TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

TNPSC தேர்வுகளில் , ஜெயிக்கலாம் வாங்க - 1





வணக்கம் நண்பர்களே !!!


TNPSC தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கை நம்முள் பலருக்கு இருக்கும் . காரணம் , இன்றைய சூழ்நிலை அப்படி .என்னதான் முட்டிமோதி கல்லூரியில் படித்தாலும் , வேலை என்று ஒன்று கிடைப்பது பெரும்பாடாகவே உள்ளது . அதையும் தாண்டி கிடைக்கும் வேலையை செய்ய நம் மனம் ஒப்பிவில்லையாயினும் செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் . என் நண்பர்களுல் பலர் என்ஜினியரிங் முடித்துவிட்டு , ஒரு ITI மாணவன் செய்யும் வேலைக்கு விண்ணப்பித்து , 4000 , 5000 சம்பளத்துடன் வேலைக்கு செல்கிறார்கள் . MCA / MBA முடித்தவர்களின் நிலையோ அதைவிடக்கேவலம் . வேறுவழியே இல்லாமல் , மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்து , மார்க்கெட்டில் கூவி விற்பதுபோல பொருள்களை விற்றுக்கொண்டிருக்கிறார்கள் .

அத்தகைய நிலையில் இருக்கும் நண்பர்கள் , TNPSC தேர்வில் படித்து வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கிறார்கள் . இன்னும் வேலை கிடைக்காமல் , வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் படிக்கலாமே என்ற எண்ணம் கொண்டவர்கள் , இல்லத்தரசிகள் என்று பலரின் சிந்தனை TNPSC-ன் பக்கமே உள்ளது . அத்தகைய TNPSC தேர்வில் வெற்றிபெற , என்னால் முடிந்த சில ஆலோசனைகளை வழங்குகிறேன் .

1 . அரசுவேலைதான் உங்களுக்குவேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருங்கள் . அதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கஷ்டப்பட்டு இஷ்டத்துடன் படிக்க ஆரம்பியுங்கள் .

2. சோம்பேறித்தனத்தை ஒழித்து மூட்டைக்கட்டுங்கள் . வேலை கிடைத்தபின் , எப்படியும் தானாக அந்த சோம்பேறித்தனத்தை அனுபவித்துக்கொள்ளலாம் . நாளை படிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்கள் , எக்காலத்திலும் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதை மனதில் நிறுத்தி வையுங்கள் .

3. நேரத்தை வீணடிக்காதிர்கள் . உங்களுல் பலர் , குடும்பச்சூழ்நிலையின் காரணமாக , பல்வேறு இடங்களில் வேலை செய்துகொண்டிருப்பீர்கள் .உங்களுக்கு கிடைப்பது மிச்சில மணிநேரங்களாக இருக்கும் . அதை முடிந்தவரை வீணாக்காமல் , படிக்க ஆரம்பியுங்கள் . குடும்பம் முக்கியம்தான் . ஆனால் , அக்குடும்பத்தை காப்பாற்ற , நிலையான கௌளரவமான வேலை தேவை என்பதை மனதில்பதியவைத்துக்கொள்ளுங்கள் .

4. எந்நேரத்திலும் ,எப்படிப்பட்ட மனநிலையிலும் உங்களின் முடிவில் இருந்து மாற்றிக்கொள்ளாதிர்கள் . ஒருமுறை முயற்சித்தேன் , இரண்டுமுறை முயற்சித்தேன் , எழுதிய தேர்வுகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்துவிட்டது என்று மனதை விட்டுவிடாதிர்கள் . தேர்வில் வெற்றிபெறுவதற்கும் ஒரு நேரம் அமையவேண்டும். அந்த பொன்னான நேரத்திற்காக காத்திருப்பதில் எவ்வித குற்றமுமில்லை .

5. உங்களின் நண்பன் , மனைவி ,கணவன் , குழந்தை , பெற்றோர் , உறவினர் என்று யார் என்ன சொன்னாலும்  , முயற்சிப்பதை விட்டுவிடாதிர்கள் . இன்று வசைபாடுபவர்கள் , நாளை உங்களுக்கு வேலை கிடைத்ததும் , பல்லிளித்துக்கொண்டு நிற்பார்கள் . மு்ககியமாக , நண்பர்கள் மற்றும் உறவினர்களின் எகத்தாள பேச்சுகளை காதிலே ஏற்றிக்கொள்ளாதீர்கள் .

6. படிப்பதை , குருட்டு மனப்பாடம் செய்வதெல்லாம் கல்லூரி வரை வேண்டுமானால் பயணளிக்கலாம் . ஆனால் , TNPSC தேர்வுகளில் குருட்டு மனப்பாடம் என்பது , தன் கண்ணையே குருடாக்கிக்கொள்வது போன்றதுதான் . எனவே , முடிந்த வரை புரிந்து படிக்க முயற்சியுங்கள் . (மண்டையில் ஏறமாட்டேங்குதுங்கனு சொல்றவங்க மனப்பாடம் பன்னிடுங்க . ஒரு சில டைம் , அது கை கொடுக்கும் )


7. நாம் என்ன படிக்கவேண்டும் என்பதே தெரியாமல் , 6 முதல் 12 வரை உள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்கவேண்டும் என்ற நினைப்பில் படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் , 6க்கு அடுத்து 7 ஆம் வகுப்பு புத்தகங்களைக்கூட உங்களால் படிக்க முடியாது . தேர்வுக்கான அறிவிப்பு வரும்போது , சிலபஸ் வெளியிடுவார்கள்  . அதில் , என்னென்ன பாடங்கள் படிக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டிருப்பார்கள் .அந்த CHAPTER-களை மட்டும் படித்தால் போதும் . இல்லையேல் ‘வீழலுக்கு இறைத்த நீராகி விடும் ’

8. படிக்கமுடியவில்லை  , வீட்டில் பிரச்சினை , கணக்கு கடினம் , எதை படிப்பது , எப்படி படிப்பது என்ற கேள்விகளால் மனம் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளும் . இந்த பதிவின் இறுதியில் , தமிழ் பாடங்களை எப்படி படிக்கலாம் என்பதை , என் அனுபவத்திலிருந்து தெரிவிக்கிறேன் . அதன்படி முயற்சி செய்துபாருங்கள் .

9. மணமாகாத தோழர் மற்றும் தோழிகளுக்கு ,

மனது அலைபாய்கிறது , காதல் பிரச்சினை , குடும்ப சூழ்நிலை , நண்பர்களிடையே பிரச்சினை என்பதெல்லாம் , நாம் படிக்கும் போது கண்டிப்பாக நம் மனதை அலைபாய வைத்துவிடும் .தேர்வில் வெற்றிபெறும்வரை காதல்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டரும் , நண்பர்களுக்கு மெமோவும் கொடுத்துவிடுங்கள் . குடும்ப பிரச்சினைகளை மனதில் இருந்து ட்ரான்ஸ்பர் செய்துவிடுங்கள் . இதைச்செய்தால் , உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் காத்திருக்கும் .


10  உங்கள் நண்பர்களுடன் அமர்ந்து குழுவா்கப்படிக்கும்போது , அவன் இதைப்படித்துவிட்டாயா ? அதைப்படித்துவிட்டாயா என்று கேள்வி கேட்டால் , அவனை உங்கள் லிஸ்டில் இருந்து தூக்கிவிடுங்கள் . நாம் படிப்பதையும் கெடுத்து , நம்மை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவார்கள்


சரி !!! தமிழ்பாடத்தை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் . மேலே கூறியவற்றை சரியானபடி பின்பற்ற முடியும் என்பவர்கள் , கீழே தொடர்ந்து படிக்கலாம் . இல்லையேல் ‘ஒன் ஸ்டெப் பேக் மேன்’ தான் .

தமிழ்ப்பாடங்களை படிக்கும் முறை


·          6- 12 வரை உள்ள மனப்பாட திருக்குறள்களை  தினம் இரண்டு என்ற வீதம் இப்போதிலிருந்து (இந்த பதிவின் தேதியிலிருந்து) படியுங்கள் . ஒவ்வொரு குறளின் விளக்கமும் , அர்த்தமும் புரிந்து கொண்டு படியுங்கள் . காலையில் படிக்கும் குறள்களை , மாலையில் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள் .

·         வாரம் இரு செய்யுள் பாடல்களை (எ.கா , சிலப்பதிகாரம் , மணிமேகலை , புறநானுறு ETC) மனப்பாடம் செய்யுங்கள் . காப்பியங்கள் வருகின்றன எனில் , பாடப்பகுதியில் இடம்பெற்ற கதையையும் , கதை நிகழும் விவரத்தையும் , கண்டிப்பாக சேர்த்து மனப்பாடம் செய்துகொள்ளுங்கள் . இதையும் இருவேளையும் படிக்கவேண்டும்


·         அடுத்து , செய்யுளில் உள்ள நூல்களின் பெருமைகள் மற்றும் நூலாசிரியரின் சிறப்புகளையும் சேர்த்து செய்யுள் மனப்பாடம் செய்யும்போதே படித்துக்கொள்ளுங்கள் .

·         முதலில் 6 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் தொடங்கி வரிசையாக படியுங்கள் .



·         மிச்சம் உள்ள 5 நாட்களில் , தினம் ஒரு உரைநடைப்பாடம் என்ற கணக்கில் படியுங்கள் . ஒரு பாடம் படித்தாலும் , தெளிவாக படிக்கவும்


இவையனைத்துமே மாத்திரை சாப்பிடுவது போல் , தினமும் காலை ஒருவேளையும் , மாலை ஒருவேளையுமாய்  படிக்கவேண்டும்  . இவ்வாறு படிக்கும்போது , குழப்பங்கள் , சந்தேகங்கள் போன்றவை இருக்காது .

இதில் இலக்கியம் மற்றும் உரைநடையைப்பார்த்தோம் . அடுத்தபதிவில் , இலக்கணம் எவ்வாறு படிப்பது என்பதனை பார்க்கலாம் .


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .

 இப்போது சிலநாள்களாக , என்னுடைய மற்றொரு தளமான விமர்சன உலகம் தளத்தில் , சிறுகதை , தொடர்கதை , சினிமா விமர்சனம் போன்றவைகளை எழுதுவதில் பிஸியாக இருந்ததால் , முன்போல் பதிவிடமுடியவில்லை . இனிவரும் காலங்களில் , தினம் ஒரு பதிவு என்று வெளியிட்டுவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் . தொடர்ந்து ஆதரவளித்துவரும்  நண்பர்களுக்கு நன்றியுடன் 


----மெக்னேஷ் திருமுருகன்




இதன் தொடர்ச்சியை படிக்க இங்கே அழுத்துங்கள்


தொடர்புடைய பதிவுகள்




Share:

1 comment:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *