TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

·         பிறப்பு – 27-08-1876
·         பிறந்த ஊர் – தேரூர் (குமரி மாவட்டம்)
·         பெற்றோர் – சிவதானு பிள்ளை , ஆதிலட்சுமி
·         ஆசிரியர் – சாந்தலிங்க தம்பிரான் .
·         தமிழ், மலையாளம் , ஆங்கிலம் என மும்மொழி புலமை பெற்று விளங்கினார் .
·         வெண்பா இயற்றுவதில் வல்லவர் .
·         கவிமணி , எட்வின் அர்னால்டு எழுதிய THE LIGHT OF ASIA என்பதை ‘ஆசியஜோதி’ என்று தமிழாக்கம் செய்து உள்ளார் .
·         கவிமணி , உமர்கயாம் எனும் பாரசீக கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘பீட்ஜெரால்டு’ என்பவரின் கவிதைகளின் வழி , தமிழில் அதனை உமர்கய்யாம் பாடல்கள் என தமிழாக்கம் செய்துள்ளார் .
·         உமர்கயாமின் இயற்பெயர் , ‘கீயாதுதீன் அபுல்பாத் ’ .
·         ரூபாயத் என்பதன் பொருள் நான்கடி செய்யுள் .

சிறப்புப் பெயர்கள்

·         1940- ல் சென்னை மாநில தமிழ்ச்சங்கம் ‘கவிமணி’ எனும் பட்டம் வழங்கியது.
·         குழந்தைக்கவிஞர் ( முதல் குழந்தைக் கவிஞர் – அழ வள்ளியப்பா )

படைத்த நூல்கள்

·         மலரும் மாலையும் , ஆசியஜோதி, உமர்கய்யாம் பாடல்கள், இளந்தென்றல் , பசுவும் கன்றும் , குழந்தைச்செல்வம் .
·         நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் – எள்ளல் நூல் .
·         காந்தளூர்ச்சாலை – வரலாற்று நூல் .
·         தேவியின் கீர்த்தனைகள் – இசைப்பாடல் .

மறைவு

·         26-09-1954 அன்று கவிமணி மறைந்தார் .
·         கவிமணியின் கவிதைகளை புரிந்து கொள்வதற்கு பண்டிதராக வேண்டியதில்லை , படிக்கத் தெரிந்த எவரும் பொருள்கொள்ளத்தக்க எளிய நடை
-    டி.கே.சண்முகம்
·         தேசிகவிநாயகத்தின் கவிப்பெருமை , தினமும் கேட்பது என்செவி பெருமை
-    நாமக்கல் கவிஞர் .


சிறப்புத்தொடர்கள்

·         தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதோறும் சிலப்பதிகாரம் .
·         மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திடல் வேண்டுமம்மா .
·         செந்தமிழ்ச் செல்வ திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்.
·         நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதி தொழுது எழுக ஓர்ந்து.
·         உள்ளத்தில் உள்ளது கவிதை – இன்ப ஊற்றெடுப்பது கவிதை .
·         வெயிற்கேற்ற நிழலுண்டு வீசுந்தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு .
·         தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கு
துள்ளிக்குதிக்குது கன்றுக்குட்டி .
·         எவர் உடம்பிலும் சிவப்பே இரத்தம் நிறமப்பா
எவர் விழிக்கும் உவர்ப்பே இயற்கை குணமப்பா
·         ஓடும் உதிரத்தில் வடிந்தொழும் கண்ணீரில்
தேடிப்பார்த்தாலும் ஜாதிகள் தெரிவதில்லை .
·         சாலைகளில் பலதொழில்கள் பெருகவேண்டும்

சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும் .
Share:

1 comment:

  1. அருமையான தகவல் நன்றி

    ReplyDelete

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *