TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC பாட விவரங்கள்,Tamil தமிழ் இலக்கியம் பகுதி 2(எட்டுத்தொகை)



         எட்டுத்தொகை

“நற்றினை நற்குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏற்றும் கலியொடு அகம்புறமென
இத்திறத்த எட்டுத்தொகை”

அகநூல் –                                               நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,கலித்தொகை,அகநானூறு
புறநூல் – 
புறநானூறு,பதிற்றுப்பத்து
அகமும் புறமும் தழுவியது – 
பரிபாடல்

    நூல்
தொகுத்தவர்
தொகுப்பித்தவர்
பாடல்கள்

நற்றிணை
***
பான்டியன் மாறன் வழுதி
400
குறுந்தொகை
பூரிக்கோ
206 பேர்
401
ஐங்குறுநூறு
கூடலூர் கிழார்
சேரல் இரும்பொறை
500
கலித்தொகை
நல்லந்துவனார்
5 பேர்
150
அகநானூறு
உருத்திர சன்மனார்
பான்டியன் உக்கிரப்பெருவழுதி
400
பதிற்றுப்பத்து
***
***
100
புறநானூறு
***
***
400
பரிபாடல்
***
***
22


1. நற்றிணை:-

* எட்டுத்தொகை நூல்களுல் முதலாமாவது.
* ’நல்’ எனும் அடைமொழி பெற்ற நூல்
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
* 9 அடி  சிறுமை 12 அடி பெருமை
கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
* 400 பாடல்களைப் பாடியோர் 275 பேர்.
ஓர்அறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு இந்நூலில் காணப்படுகிறது.
*வேறுபெயர் நற்றிணை நானூறு

2. குறுந்தொகை :-

* ‘நல்ல’ எனும் அடைமொழி பெற்ற நூல்.
* 4 அடி  சிறுமை 8 அடி பெருமை.
* கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.

*முக்கிய பாடல் வரிகள்:
-“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சறை தும்பி”

-“வினையே ஆடவர்க்குயிரே
மனையுறை மகளிர்ரக்கு ஆடவர் உயிரே”

-“செம்புல பெயர் நீர்போல அன்புடையார்
நெஞ்சம்தாம் கலந்தனவே”

*வேறுபெயர்குறுந்தொகை நானூறு

3. ஐங்குறுநூறு:-

*குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் வீதம் 500 பாடல்கள் கொண்டது.
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
*3 அடி சிறுமை  6அடி பெறுமை.
கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.


திணை  மற்றும்  பாடியோர்=
குறிஞ்சி        கபிலர்.
முல்லை       பேயனார்
மருதம்         ஒரம்போகியார்
நெய்தல்         அம்மூவனார்
பாலை         ஓதலாந்தையார்

*மறுதரவுப்பத்து இடம்பெறும் நூல்.



4. கலித்தொகை:-

*ஏறுதழுவுதல் பற்றி கூறும் நூல்.
*நாடகப்பாங்கில் அமைந்த நூல்.
*’கலிட்பா’வால் அமைந்த நூல்
*கடவுள் வாழ்த்து பாடியவர்-நல்லந்துவனார்.
*முதன்மை கடவுள் – சிவன்.
*பெறுந்திணைப்பாடல் இடம்பெறும் சங்ககால நூல்.

 5. அகநானூறு:-

*’அகவட்பா’வால் அமைந்த நூல்
*13 அடி சிறுமை 31அடி பெருமை.
*3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1-கலிற்றுயானை நிறை(1-120 பாடல்கள்)
2-மணிமிடைப்பவளம்(121-300 பாடல்கள்)
3-நித்திலக்கோவை(301-400 பாடல்கள்)
*ஓர் ஒழுங்குமுறையில் தொகுக்கப்பட்ட ஒரே நூல் அகநானுறு.
* குறிஞ்சி    2,8,18…….
* முல்லை   4,14,24,…….
* மருதம்     6,16,26……….
* நெய்தல்   10,20,30……..
* பாலை      1,3,5,7,9…….

* இந்நூலில் குடவோலை தேர்தல் பற்றி கூறப்பட்டுள்ளது.
*வேறுபெயர்-நெடுந்தொகை.


6.புறநானூறு:-

*வெட்சி,கரந்தை முதலிய புறத்திணைகள் பற்றி 400 பாடல்கள் உடையது.
*’அகவட்பா’வால் அமைந்த நூல்
கடவுள் வாழ்த்து பாடியவர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்.
*4 அடி சிறுமை 40 அடி பெருமை.
*G.U.போப் இந்நூலின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
*தமிழர் வாழ்வின் வெற்றியை காட்டும் கண்ணாடி.
*திணைகள்-11.
*துறைகள்-65.
*வேறுபெயர்-புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.

*முக்கிய பாடல் வரிகள்:

-“எத்திசை செல்லினும் அத்திசை சோறே”
-“உண்பது நாழி உடுப்பது இரண்டே”
-“உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தாரே”
-“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே”

7. பதிற்றுப்பத்து:-

*10 சேரமன்னர்களைப்பற்றி 10 பாடல் வீதம் 100 பாடல்கள் கொண்டுள்ளது.
*முதல் 10ம் இறுதி  10 ம் கிடைக்கவில்லை.
*முழுவதும் பாடாண்திணையால் அமைந்த நூல்.

8. பரிபாடல்:-

’ஓங்கு’ எனும் அடைமொழி கொண்டநூல்.
* தொல்காப்பியர் கூறும் பாவகையில் ஒன்று.
தமிழில் தோன்றிய முதல் இசைப்பாடல்.
‘கிண்று’ எனும் காலம் காட்டும் இடைநிலை முதன்முதலில் இந்நூலில் தான் கானப்படுகிறது.
*மதுரையின் அழகை தாமரைக்கு ஒப்பிட்டுள்ளது.
*70 பாடல்கள் உடையது.ஆனால் 22 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
*வேறுபெயர் – பொருட்கலவை நூல்.


Share:

4 comments:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *