TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

சமச்சீர் ஆறாம் வகுப்பு கேள்விகள் – தமிழ்




வாழ்த்துப்பாடல்


1.   கண்ணில் கலந்தான் எனும் பாடலை இயற்றியவர்  , ராமலிங்க அடிகளார் .
2.   வேறுபெயர் – ராமலிங்கர் , வள்ளலார் ,
3.   திருவருட்பா – திரு + அருள் + பா
4.   பண் என்றால் பாட்டின் இசை என பொருள் .
5.   ராமலிங்க அடிகளார் பிறந்த இடம் கடலூர் மாவட்டம் மருதூர் .
6.   பெற்றோர் – இராமையா , சின்னம்மை
7.   இவரின் உரைநடை நூல்கள் – மனுமுறை கண்ட வாசகம் , ஜீவகாருண்ய ஒழுக்கம் .
8.   சமரச சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் – ராமலிங்க அடிகளார் .
9.   ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியவர் – ராமலிங்க அடிகளார்.
10. புறட்சித்துறவி என அழைப்படுபவர் – வள்ளலார் .
11. பிறந்த ஆண்டு – 05.10.1823 .
12. ராமலிங்க அடிகள் மறைந்த ஆண்டு – 31 . 1. 1874 .

திருக்குறள்

1.   வள்ளுவரின் காலம் – கி.மு 31 ம் ஆண்டு
2.   ‘வழக்கு’ என்பதன் பொருள் – வாழ்க்கை நெறி
3.   ‘என்பு’ என்பதன் பொருள் – எலும்பு
4.   திருக்குறளில் உள்ள இயல்கள் – 9
5.   திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 .
6.   ஒரே பெயரில் இருமுறை வரும் அதிகாரம் – குறிப்பறிதல் .
7.   திருவள்ளுவர் பயன்படுத்தாத எழுத்து  - ஔ .


தமிழ்த்தாத்தா உ.வே.சா


1.   அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டவை – செய்யுள் , இலக்கணம் .
2.   பனை ஓலையை பக்குவப்படுத்தி , அதில் எழுத்தாணியைக்கொண்டு எழுதுவது  - ஓலைச்சுவடி
3.   ஓலைச்சுவடிகளில் புள்ளி , ஒற்றைக்கொம்பு , இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது .
4.   ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்
·         கீழ்த்திசை சுவடிகள் நூலகம் – சென்னை
·         அரசு ஆவணக்காப்பகம் – சென்னை
·         உலகத்தமிழர் ஆராய்ச்சி  நிறுவனம் –சென்னை .
·         சரசுவதி மஹால் – தஞ்சை .
5.   தமிழ்த்தாத்தா என்றழை்ககப்படுபவர் – உ.வே.சா
6.   குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் – கபிலர் .
7.   குறிஞ்சிக்கோமான் , புலனழுக்கற்ற அந்தணாளன் என அழைக்கப்படுபவர் – கபிலர் .
8.   உ.வே.சா பிறந்த ஊர் – திருவாரூர் மாவட்டத்தில்  உள்ள உத்தமனாதபுரம்
9.   உ.வே.சா வின் இயற்பெயர் – வேங்கடரத்தினம் .
10. உ.வே.சா – வின் ஆசிரியர் – மீனாட்சி சுந்தரம்பிள்ளை .
11. சாமிநாதன் என உ.வே.சா விற்கு பெயரிட்டவர் – மீனாட்சிசுந்தரம் பிள்ளை .
12. உ.வே.சா-வின் தந்தை பெயர் – வேங்கட சுப்பையா .
13. உ.வே.சா – வின் காலகட்டம் -19.02.1855 – 28.04.1942 .
14. உ.வே.சா தனது சுயசரிதத்தை எழுதிய பத்திரக்கை ஆனந்தவிகடன் . அது என்சரிதம் என அழைக்கப்பட்டது .
15. உ.வே.சா பதிப்பித்த மொத்த நூல்கள் -80 .
16. உ.வே.சா – வின் நினைவில்லம் எங்குள்ளது ? – உத்தமனாதபுரம் .

17. 1942- ல் நிறுவப்பட்ட உ.வே.சா – நினைவு நூலகம்
Share:

மாதிரி வினாத்தாள் - 10

நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவு - 2


1.    மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ?

அ) சோனியா காந்தி              ஆ) கமல்நாத்
இ) ராகுல் காந்தி                      ஈ) மல்லிகார்ஜுனே கார்கே


2.   மாநிலங்களவையின் புதிய எதிர்க்கட்சி தலைவர் ?

அ) குலாம் நபி ஆசாத்                ஆ) அம்பிகா சோனி
இ) மேனகா காந்தி               ஈ) ப.சிதம்பரம்


3.   மத்திய அரசின் எந்தத்துறை நிர்வாக திறுனக்காக ISO 9001 சான்றிதழ் சமீபத்தில் பெற்றுள்ளது ?

அ) Department of finance            ஆ) Department of Personal and Training
இ) Department of Forest             ஈ) Department of Home


4.   கடந்த ஜூன் 8 , 2014 அன்று தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உண்டான பாகிஸ்தான் விமானநிலையம் ?

அ) இஸ்லாமாபாத்               ஆ) கராச்சி
இ) ராவல்பின்டி                  ஈ) லாகூர்


5.   ஐ.நா பொதுச்சபை கீழ்கண்ட எந்த தலைவர் பெயரில் ஒரு புதிய பரிசினை உண்டாக்கியுள்ளது ?

அ) மகாத்மா காந்தி              ஆ) மார்ட்டின் லூதர் கிங்
இ) நெல்சன் மண்டேலா               ஈ) கரிபால்டி


6.   சமீபத்தில் ஆப்பிரிக்க யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்ட நாடு ?

அ) எகிப்து                      ஆ) மத்திய ஆப்பிரிக்க குடியரசு
இ) மொராக்கோ                  ஈ) சோமாலியா


7.   2014 IPL போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எத்தனையாவது முறையாக கோப்பையை வென்றது ?

அ) 1                            ஆ) 2
இ) 3                            ஈ) 4


8.   பிரஞ்ச் ஓப்பன் – 2014 போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கோப்பையை வென்றவர் ?

அ) செரினா வில்லியம்ஸ்        ஆ) வீனஸ் வில்லியம்ஸ்
இ) சய்மோனா ஹால்ப்                ஈ) மரியா சரபோவா


9.    எகிப்தில் நடைபெற்ற உலககோப்பை பில்லியட்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற இந்தியர் ?

அ) பங்கஜ் அத்வானி            ஆ) சாய்னா நெஹ்வால்
இ) சாய்ராம்                          ஈ) வீரேந்தர் பட்டாச்சார்யா


10. ஆஸ்திரேலியா ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் கோப்பையை வென்ற சாய்னா நெஹ்வாலுடன் இறுதி ஆட்டத்தில் மோதிய கரோலினா மாரின் எந்த நாட்டைச்சார்ந்தவர் ?

அ) இத்தாலி                     ஆ) ஸ்பெய்ன்
இ) போர்ச்சுகல்                  ஈ) அர்ஜென்டினா


Share:

வறுமை ஒழிப்புத்திட்டங்கள் - 3





31. சொர்ண ஜெயந்தி கிராம சுவரோஜ்கார் யோஜனா (SJGSRS) - 1999

·         சுயவேலைவாய்ப்பு மூலம் ஊரகவேலையின்மை , வறுமை ஒழிப்பு

·         வங்கிக்கடன் , ஆரசு மானியம் மூலம் ஊரக ஏழைப்பெண்கள் முன்னேற்றம் .


·         சுய உதவிக்குழுக்கள் மூலம் நுண்கடன்கள் அளித்தல் .

·         வேலைவாய்ப்பு பயிற்சி கடன் , தொழில்நுட்ப உதவி அளித்தல் .


·         மத்திய அரசு 75 % , மாநில அரசு  25 % உதவி அளிக்கிறது .

·         இதனுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள்
§  TRYSEM
§  DNCRA
§  MWS
§  கங்கா கல்யாண்




32 . பிரதான மந்திரி கிராமோதயா திட்டம் – 2000


·         வறுமை ஒழிப்புக்கோட்டிற்கு கீழே  அதிகம்பேர் வாழும் கிராமங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தல் .





33 . வந்தே மாதரம் திட்டம் – 2004

·         கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு , தனியார் ஒத்துழைப்பு மற்றும் மருத்துவ பயிற்சி .

·         தாய்நலம் காத்தல , இறப்பை தடுத்தல் .




34. ஜனனி சுரக்சா யோஜனா திட்டம் – (JSY) 2005

·         வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவப்பாதுகாப்பு , குழந்தை நலம்

·         சேவை மற்றும் பண உதவி

·         100% மத்திய அரசு உதவி


·         பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் , பெண் சமூக ஆர்வலர்கள் மூலம் , குழந்தை மற்றும் தாய் இறப்பை தடுத்தல் .


35. பாரத் நிர்மான் திட்டம் – 2005

·         6 பகுதிக்கு முக்கியத்துவம்
1.   நீர்ப்பாசனம்
2.   குடிநீர்
3.   வீட்டுவசதி
4.   சாலை வசதி
5.   தொலைபேசி
6.   மின்சாரம்

·         இதன் கொள்கை  , A STEP TOWARDS VILLAGE

·         கிராம அடிப்படை வசதிகளை மேம்படுத்தலே இதன் நோக்கம் .




36. ஸ்வாதர் திட்டம் – 2001

·         ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்க்கை மேம்பாட்டு திட்டம் .

·         அவர்களுன் சமூக அதிகாரத்தை காப்பாற்றும்படி உருவாக்கப்பட்டது .




37.தேசியதொழுநோய் ஒழிப்பு திட்டம் – 1983

·         NATIONAL LAPRACY ERADICATION ACT


38. MEMPER OF PARLIAMENT LOCAL AREA DEVELOPMENT SCHEME – MPLAD (1993)






நரசிம்மராவ்

·         அறிமுகப்படுத்திய பிரதமர் – நரசிம்மராவ்

·         இருஅவை உறுப்பினர்களும் , இந்நிதியினைப்பெற தகுதியானவர்கள்


·         இதன்மூலம் , 1 ஆண்டுக்கு , ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் .

·         இத்திடத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு (சாலை , மின்விளக்கு , சாக்கடை) , அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும் .


·         மத்திய அரசின் அமலாக்க துறையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது .



39. சப்லா – ( SAPLA ) – 1999

·         18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கானது .

·         குடும்பநலம் , சமூகசேவை , உடல்நலம் பற்றின விழிப்புணர்வு .


·         பலமுனை பிரச்சனைகளுக்கான தீர்வு


40 . ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் – ICDS

·         6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நல மேம்பாடு


·         கருவுற்ற தாய்மார்களுக்கு , ஊட்டச்சத்து , சுகாதாரா வசதி .


இந்த பதிவை PDF- ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்



தொடர்புடைய பதிவுகள் 



Share:

தமிழ் இலக்கணம் - சொல் - 2

சென்ற பகுதியில் வினைச்சொல்லின் வகைகள் பார்த்தோம் . இப்பதிவில் , அவற்ளைப்பற்றிய , விளக்கங்களை எ.காவுடன் காணலாம் .

முற்று

·         ஒரு பொருள் செய்த தொழிலை குறித்துவந்த, முற்று பெற்ற சொல் .

·         திணை , பால் , எண் , இடம் , ஆகியவற்றுடன் காலத்தையும் காட்டும் .

·         பெயர்ச்சொல்லுக்கு துணை நின்று , வாக்கியத்தின் பொருளை முடித்துக்காட்டுவது வினைமுற்று .

எ.கா

புலவர் பாடினார் .

மேலே உள்ள வாக்கியத்தில் , புலவர் என்பது பெயர்ச்சொல் என்று அறிவீர்கள் . அதை முடிவு செய்யும் பொருட்டு ‘பாடினார்’ என்ற வினைச்சொல் வருகிறது .



முற்று இரண்டு வகைப்படும்
1.   தெரிநிலை வினைமுற்று
2.   குறிப்பு வினைமுற்று.

தெரிநிலை வினைமுற்று

·         செய்பவன் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் என ஆறையும் உணர்த்துவது  , தெரிநிலை வினைமுற்றாகும் .

·         மேலே உள்ளவற்றில் , சில குறைந்து வந்தாலும் , காலம் மட்டும் தெளிவாக காட்டப்படும் .

எ.கா
எழிலரசி மாலை தொடுத்தாள் .

இதில் ,
செய்பவன்
எழிலரசி
கருவி
நார் , பூ ,கை
நிலம்
அவளின் இருப்பிடம்
செயல்
தொடுத்தல்
காலம்
இறந்த காலம்
செயபொருள்
மாலை


இதில் கருவி என்பது நார் , பூ , கை என்பது மறைந்து வந்துள்ளது . அவளின் இருப்பிடமும் உணர்த்தப்படவில்லை . ஆனால் , வேலை நடந்த காலம் , இறந்த காலம் என்று தெளிவாக தெரிகிறது .


குறிப்பு வினைமுற்று

·         செய்பவனை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி , பிறவற்றை குறிப்பால் உணர்த்தும் .

·         இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது .

·         6 வகைப்பெயர்களில் வரும் .

புகழேந்தி பொன்னன்
பொருட்பெயர்
வேலவன் மதுரையான்
இடப்பெயர்
நடராஜன் திருவாதிரையான்
காலப்பெயர்
வள்ளல் செங்கண்ணன்
சினைப்பெயர்
ராமன் இனியன்
பண்புபெயர்
அஜித் நடிகன்
தொழிற்பெயர்


இது மட்டுமின்றி இன்னும் ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்றும் பாடப்பகுதியில் உள்ளன . அதையும் , ஒரு லைன் பார்த்துவிடலாம் .



ஏவல் வினைமுற்று

·         முன்னிலை இடத்தாரை , ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டு ஏவுவது , ஏவல் வினைமுற்றாகும் ..

·         இது எதிர்காலம் காட்டும் .

·         ஒருமை-பன்மையை உணர்த்தும் .


எ.கா –

நீ படி .

(ஒருமையில் படிக்கவேண்டும் என்று கட்டளையிடுதல்)

நீர் வாரும்

(பன்மையில் வரவேண்டும் என்று கட்டளையிடுதல்)


வியங்கோள் வினைமுற்று

க , இய , இயர் எனும் விகுதிகளை பெற்று  , வாழ்த்துதல் , வைதல் , விதித்தல் , வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுகள் .
இவை , மூவிடங்கள் (தன்மை , முன்னிலை , படர்க்கை) மற்றும் ஐம்பால் (ஆண், பெண் , ஒன்றன் , பலவின் , பலர்)களிலும் வரும் .

எ.கா

வாழ்க = வாழ் + க
வாழிய = வாழ் + இய
வாழியர் = வாழ் + இயர்

அடுத்து ,

வாழ்க = வாழ்த்துதல்
ஒழிக = வைதல்
செல்க = விதித்தல்
ஈக = வேண்டல்




உடன்பாட்டு (ம) எதிர்மறை

·         அனைத்து வினைமுற்றுகளும் , உடன்பட்டோ , எதிர்த்தோ வருதல் .

·         தொழில் நிகழ்ந்நால் உடன்பாட்டு வினைமுற்று .

·         தொழில் நிகழவில்லையெனில் , எதிர்மறை வினைமுற்று .

எ.கா
உடன்பாட்டு
எதிர்வினை
தெரிநிலை
தொடுத்தான்
தொடுத்திலன்
ஏவல்
செல்வீர்
செல்லாதீர்
வியங்கோள்
சொல்லுக
சொல்லற்க


அவ்வளவு தான் நண்பர்களே !  வினைமுற்று முடிந்தது . அடுத்த பகுதியில் எச்சம் பற்றி பார்க்கலாம்



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *