TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் புத்தகம் – எட்டாம் வகுப்பு – 2 | Samacheer Kalvi 8th Std Books



6-ம் வகுப்பு தமிழ் படிக்க இங்கே அழுத்தவும்
7-ம் வகுப்பு தமிழ் பாடம் படிக்க இங்கே அழுத்தவும்

முந்தைய பாகம் படிக்க இங்கே அழுத்தவும்

6. இனியவை நாற்பது


·         ஆசிரியர் – பூதஞ்சேந்தனார்
·         ஊர் – மதுரை
·         காலம் – கி.பி. 2ம் நூற்றாண்டு
·         ‘குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே ’ – இனியவை நாற்பது
·         சலவர் – வஞ்சகர் , சுழறும் – பேசும் , குழவி – குழந்தை .

7. அகரமுதலி வரலாறு



·         தமிழ் அகரமுதலிகளுக்கு செம்பாதி இடத்தைப்பெறும் சொற்பொருள்துறை நூல்கள் – நிகண்டுகள்
·         நிகண்டுகளில் பழமையானது – சேந்தன் திவாகரம் .
·         சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் – திவாகரர் .
·         25 நிகண்டுகளில் சிறப்பானது – சூடாமணி நிகண்டு
·         சூடாமணி நிகண்டின் ஆசிரியர் – மண்டல புருடர் .
·         ‘அகராதி’ எனும் சொல் முதன்முதலில் இடம்பெற்ற நூல் – திருமந்திரம்
·         ‘அகரமுதலி’கள் தோன்ற திருப்புமுனை – அகராதி நிகண்டு
·         தமிழில் தோன்றிய முதல் அகராதி  - சதுரகராதி
·         சதுரகராதி எழுதியவர் – வீரமாமுனிவர் , 1732 ஆம் ஆண்டு
·         வீரமாமுனிவர் எழுதிய அகராதிகள் மொத்தம் – 5
1.   தமிழ் – லத்தின்
2.   தமிழ் – பிரெஞ்ச்
3.   லத்தின் – தமிழ்
4.   பிரெஞ்ச் – தமிழ்
5.   போர்த்துகீசு – தமிழ்
·         தமிழ் – தமிழ் அகராதியைமுதன்முதலில் எழுதியவர்கள் – லெவி ,ஸ்பாஸ்டிஸ் .
·         தமிழ் சொல்லகராதியை முதன்முதலில் இயற்றியவர் – யாழ்ப்பாணம் கதிரைவேலனார் .
·         தமிழ் பேரகராதியை எழுதியவர் – குப்புசாமி
·         படங்களுடன் கூடிய அகராதியை முதன்முதலில் வெளியிட்டவர் – ராமநாதன் .
·         தற்காலத்தமிழ் சொல்லகராத்தியை வெளியிட்டவர் – பவானந்தர் (1925)
·         முதன்முதலில் தமிழ் – ஆங்கிலம் பேரகராதியை உருவாக்கியவர் – வின்சுலோ
·         1985 – ல் தமிழ் – தமிழ் அகரமுதலியைத் தந்தவர் – மு. சண்முகம்
·         20 – ஆம் நூற்றாண்டின் பெரிய அகரமுதலி – தமிழ் லெக்சிகன் (சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட இந்த அகரமுதலி 6 தொகுதிகளை உடையது .)
·         1985 , தேவநேயப்பாவணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகராதியின் முதல் தொகுதி வெளிவந்தது .1993 – 2 ஆம் தொகுதி .
·         படங்களுடன் வெளிவந்த இரண்டாம் பேரகராதி – செந்தமிழ் சொற்பிறப்பியல் 2ஆம் தொகுதி .
·         முழுமையான கணினி உதவியுடன் உருவாக்கப்பட்ட தமிழ்அகராதி – கிரியாவின் தற்கால தமிழ் அகராதி . (விளக்கச்சொற்பொருளுடன் வந்த முதல் அகராதி)
·         தமிழ் கலைக்களஞ்சியங்களின் முன்னோடி – அபிதானகோஷம் .
·         இலக்கிய , புராண, இதிகாச செய்திகளைக்கொண்டு இலக்கிய களஞ்சியமாகத்திகழ்வது – அபிதானகோஷம்  (1902).
·         இலக்கியச்செய்திகளோடு , அறிவியல் துறைப்பொருட்களும் முதன்முதலாக சேர்ந்து விளக்கம் தந்த கலைக்களஞ்சியம் – அபிதான சிந்தாமணி .
·         அபிதான சிந்தாமணியைத்தொகுத்தவர் – சிங்காரவேலனார் , 1934 .
·         அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச்சொல் அகரமுதலியை வெளியிட்டவர் – மணவை முஸ்தபா , 1991 .
·         ‘அகரமுதலி ஒன்றை படித்து வருவாய்
நிகரில்லா சொல் ஒன்றை நினைவில் கொள்வாய்’ – எனப்பாடியவர் – பாரதிதாசன் .

10. திருவள்ளுவ மாலை
·         நெல்குத்தும்போது பெண்களால் பாடப்படும் பாட்டின் பெயர் – வள்ளை .
·         அளகு – கோழி
·         ‘திணையளவு போதா சிறுபுல்நீர்’ எனப்பாடியவர் – கபிலர் (திரவள்ளுவ மாலையில் 3வது பாடல்)
·         இப்பாடலில் அறிவியல் அணுகுமுறை உள்ளது .

11. நளவெண்பா

·         ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
·         ஊர் – பொன்விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
·         காலம் – 12 ம் நூற்றாண்டு
·         இவர் வரகுணப்பாண்டியனிடம் அவைப்புலவராய் இருந்தார் .
·         இவரை ஆதரித்த வள்ளல் – சந்திரன் சுவர்க்கி .
·         ‘வெண்பாவிற்கு புகழேந்தி’ எனப்போற்றப்படுபவர் –புகழேந்திப்புலவர் .
·         நளவெண்பா – 3 காண்டம் , 431 வெண்பாக்களை கொண்டது .
1.   சுயம்வரகாண்டம்
2.   கலிதொடர் காண்டம்
3.   கலிநீக்கு காண்டம்
·         நிடத நாட்டு மன்னன் நளன் , விதர்ப்ப நாட்டு இளவரசி – தமயந்தி
·         ஆழி- கடல் , விசும்பு – வானம் , செற்றான் – வென்றான் , பிள்ளைக்குருகு – நாரை , வள்ளை – ஒருவகை நீர்ச்செடி , வௌவி – கவ்வி , திரை – அலை , மேதி – எருமை , புள் – அன்னம் , சேடி – தோழி , கடிமாலை – பனைமாலை , சூழ்விதி – நல்வினை , தார் – மாலை , காசினி – நிலம் , வௌகி – நானி , ஒண்தாரை – ஒளிமிக்கமாலை , மல்லல் – வளம் , மடநாகு – இளம்பசு ,மழவிடை – இளம்காளை , மறுகு – அரசவதி .

12. உலகம் உள்ளங்கையில்


·         20-ம் நூற்றாண்டின் பெரும் கண்டுபிடிப்பு – கணினி
·         கணினியைக்கண்டுபிடித்தவர் – சார்லஸ் பாபேஜ் (1833)
·         கணினி உருவாக காரணம் மணிச்சட்டம் .
·         கணக்கிடும் கருவியைக்கண்டறிந்தவர் – ப்ளேஸ் பாஸ்கல் (பாரிசு)
·         கணினியின் முதல்செயல்திட்ட வரைவாளர் – லவ்வேஸ் .
·         ஹோவர்டு ஜோகன் கண்டறிந்த எண்ணிலக்க கருவி – ஹார்வார்டு மார்க் 1 .
·         இனையம் எனும் வடிவத்திற்கு வித்தட்டவர் – ஜான் பாஸ்டல் (1960 , அமெரிக்கா )
·         1989 ல் , www எனப்பெயர் வைத்த ஸ்விஸ்நாட்டு இயற்பியல் அறிஞர் – பிம்பர்னலி .
·         www – என்றால் – வையக வலை விரிப்பு .

·         ‘கடந்த 20 ஆண்டு கனிணிப்பயணத்தில் இணையத்தின் பங்குமிகச்சிறப்பானது ‘ என்று கூறியவர் – பில்கேட்ஸ் .
Share:

2 comments:

  1. உலகம் உள்ளங்கையில்... தொடர்கிறேன்...

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *