குரைஞர் பணி .
·         1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார் .
·         பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரின் படைப்புகளாகும்.
·         1934-ல் மணிக்கொடி இதழில் வெளிவந்த ‘காதல்’ எனும் கவிதை , தமிழில் வெளியான முதல் புதுக்கவிதையாகும் .
·         இவரது ‘புதுக்குரல்கள்’ எனும் கவிதைத்தொகுதிதான் , தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பாகும் .
·         ‘நவ இந்தியா’ எனும் பத்திரிக்கையில் சிறிதுகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார்.
·         ‘கலைமகள்’ எனும் பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக அறிமுகமானார்.
·         இவரின் எழுத்துகள்ள ‘சுதேசமித்திரன்’ , ‘சுதந்திர சங்கு’ , ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தன .

சிறப்புப்பெயர்

·         புதுக்கவித இரட்டையர் – ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

சிறந்த கவிதை நூல்கள்

·         காட்டுவாத்து , வழித்துணை , பூக்காரி , ஆத்தோரான் மூட்டை , கிளக்கூண்டு , கிளிக்குஞ்சு

சிறுகதை

·         மாயமான் , ஈஸ்வர லீலை , இரும்பும் புரட்சியும் , பாம்பின் கோவம் , முள்ளும் ரோஜாவும் , கொலுபொம்மை .

சிறந்த தொடர்கள்

·         நீயன்றி மண்ணுன்டோ விண்ணுன்டோ ஒளியுண்டோ நிலவுமுண்டோ

·         காமனை எரித்த ருத்ரன் கண்சிமிட்டில் தணிந்து போவான் .
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *