TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

வைணவமும் தமிழும்


  •  வைணவக்கடவுளைப்போற்றி பாடுவது மங்களாசாசனம் செய்தல் எனப்படும். இதைப்பாடியவர்கள் ஆழ்வார்கள்.
  • இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர் ஆவார்கள்.
  • இப்பாடல்களின் தொகுப்பு நாலாயிரந்திவ்விய பிரபந்தம் எனப்படும்.
  • இப்பாடல்களைத்தொகுத்தவர் நாதமுனிகள்.
  • இதற்கு உரையெழுதியவர் பெரியவாய்ச்சான் பிள்ளை ஆவார் . இவர் வியாக்கியான சக்கிரவர்த்தி என்று புகழப்படுகிறார்.
  •  நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தின் வேறுபெயர்கள் -  தீந்தமிழ்ப்பனுவல், அருந்தமிழ் பனுவல், திராவிட சாகரம்.

ஆழ்வார்கள்

ஆழ்வார்கள்
நூல்கள்
பொய்கையாழ்வார்
முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார்
இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார்
மூன்றாம் திருவந்தாதி
திருமழிசையாழ்வார்
நான்முகன் திருவந்தாதி ,
திருச்சந்த விருத்தம்
பெரியாழ்வார்
திருப்பல்லாண்டு ,
பெரியாழ்வார் திருமொழி
ஆன்டாள்
திருமொழி () நாச்சியார் திருமொழி , திருப்பாவை
திருப்பாணாழ்வார்
அமலநாதிப்பிரான்
நம்மாழ்வார்
திருவாய்மொழி , திருவாசிரியம் , திருவிருத்தம் , பெரியதிருவந்தாதி
மதுரகவி ஆழ்வார்
கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கையாழ்வார்
பெரியதிருமடல் , சிறிய திருமடல் , குறுந்தாண்டகம் , பெருந்தாண்டகம் , பெரிய திருமொழி , திருவெழுங்கூற்றறிக்கை
தொண்டரடி பொடியாழ்வார்
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி
குலசேகர ஆழ்வார்
பெருமாள் திருமொழி , முகுந்தமாலை (வடமொழிநூல்)

  ·         பொய்கை , பூதம் , பேய் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என      அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூவரும் சந்தித்த இடம் திருக்கோவிலூர் .

ஆழ்வார்கள்
வேறுபெயர்கள்
திருமழிசையாழ்வார்
சக்கரத்தாழ்வாழ்வார் , பக்திசாகரர் , திராவிட ஆச்சாரியார்
பெரியாழ்வார்
விஷ்னுசித்தர் , பட்டர்கிராம் , வேயர்கோண்
ஆன்டாள்
சூடிக்கொடுத்த சுடர்கொடி , வைணவம் தந்த செல்வி , நாச்சியார்
நம்மாழ்வார்
சடகோபன் , பராங்குசன் , தமிழ்வேதம் செய்த மாறன் , குருகைக்காவலன்
திருமங்கையாழ்வார்
கலியன் , கலிநாடன் , அருள்மாரி, மங்கையர்கோன் , மங்கையர் வேந்தன்
தொண்டரடி பொடியாழ்வார்
விப்பி நாராயணன்
குலசேகர ஆழ்வார்
கொல்லிக்காவலன் , கூடல்நாயகன்ன , கோழிக்கோ


ஆழ்வார்களின் சிறப்புகள்

பெரியாழ்வார்
  • இவர் பிள்ளைத்தமிழின் முன்னோடி ஆவார். பிள்ளைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
  • மாணிக்கம் கட்டி எனும் இவருடை பாத்துப்பாட்டு, தமிழின் மிகத்தொன்மையான தாலாட்டுப்பாடலாகும்.
          ஆண்டாள்
  •    வில்லிப்புத்தூரில் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  •      பெரியாழ்வாரின் வளர்ப்புமகள். பெரியாழ்வார் இவருக்கு இட்ட பெயர் கோதை
  •    இவர் பூமகள் ஆம்சமாக பிறந்தவர்.
  •            பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை . இது பாவைப்பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
  •    திருப்பாவையின் பாக்கள் முப்பதும் பொற்சக கலிப்பா வகையைச்சார்ந்தது.
  •   வேதம் அனைத்திற்கும் வித்தாவது திருப்பாவை என ராமானுஜர் கூறுகிறார் திருப்பாவையின் மீதுள்ள ஆர்வத்தால் இவர் திருப்பாவை ஜீயர் எனப்புகழப்படுகிறார் 
  • . ஆன்டாள் எழுதிய திருப்பாவை, நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக உள்ளது .
  •    இவர் திருமாலை மணம் செய்வதாக கனாக்கண்டு பாடிய வாரணம் ஆயிரம் என்ற பாடல், இன்றும் தென்கலை வைணவர்களின்ன திருமணத்தின்போது தவறாமல் பாடப்படுகிறது.
  •    இறைவனுக்கும் ஆன்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் () ஸ்ரீரங்கம்
  •    பாவை என்பதன் இலக்கணக்குறிப்பு இருமடி ஆகுபெயர்.
     நம்மாழ்வார்
  •    இவர் இயற்றிய நான்கு நூல்களும் வேதங்களின் சாரம் என்று புகழப்படுகிறது. 
  •   இவரின் திருவாய்மொழி ,திராவிடவேதம் என்றும் தமிழ்மறை ஆதிரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது .

     மதுரகவி ஆழ்வார் 
  •            இவர் திருமாலைப்பாடாமல், தம்குருநாதரான நம்மாழ்வாரை பற்றி பாடியவர்.

       திருமங்கை ஆழ்வார்
  •    இவரின் திருவெழுங்கூற்றறிக்கை, சொல்லணியில் அமைத்துப்பாடப்பட்ட நூலாகும்.
  • .   மடல் எனும் சிற்றிலக்கிய வகையைத்தொடங்கியவர்.
  •      திருடனாக இருந்து ஆழ்வாராக மாறியவர்.
       குலசேகர ஆழ்வார்
  •    இவர் சேரமன்னர் மரபில் வந்த ஆழ்வார்.
  •      திருவாஞ்சிக்களத்தில் , கி.பி9 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
  •    இவர் கௌத்துவமணியின் அம்சமாக பிறந்தவர்.
  •    நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல்கள் முதல் ஆயிரத்தில் உள்ளது.
  •    இவர் இயற்றிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக்கொண்டது.
  •   இவர் திருவரங்கத்தில், 3வது மதிலைக்கட்டியதால், அவ்வீதிக்கு குலசேகரன் வீதி எனப்பெயர் உண்டாயிற்று .
  •   இவரின் மிகப்பெரிய தாலாட்டுப்பாடலாக இப்போது கிடைத்திருப்பது மண்ணுப்புகழ் என்ற பத்துப்பாட்டு .
  •    மலையில் ஏதேனும் ஒரு பொருளாக இருக்க விரும்பியவர் .

Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *