வைணவமும் தமிழும்
- வைணவக்கடவுளைப்போற்றி பாடுவது மங்களாசாசனம் செய்தல் எனப்படும். இதைப்பாடியவர்கள் ஆழ்வார்கள்.
- இறைவனின் திருவடியில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர் ஆவார்கள்.
- இப்பாடல்களின் தொகுப்பு நாலாயிரந்திவ்விய பிரபந்தம் எனப்படும்.
- இப்பாடல்களைத்தொகுத்தவர் நாதமுனிகள்.
- இதற்கு உரையெழுதியவர் – பெரியவாய்ச்சான் பிள்ளை ஆவார் . இவர் வியாக்கியான சக்கிரவர்த்தி என்று புகழப்படுகிறார்.
- நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தின் வேறுபெயர்கள் - தீந்தமிழ்ப்பனுவல், அருந்தமிழ் பனுவல், திராவிட சாகரம்.
ஆழ்வார்கள்
ஆழ்வார்கள்
|
நூல்கள்
|
பொய்கையாழ்வார்
|
முதல் திருவந்தாதி
|
பூதத்தாழ்வார்
|
இரண்டாம் திருவந்தாதி
|
பேயாழ்வார்
|
மூன்றாம் திருவந்தாதி
|
திருமழிசையாழ்வார்
|
நான்முகன் திருவந்தாதி ,
திருச்சந்த விருத்தம்
|
பெரியாழ்வார்
|
திருப்பல்லாண்டு ,
பெரியாழ்வார் திருமொழி
|
ஆன்டாள்
|
திருமொழி (அ) நாச்சியார் திருமொழி ,
திருப்பாவை
|
திருப்பாணாழ்வார்
|
அமலநாதிப்பிரான்
|
நம்மாழ்வார்
|
திருவாய்மொழி , திருவாசிரியம் ,
திருவிருத்தம் , பெரியதிருவந்தாதி
|
மதுரகவி ஆழ்வார்
|
கண்ணினுள் சிறுதாம்பு
|
திருமங்கையாழ்வார்
|
பெரியதிருமடல் , சிறிய திருமடல் , குறுந்தாண்டகம் ,
பெருந்தாண்டகம் , பெரிய திருமொழி , திருவெழுங்கூற்றறிக்கை
|
தொண்டரடி பொடியாழ்வார்
|
திருமாலை , திருப்பள்ளியெழுச்சி
|
குலசேகர ஆழ்வார்
|
பெருமாள் திருமொழி ,
முகுந்தமாலை (வடமொழிநூல்)
|
·
பொய்கை , பூதம்
, பேய் ஆகிய மூவரும் முதல் ஆழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மூவரும் சந்தித்த இடம் திருக்கோவிலூர் .
ஆழ்வார்கள்
|
வேறுபெயர்கள்
|
திருமழிசையாழ்வார்
|
சக்கரத்தாழ்வாழ்வார் , பக்திசாகரர் ,
திராவிட ஆச்சாரியார்
|
பெரியாழ்வார்
|
விஷ்னுசித்தர் , பட்டர்கிராம் ,
வேயர்கோண்
|
ஆன்டாள்
|
சூடிக்கொடுத்த சுடர்கொடி ,
வைணவம் தந்த செல்வி , நாச்சியார்
|
நம்மாழ்வார்
|
சடகோபன் , பராங்குசன் ,
தமிழ்வேதம் செய்த மாறன் , குருகைக்காவலன்
|
திருமங்கையாழ்வார்
|
கலியன் , கலிநாடன் ,
அருள்மாரி, மங்கையர்கோன் ,
மங்கையர் வேந்தன்
|
தொண்டரடி பொடியாழ்வார்
|
விப்பி நாராயணன்
|
குலசேகர ஆழ்வார்
|
கொல்லிக்காவலன் , கூடல்நாயகன்ன ,
கோழிக்கோ
|
ஆழ்வார்களின் சிறப்புகள்
பெரியாழ்வார்
- இவர் பிள்ளைத்தமிழின் முன்னோடி ஆவார். பிள்ளைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர்.
- மாணிக்கம் கட்டி எனும் இவருடை பாத்துப்பாட்டு, தமிழின் மிகத்தொன்மையான தாலாட்டுப்பாடலாகும்.
ஆண்டாள்
- வில்லிப்புத்தூரில் 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- பெரியாழ்வாரின் வளர்ப்புமகள். பெரியாழ்வார் இவருக்கு இட்ட பெயர் கோதை
- இவர் பூமகள் ஆம்சமாக பிறந்தவர்.
- பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது திருப்பாவை . இது பாவைப்பாட்டு என்றும் வழங்கப்படுகிறது.
- திருப்பாவையின் பாக்கள் முப்பதும் பொற்சக கலிப்பா வகையைச்சார்ந்தது.
- வேதம் அனைத்திற்கும் வித்தாவது திருப்பாவை என ராமானுஜர் கூறுகிறார் திருப்பாவையின் மீதுள்ள ஆர்வத்தால் இவர் திருப்பாவை ஜீயர் எனப்புகழப்படுகிறார்
- . ஆன்டாள் எழுதிய திருப்பாவை, நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் மூன்றாம் பிரபந்தமாக உள்ளது .
- இவர் திருமாலை மணம் செய்வதாக கனாக்கண்டு பாடிய வாரணம் ஆயிரம் என்ற பாடல், இன்றும் தென்கலை வைணவர்களின்ன திருமணத்தின்போது தவறாமல் பாடப்படுகிறது.
- இறைவனுக்கும் ஆன்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் (அ) ஸ்ரீரங்கம்
- பாவை என்பதன் இலக்கணக்குறிப்பு இருமடி ஆகுபெயர்.
நம்மாழ்வார்
- இவர் இயற்றிய நான்கு நூல்களும் வேதங்களின் சாரம் என்று புகழப்படுகிறது.
- இவரின் திருவாய்மொழி ,திராவிடவேதம் என்றும் தமிழ்மறை ஆதிரம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது .
மதுரகவி ஆழ்வார்
- இவர் திருமாலைப்பாடாமல், தம்குருநாதரான நம்மாழ்வாரை பற்றி பாடியவர்.
திருமங்கை ஆழ்வார்
- இவரின் திருவெழுங்கூற்றறிக்கை, சொல்லணியில் அமைத்துப்பாடப்பட்ட நூலாகும்.
- . மடல் எனும் சிற்றிலக்கிய வகையைத்தொடங்கியவர்.
- திருடனாக இருந்து ஆழ்வாராக மாறியவர்.
குலசேகர ஆழ்வார்
- இவர் சேரமன்னர் மரபில் வந்த ஆழ்வார்.
- திருவாஞ்சிக்களத்தில் , கி.பி9 – ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.
- இவர் கௌத்துவமணியின் அம்சமாக பிறந்தவர்.
- நாலாயிரந்திவ்விய பிரபந்தத்தில் இவரது பாடல்கள் முதல் ஆயிரத்தில் உள்ளது.
- இவர் இயற்றிய பெருமாள் திருமொழி 105 பாசுரங்களைக்கொண்டது.
- இவர் திருவரங்கத்தில், 3வது மதிலைக்கட்டியதால், அவ்வீதிக்கு குலசேகரன் வீதி எனப்பெயர் உண்டாயிற்று .
- இவரின் மிகப்பெரிய தாலாட்டுப்பாடலாக இப்போது கிடைத்திருப்பது மண்ணுப்புகழ் என்ற பத்துப்பாட்டு .
- மலையில் ஏதேனும் ஒரு பொருளாக இருக்க விரும்பியவர் .