TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

பின் வேதகாலம் (அ) இதிகாச காலம்



கி.மு 1000 முதல் கி.மு 600 வரை

·         யஜூர், சாம , அதர்வண வேதங்கள் , பின்வேதகாலத்தில் வெளிவந்தன.

·         யஜூர்வேதம் , யாகங்கள் செய்யப்படும்போது , பாடப்படும் பாடல்களின் தொகுப்பு .

·         சாம வேதம் , இசைப்பாடல்களின் தொகுப்பு.


·         அதர்வண வேதம் , மந்திரம் , தந்திரம் மற்றும் மருத்துவம் பற்றி கூறும் வேதம் .

·         ஆரண்யங்கள் என்பவை , காட்டில் எழுத்தப்பட்ட இலக்கியங்கள் ஆகும்

.
·         பிராமாணங்கள் என்பவை , யாகங்கள் செய்யும் குருக்களுக்கு வழிகாட்டும் நூல் ஆகும்.

·         இந்து மத தத்துவங்களை கொண்ட நூல் , உபநிடதங்கள் எனப்படும் .


·         பகவத் கீதை
§  சிறந்த தத்துவநூல்
§  18 பாகங்களை உடையது .

·         உபநிடதங்கள் என்றால் , ஆசிரியர்முன் அமர்ந்துகற்றல் எனப்பொருள் .

·         கோசலம் , விதேகம் , மகதம் , காசி , பாஞ்சாலம் போன்ற ஜனாக்கள் தோன்றின .


·         இக்காலத்தில் , ஆரியர்கள் , சப்தசிந்துவிலிருந்து கங்கைச்சமவெளியை நோக்கி சென்றார்கள் .

·         பெண்களின் மதிப்பு குறையத்தொடங்கியது.


·         ஆனால் , கார்கி , மைத்ரேயி போன்ற பெண்கள் , கல்வியில் சிறந்து விளங்கினர் .

·         அரசர்கள் தங்கள் பதவிக்காக , ராஜசுயம் , வாஜ்பேயம் , போன்ற போட்டிகளையும் அஸ்வமேத யாகங்களும் செய்தனர் .


·         ஏக்ராட் , சாம்ராட் , சர்வபௌவா போன்ற பட்டங்களை அரசர்கள் சூட்டிக்கொண்டனர்.

·         வர்ணம் எனும் சாதி அமைப்பு , இக்காலத்தில் தான் தோன்றியது .


·         ஒரு தனிமனிதனின் வாழ்க்கை நிலையை ஆசிரமம் என்று 4 நிலைகளாக பிரிக்கின்றனர் .
§  பிரம்மச்சாரியம்      -     மாணவப்பருவம்
§  கிரகஸ்தம்          -     குடும்பநிலை
§  வனப்பிரஸ்தம்      -     துறவு நிலை
§  சந்நியாசம்          -     முற்றும் துறந்த நிலை

·         பார்லி , அரிசி போன்றவை முக்கிய உணவாக இருந்தன.

·         இக்காலத்தில் ஸ்மிருதி இலக்கியங்களில் ,6 தலைப்புகளில் நூல்கள் எழுதப்பட்டன.
1.   தரமசாஸ்திரம்
2.   ஜோதிட சாஸ்திரம்
3.   இலக்கணம்
4.   சொற்பிறப்பியல்
5.   ஒவியியல்
6.   அளவியல்

·         வேதங்களிலிருந்து உபவேதங்கள் தோன்றின.

·         அதர்வண வேதத்தின் உபவேதம் ஆயூர்வேதம்


·         யஜூர் வேதத்தின் உபவேதம் தனூர்வேதம் (போர் பயிற்சி)

·         சாம வேதத்தின் உபவேதம் காந்தார்வ வேதம் (பாடல்கலை)


·         சில்பவேதம் எனும் துணை வேதம் , கட்டிடக்கலை பற்றி கூறுகிறது.

·         பின்வேதகாலத்தில் , நிக்ஷா , சதமனா , கிருஷ்ணலம் போன்ற நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.


·         சதிப்பழக்கம் பற்றி கூறும் வேதம் அதர்வணவேதம் .

·         ஒர் உயர்ஜாதி ஆண், தாழ்ஜாதிப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் முறைக்கு பெயர் , அனுலோமா திருமண முறை


·         உயர்ஜாதி பெண் , தாழ்ஜாதி ஆணை திருமணம் செய்து கொள்ளும் முறைக்கு பிரதிலோமா எனப்பெயர்.

·         குழந்தையில்லா விதவை , இறந்த கணவனின் தம்பியுடன் வாழும் முறைக்கு , நியோகா எனப்பெயர் .


·         மேலும் பலதார மணம் , சிறார் மணம் , விதவை மறுமணம் அனுமதிக்கப்பட்டது.



இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள் .




தொடர்பான இடுகைகள்

தொடர்புடைய பதிவுகள்








விமர்சன உலகம் தளத்தில் தற்போதைய பதிவுகள்




Share:

1 comment:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *