TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - கண்ணதாசன்

கண்ணதாசன்

·         பிறப்பு – 24.06.1927 , ஊர் – சிறுகூடல்பட்டி (சிவகங்கைமாவட்டம்)
·         பெற்றோர் – சாத்தப்பன் , விசாலாட்சி .
·         இயற்பெயர் – முத்தையா
·         வளர்ப்புத் தாய் , தந்தை – தெய்வானை , நாராயணன் .
·         கங்கை – காவிரி திட்டம் குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்னபே தெளிவுபடுத்திய கவிஞர்.
·         பாரதிகண்ட கனவுத்திட்டமான சேது சமுத்ததிர கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற பாடிய கவிஞர் .
·         இவரை திரைப்பட உலகினுக்கு அறிமுகப்படுத்தியவர் – ராம்நாத் .
·         கண்ணதாசன் எழுதிய முதல் திரைஇசைப்பாடல் – ‘கலங்காதிரு மனமே’ (கன்னியின் காதல் திரைப்படம்)
·         இறுதியாக எழுதிய திரை இசைப்பாடல் ‘கண்ணே கலைமானே’ (திரைப்படம் - மூன்றாம்பிறை)
·         கண்ணதாசன் கவிதைகள் எனும் நூல் வெளிவந்த ஆண்டு 1959 .

பரிசும் பாராட்டும்

·         இந்தியாவின் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது 1969
·         தமிழக அரசின் அரசவைக் கவிஞர் 1978
·         அண்ணாமலை அரசர் நினைவுப்பட்டம் 1979
·         சேரமான் காதலி எனும் நாவலுக்கு 1979-ல் சாகித்திய அகாதமி .
·         கவியரசு என்று அழைக்கப்பட்டார் .
·         தன் இறப்பிற்காக இரங்கற்பா பாடியவர்
·         இயற்றமிழ் கவிஞர் என்றழைக்கப்பட்டார் .
·         சிறுகூடல்பட்டியில் தோன்றிய பாட்டுப்பறவை .
·         காதல் , தத்துவம் பாடுவதில் வல்லவர் .

சிறந்த நூல்கள்

·         அர்த்தமுள்ள இந்துமதம் , ஆட்டணந்தி ஆதிமந்தி
·         மாங்கனி , தைப்பாவை , தேர் திருவிழா ,
·         கல்லக்குடி மாகாவியம் , வேளங்குடித் திருவிழா
·         ஆயிரம்தீவு அங்கையற் கன்னி, சிவகங்கைச் சீமை
·         ராச தண்டனை (கம்பர் – அம்பிகாபதி வரலாற்றைக் கூறும் நூல்)
·         சேரமான் காதலி (சாகித்ய அகாதமி)
·         ஏசு காவியம் (இறுதியாக எழுதிய நூல்)

வாழ்க்கைச் சரிதம்

·         எனது வசந்தகாலம்
·         வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.வில் இணைந்தது வரை)
·         மனவாசம் (காங்கிரஸ் கட்சியில் இருந்த காலம்)
·         எனது சுயசரிதம் (வனவாசத்தில் விடுபட்ட பகுதி)

மறைவு

·         அமெரிக்கவாழ் தமிழர்கள் அழைப்பை ஏற்று டெட்ராய்டு நகர் தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொண்ட போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகாகோ நகர மருத்துவ மனையில் 17.10.1981-ல் மரணம் அடைந்தார் .
·         மணிமண்டபம் – காரைக்குடி .

சிறந்த தொடர்கள்

·         உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
·         செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசைத்தொடுப்பேன் .
·         போற்றுவார் போற்றட்டும் ; புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்.
·         சாவே ! உனக்கு ஒருநாள் சாவு வந்து சேராதா ? (நேருவின் மறைவுக்கு பாடிய பாடல்)
·         வீடுவரை உறவு , வீதிவரை மனைவி
·         ஆடையின்றி பிறந்தோம்
ஆசையின்றி பிறந்தோமா ?
·         மாற்றம் எனது மானிட தத்துவம்
·         நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
·         எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்

இல்லாமை இல்லாத நிலை வேண்டும
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *