TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் - ஏழாம் வகுப்பு - 3 | Samacheer Kalvi Tamil Notes



6-ம் வகுப்பு பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .

7-ம் வகுப்பு முதல் பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள்.

7-ம் வகுப்பு , இரண்டாம் பதிவினைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .


15.நால்வகைச்சொற்கள்

·         தனியாக வராமல் , பெயர் மற்றும் வினைச்சொற்களை சார்ந்து வரும்  சொற்கள் – இடைச்சொல் .
·         செய்யுளுக்கே உரிமை பெற்று வரும் சொற்கள் – உரிச்சொல் .

16.இரட்டுற மொழிதல்

·         ஆசிரியர் – காளமேகப்புலவர்
·         இயற்பெயர் – வரதன்
·         ஊர் – கும்பகோணம் (அ) விழுப்புரம் என்ற கருத்து நிலவுகிறது .
·         இவர் வைணவத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறியவர் .
·         திருவரங்க மடப்பள்ளியில் சிறிதுகாலம் வேலைப்பார்த்தவர் .
·         ஆடுபரி – ஆடுகின்ற குதிரை ,
·         பரிவாய் – அன்பாய் , குதிரையின் வாய்
·         துன்னலர் – பகைவர் , அழகிய மலர்
·         ‘தனிப்பாடல் திரட்டை தொகுத்தவர்’ – சந்திரசேகர கவிதாசப்பண்டிதர் . தொகுப்பித்தவர் – ராமநாதபுரம் பொன்னுசாமி .
·         ‘கற்றது கைம்மண்ணளவு , கல்லாதது உலகளவு’ என்று பாடியவர் – ஔவை .

17.காந்தியடிகள் கடிதம்

·         இக்கடிதம் , 1917 ல் குஜராத்தில் புரோச் எனும் நகரில் நடந்த , இரண்டாம் கல்வி மாநாட்டில் காந்தியடிகள் பேசியதைத் தழுவி , பாடபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது .

18.சிந்தனைச்செல்வம்

·         ஆசிரியர் – திருமுருக கிருபானந்த வாரியார் .

19.இடுகுறி , காரணப்பெயர்கள்
·         தமிழில் மிகுதியாக உள்ள பெயர்கள் – காரணப்பெயர்கள்
·         மரங்கொத்தி – காரண சிறப்புப்பெயர்

20.திருவாரூர் நாண்மணிமாலை

·         ஆசிரியர் – குமர குருபர்
·         பெற்றோர் – சண்முகசிகாமணி கவிராயர் , சிவகாமசுந்தரி .
·         வேறுநூல்கள் – நீதிநெறிவிளக்கம் , மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழ் , கந்தர் கலிவெண்பா , முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் , மதுரைக்கலம்பகம் ,
·         காலம் – 17ம் நூற்றாண்டு .
·         திருவாரூர் நாண்மணிமாலையில் உள்ள மொத்த பாடல்கள் – 40 .
·         நாண்மணிமாலை – முத்து,பவளம், மரகதம்,மாணிக்கம் .
·         அதேபோல் இந்நூலில் உள்ள நால்வகைப்பா – வெண்பா , ஆசிரியப்பா, கட்டளை கலித்துறை, ஆசிரியவிருத்தம் .
·         தென்மலை – தெற்கிலுள்ள திருவாரூர் , பூங்கோயில் – திருவாரூர்க்கோவில் .

21.மெய்ப்பொருள் கல்வி


·         ஆசிரியர் – வாணிதாசன்
·         இயற்பெயர் – எத்திராசலு (அ) அரங்கசாமி .
·         பெற்றோர் – திருக்காமு , துளசியம்மாள்
·         சிறப்புப்பெயர் – கவிஞரேறு , பாவலர்மணி , தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்
·         ஊர் – புதுவையை அடுத்த வில்லியனூர் .
·         காலம் – 22.07.1915 - 07.08.1974
·         மெய்ப்பொருள் கல்வி என்பது , இவரின் குழந்தை இலக்கியம் என்ற நூலில் வரும் ஒரு பாடல் ஆகும் .

22.தூங்கா நகர்


·         தூங்கா நகரம் எனப்படுவது – மதுரை
·         தமிழ்நாட்டின் இரண்டாம் பெரிய நகரம் - மதுரை
·         தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம்  - மதுரை
·         ‘தமிழ்க்கெழு கூடல்’ என்று புறநானூறு பாராட்டிய நகரம் – மதுரை
·         ‘தாங்கரு மரபின் மகிழ்நனை மதுரை ’ என்ற நூல் – சிறுபாணாற்றுப்படை
·         ‘ஆலவாய் என்பது மதுரை’ என்ற நூல் – திருவிளையாடற்புராணம்
·         மதுரையில் ஆடைகள் விற்கும் பகுதி – அறுவை வீதி
·         தானியக்கடை பகுதி – கூலவீதி
·         பொற்கதைகள் இருக்கும் வீதி – பொற்வீதி
·         மன்னர்கள் வாழும் வீதி – மன்னவர் வீதி
·         அந்தணர்கள் வாழும் வீதி – மறையவர் வீதி
·         ‘சேரநாடு வேழமுடைத்து , சோழநாடு சோறுடைத்து , பாண்டிய நாடு முத்துடைத்து , தொண்டை நாடு – சான்றோர் உடைத்து ‘ என்பது பழமொழி .
·         அரிமர்த்தணப்பாண்டியனிடம் அமைச்சராய் பணியாற்றியவர் – மாணிக்கவாசகர்
·         குமரகுருபரர்க்கு , மீனாட்சியம்மையே சிறுபிள்ளையாக வந்து , முத்தமணிமாலை பரிசளித்தது , மதுரையில் .
·         மதுரையில் 4-வது தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர் – பாண்டித்துரை
·         திருஞானசம்பந்தர்  , கூன்பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர் .
·         மீனாட்சி கோவிலின் பழமையான கோபுரம் – கிழக்குக்கோபுரம்
·         மீ.கோவில் கோபுரங்களில் உயரமானது – தெற்கு கோபுரம் (160.9 அடி , 1511 சுதை உருவம் உள்ளது )
·         மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது – நாயக்கர் மஹால் (தூண்கள் 82 அடி உயரம் , 19 அடி சுற்றளவு)


24.கண்ணதாசன்
·         ஊர் – சிறுகூடல் பட்டி
·         காலம் – 1927 – 1981
·         இயற்பெயர் – முத்தையா
·         வேறுபெயர் – காரைமுத்துப்புலவர் , வணங்காமுடி , பார்வதிநாதன் , ஆரோக்கியநாதன் , கமகப்பிரியா

25. ஏர்முனை


·         ‘ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமில்லை ’ எனப்பாடியவர் -  மருதகாசி
·         திரைக்கவித்திலகம் என அழைக்கபடுபவர் –மருதகாசி
·         ஊர் – திருச்சி யில் உள்ள மேலகுடிக்காடு
·         பெற்றோர் – அய்யம்பெருமாள் , மிளகாயி அம்மாள் .
·         முட்டு என்பதன் பொருள் – குவியல்
·         இவரின் காலம் – 13.02.1920 – 29.11.1989

26.பொங்கல் வழிபாடு


·         ஆசிரியர் – ந பிச்சமூர்த்தி .
·         இயற்பெயர் – ந. வேங்கடலிங்கம்
·         ஊர் – கும்பகோணம் , தஞ்சை  .
·         காலம் – 15.08.1900 – 04.12.1976
·         இவர் வழக்குரைஞராக பணியாற்றிய காலம் – 1924 -1938 (14 ஆண்டுகள்)
·         கோவில் நிர்வாக அலுவலராய் இருந்த காலம் – 1938 -1954 (16 ஆண்டுகள்)
·         கனகம் – பொன் , நிவேதனம் – படையமுது , கடுகி – விரைந்து .
·         ‘பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர்’ – ந.பிச்சமூர்த்தி .

27. நெசவு
·         ‘பூக்களில் சிறந்த பூ , பருத்திப்பூ’ என்றவர் – திரு.வி.க
·         பாவுநூல் , ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை – கலிங்கம்
·         திருப்பூர் – பின்னலாடை
·         மதுரை – சுங்குடிப்புடவை
·         உறையூர் – கண்டங்கி
·         காஞ்சி – பட்டு
·         சென்னிமலை – போர்வை 

இதன் தொடர்ச்சியைப்படிக்க இங்கே அழுத்துங்கள் .



Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *