எட்டுத்தொகை
“நற்றினை நற்குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியொடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத்தொகை”
அகநூல் – நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு
புறநூல் –
புறநானூறு,பதிற்றுப்பத்து
அகமும் புறமும் தழுவியது –
பரிபாடல்
நூல்
|
தொகுத்தவர்
|
தொகுப்பித்தவர்
|
பாடல்கள்
|
நற்றிணை
|
***
|
பான்டியன் மாறன் வழுதி
|
400
|
குறுந்தொகை
|
பூரிக்கோ
|
206 பேர்
|
401
|
ஐங்குறுநூறு
|
கூடலூர் கிழார்
|
சேரல் இரும்பொறை
|
500
|
கலித்தொகை
|
நல்லந்துவனார்
|
5 பேர்
|
150
|
அகநானூறு
|
உருத்திர சன்மனார்
|
பான்டியன் உக்கிரப்பெருவழுதி
|
400
|
பதிற்றுப்பத்து
|
***
|
***
|
100
|
புறநானூறு
|
***
|
***
|
400
|
பரிபாடல்
|
***
|
***
|
22
|
1. நற்றிணை:-
* எட்டுத்தொகை நூல்களுல் முதலாமாவது.
* ’நல்’ எனும் அடைமொழி பெற்ற நூல்
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
* 9 அடி சிறுமை 12 அடி பெருமை
* கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
* 400 பாடல்களைப் பாடியோர் 275 பேர்.
* ஓர்அறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு இந்நூலில் காணப்படுகிறது.
*வேறுபெயர் - நற்றிணை நானூறு
2. குறுந்தொகை :-
* ‘நல்ல’ எனும் அடைமொழி பெற்ற நூல்.
* 4 அடி சிறுமை 8 அடி பெருமை.
* கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*முக்கிய பாடல் வரிகள்:
-“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி”
-“வினையே ஆடவர்க்குயிரே
மனையுறை மகளிர்ரக்கு ஆடவர் உயிரே”
-“செம்புல பெயர் நீர்போல அன்புடையார்
நெஞ்சம்தாம் கலந்தனவே”
*வேறுபெயர்- குறுந்தொகை நானூறு
3. ஐங்குறுநூறு:-
*குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது.
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
*3 அடி சிறுமை 6அடி பெறுமை.
* கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
திணை மற்றும் பாடியோர்=
* குறிஞ்சி கபிலர்.
* முல்லை பேயனார்
* மருதம் ஒரம்போகியார்
* நெய்தல் அம்மூவனார்
* பாலை ஓதலாந்தையார்
*மறுதரவுப்பத்து இடம்பெறும் நூல்.
4. கலித்தொகை:-
*ஏறுதழுவுதல் பற்றி கூறும் நூல்.
*நாடகப்பாங்கில் அமைந்த நூல்.
*’கலிட்பா’வால் அமைந்த நூல்
*கடவுள் வாழ்த்து பாடியவர்-நல்லந்துவனார்.
*முதன்மை கடவுள் – சிவன்.
*பெறுந்திணைப்பாடல் இடம்பெறும் சங்ககால நூல்.
5. அகநானூறு:-
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
*13 அடி சிறுமை 31அடி பெருமை.
*3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
*ஓர் ஒழுங்குமுறையில் தொகுக்கப்பட்ட ஒரே நூல் அகநானுறு.
* குறிஞ்சி 2,8,18…….
* முல்லை 4,14,24,…….
* மருதம் 6,16,26……….
* நெய்தல் 10,20,30……..
* பாலை 1,3,5,7,9…….
* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
*வேறுபெயர்-நெடுந்தொகை.
6.புறநானூறு:-
*வெட்சி,கரந்தை முதலிய புறத்திணைகள் பற்றி 400 பாடல்கள் உடையது.
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
* கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*4 அடி சிறுமை 40 அடி பெருமை.
*G.U.போப் இந்நூலின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
*தமிழர் வாழ்வின் வெற்றியை காட்டும் கண்ணாடி.
*திணைகள்-11.
*துறைகள்-65.
*வேறுபெயர்-புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.
*முக்கிய பாடல் வரிகள்:
-“எத்திசை செல்லினும் அத்திசை சோறே”
-“உண்பது நாழி உடுப்பது இரண்டே”
-“உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே”
-“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே”
7. பதிற்றுப்பத்து:-
*10 சேரமன்னர்களைப்பற்றி 10 பாடல் வீதம் 100 பாடல்கள் கொண்டுள்ளது.
*முதல் 10ம் இறுதி 10 ம் கிடைக்கவில்லை.
*முழுவதும் பாடாண்திணையால் அமைந்த நூல்.
8. பரிபாடல்:-
* ’ஓங்கு’ எனும் அடைமொழி கொண்டநூல்.
* தொல்காப்பியர் கூறும் பாவகையில் ஒன்று.
* தமிழில் தோன்றிய முதல் இசைப்பாடல்.
* ‘கிண்று’ எனும் காலம் காட்டும் இடைநிலை முதன்முதலில் இந்நூலில் தான் கானப்படுகிறது.
*மதுரையின் அழகை தாமரைக்கு ஒப்பிட்டுள்ளது.
*70 பாடல்கள் உடையது.ஆனால் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
*வேறுபெயர் – பொருட்கலவை நூல்.
Nice
ReplyDeleteநன்றி தோழரே!!!
Deletevery useful
ReplyDeleteநன்றி
ReplyDelete