TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

வறுமை ஓழிப்புத்திட்டங்கள்

பொருளாதாரம்


வறுமை ஓழிப்புத்திட்டங்கள்


நண்பர்களே இந்த பதிவின்வாயிலாக, இந்தியாவில் இதுவரை தொடங்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அதன் ஆண்டுகள் ,சிறப்பம்சங்கள் ஆகியவற்றை விலாவாரியாக பார்க்கலாம்.இதை நன்றாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் பலரும் மதிப்பெண்களை இழப்பது இந்தப்பகுதியில் தான்.கணிதம் கடினம் என எண்ணுபவர்களால்கூட 5 முதல் 10 மதிப்பெண்களை கணிதத்தில் பெற்றுவிட முடியும்.ஆனால், வணிகவியல் மற்றும் பொருளாதாரத்தில் அப்படியல்ல.இதில் பல திட்டங்கள் வருவதால், முக்கியமான சில திட்டங்களைப்பற்றி மட்டும் தொடர்பதிவிட திட்டமிட்டுள்ளேன்.

1.சமூக முன்னேற்ற திட்டம்(CDP)-1952

  • ·         COMMUNITY DEVELOPMENT PROGRAM
  • ·         மக்கள் பங்கேற்புடன், கிராம்பபுறங்களை அனைத்து வகையிலும் முன்னேற செய்தல்.
  • ·         இத்திட்டம் படுதோல்வி அடைந்தது.
  • ·         இதற்கு உதவிய நாடு-அமெரிக்கா


2.தீவிர விவசாய முன்னேற்ற திட்டம் (IADB) –(1960-61)

  • ·         INTENSIVE AGRICULTURAL DEVELOPMENT PROGRAM
  • ·         விவசாயிகளுக்கான கடன், உரம், பூச்சிக்கொல்லி , விதை போன்றவற்றை வழங்குதலே இதன் நோக்கம்.


3.தீவிர விவசாய பகுதி திட்டம் (IAAP) – (1964-65)

  • ·         INTENSIVE AGRICULTURAL AREA PROGRAM
  • ·         சிறப்பு அறுவடைகளை மேம்படுத்தலே இதன் நோக்கமாகும்.


4.கடன் உறுதி திட்டம்-1965

  • ·         RBI-ன் கடன் தன்மை கட்டுப்பாட்டு திட்டம்.


5.வீரிய விதைகள் அபிவிருத்தித்திட்டம்-1967

  • ·         HIGH YIELDING VARIETY PROGRAM
  • ·         பசுமைப்புரட்சி திட்டத்தின் அங்கம்
  • ·         புதிய ரக விதைகள் மூலம் , உணவு உற்பத்தியை அதிகரித்தல்.


6.இந்திய சுற்றுலா மேம்பாட்டு கழகம் – 1966

  • ·         INDIAN TOURISM AND DEVELOPMENT CORPORATION.
  • ·         நாட்டின் பல இடங்களில் , தங்கும் விடுதிகள் ,பயணியர் மாளிகை அமைத்தல்.
  • ·         INCREDIBLE INDIA”-இதனுடன் தொடர்புடைய வார்த்தையாகும்.


7.ஊரக மின்வசதி கழகம்-1969

  • ·         ஊரகப்பகுதிகளில் மின்வசதி ஏற்படுத்தல்.


8.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற முன்னேற்ற கழகம்-1970

  • ·         வீட்டுவசதிக்கு கடனுதவி அளித்தல்.


9.முடுக்கிவிடப்பட்ட கிரம குடிநீர் வழங்குதல் திட்டம்-(1972-73)

  • ·         கிராமங்களுக்கு , சுகாதாரமான குடிநீர் வழங்குதல்.


10.வறட்சிப்பகுதி முன்னேற்ற திட்டம்-1973

  • ·         DROUGHT PRONE AREA PROGRAM.
  • ·         நிலத்தடி நீர் மேம்பாடு,சுற்றுச்சூழல் மேம்பாடு மூலம் வறட்சியைத்தடுத்தல்.


11.சிறுவிவசாயிகள் முன்னேற்ற முகைமை-(1974-75)

  • ·         SMALL FARMER DEVELOPMENT AGENCY
  • ·         சிறு விவசாயிகளுக்கு கடன், மற்றும் தொழில்நுட்ப வசதிகளை அளித்தல்.


12.கட்டளைப்பகுதி தொழில் முன்னேற்ற திட்டம் –(1974-75)

  • ·         COMMAND AREA DEVELOPMENT PROGRAM
  • ·         பெரிய ,நடுத்தர பாசனத்திட்டம் மூலம் நீர்ப்பாசனத்தை உறுதி செய்தல்.


13.இருபது அம்ச திட்டம்(TPP)- 1975
·         TWENTY POINT PROGRAM
·         பிரதமர் இந்திரா காந்தி மூலம் அறிவிக்கப்பட்டது.
·         வறுமை ஒழிப்பு, வாழ்க்கை தரம் உயர்த்தலே இதன் நோக்கமாகும்.
·         இதன் திட்டகாலம்-5வது ஐந்தாண்டு திட்டம்.
·         இத்திட்டம் 1982, 1986 ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்டது.

14.வேலைக்கு உணவு திட்டம்(FFW) –(1977-78)

  • ·         FOOD FOR WORK
  • ·         நாட்டின் பொருளாதார முன்னேற்ற வேலைகளில் ஈடுபடும், தொழிலாளர்களுக்கு உணவு வழங்குதல்.


15.அந்தியோதயா திட்டம் –(1977-78)

  • ·         ஏழைகளை,பொருளாதார அடிப்படையில் தன்னிறைவைப்பெற செய்தல்.



-தொடரும்


இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய  இங்கே அழுத்துங்கள்


என்னுடைய டைம் மெஷின் –கதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

டைம்-மெஷின்-அத்தியாயம்2 ஐப்படிக்க இங்கே அழுத்துங்கள்

தொடர்பான பதிவுகள்

அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளைப்பற்றி படிக்க  இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்


மாதிரிவினாத்தாள்களை டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்
Share:

தமிழ் மாதிரி வினாத்தாள் | Online Tamil Model Test



1.ஆழி என்ற சொல்லின் பொருள் யாது?
அ)தோடு                             ஆ)மோதிரம்
இ)ஆனை                             ஈ)வயல்

2.ஆ-என்பதன் பொருள் யாது?
அ)காளை                             ஆ)பசு
இ)மாடு                               ஈ)எருமை

3.தமிழ் எங்கள் உயிர் எனப்பாடியவர்?
அ)பாரதிதாசன்                       ஆ)பாரதியார்
இ)கவிமணி                                ஈ)நாமக்கல் கவிஞர்

4.அம்மானை  என்பது யார் விளையாடும் விளையாட்டு?
அ)குழந்தைகள்                        ஆ)ஆண்கள்
இ)பெண்கள்                                ஈ)இருவரும்

5.முருகனால் சிறையிடப்பட்டவன் யார்?
அ)திருமால்                                ஆ)பிரம்மா
இ)சிவன்                              ஈ)விநாயகர்

6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் என போற்றப்படும் அம்மையார், முதல் போராட்டத்தை துவக்கிய ஆண்டு?
அ)1883                               ஆ)1880
இ)1912                               ஈ)1917

7.மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழை இயற்றியவர்?
அ)மீனாட்சி சுந்தரம்                   ஆ)ஒட்டக்கூத்தர்
இ)குமரகுருபர்                        ஈ)குணங்குடியார்

8.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்றழைக்கப்படும் நகரம்?
அ)ஆலப்புழா                          ஆ)மதுரை
இ)சென்னை                                ஈ)எர்ணாக்குளம்

9.திருமலை நாயக்கர் மஹால், கலைநயத்தில் எதை ஒத்தது?
அ)அஜந்தா                            ஆ)மாமல்லபுரம்
இ)தாஜ்மஹால்                       ஈ)மீனாட்சியம்மன் கோவில்

10.மதுரை என்ற சொல்லின் பொருள் யாது?
அ)கோவில்                           ஆ)தேன்
இ)இனிமை                                 ஈ)பழமை
11.நான்மாடக்கூடல் என வழங்கப்படும் நகரம்?
அ)கும்பகோணம்                      ஆ)சிதம்பரம்
இ)மதுரை                            ஈ)ஶ்ரீரங்கம்

12.சேரநாடு _________ உடைத்து.
அ)முத்து                             ஆ)சோறு
இ)பொன்                             ஈ)வேழம்

13.குமரகுருபரர் பிறந்த ஊர்?
அ)திருவைகுண்டம்                   ஆ)மதுரை
இ)ஶ்ரீரங்கம்                           ஈ)திருவாரூர்

14.’கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’-யார் கூற்று?
அ)பரணர்                             ஆ)கபிலர்
இ)ஔவை                            ஈ)பாரதியார்

15.காளமேகப்புலவரின் இயற்பெயர் யாது?
அ)பரதன்                             ஆ)வரதன்
இ)கலியன்                            ஈ)எத்திராஜலு

16.ராமானுஜம் தின்னைப்பள்ளியில் படித்த ஊர் எது?
அ)கும்பகோணம்                      ஆ)காஞ்சிபுரம்
இ)மதுரை                             ஈ)தஞ்சை

17.சோழருக்கு உரிய மாலை?
அ)பனம்பூ                            ஆ)அத்திப்பூ
இ)வேப்பம்பூ                          ஈ)முல்லைப்பூ

18.தலபுராணவேந்தர் என அழைக்கப்படுபவர்?
அ)மீனாட்சி சுந்தரம்                   ஆ)குமரகுருபரர்
இ)சேக்கிழார்                          ஈ)பரஞ்சோதி முனிவர்

19.’நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’-எனப்பாடியவர்?
அ)பரணர்                             ஆ)கபிலர்
இ)மோசிக்கீரனார்                          ஈ)ஔவை

20.அம்மை,அப்பன் என்ற சொல் வழங்கும் நாடு?
அ)குமரி நாடு                        ஆ)கொங்கு நாடு
இ)நாஞ்சில் நாடு                      ஈ)தொண்டை நாடு


இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்


என்னுடைய பயணம்@டைம் மெஷின் தொடர்கதையைப்படிக்க  இங்கே அழுத்துங்கள்

பக்தி இலக்கியம் பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


அனைத்துப்பதிவுகளையும் டவுன்லோட் செய்ய  இங்கே அழுத்துங்கள்



Share:

அட்ச மற்றும் தீர்க்க கோடுகள்

அட்ச மற்றும் தீர்க்க கோடுகள்

(LATITUDE & LANGTUDE)

அட்சக்கோடுகள்

v  உலக உருண்டையில் கிடைமட்டமாக (அ) கிழக்கு மேற்காக வரையப்பட்டிருக்கும் கற்பனைக்கோட்டிற்கு அட்சக்கோடுகள் என்று பெயர்.

v  உலகில் முதல் அட்சக்கோடு மற்றும் தீர்க்ககோட்டினை வரைந்தவர்-டாலமி


v  புவியின் மையத்தில் 0டிகிரி அச்சக்கோட்டிற்கு நிலநடுக்கோடு அல்லது புவிமையக்கோடு எனப்பெயர்.

v  புவியின் வடிவம் GEOID அல்லது புவி வடிவம்.


v  0° அட்சக்கோட்டிற்கு வடக்கே வரையப்பட்டுள்ள 23 ½ ° வட அட்சத்திற்கு கடகரேகை.23 ½ ° தென் அட்சக்கோட்டிற்கு , மகர ரேகை.

v  66 ½ ° வட அட்சக்கோட்டிற்கு ஆர்க்டிக் வட்டம்.66 ½ ° தென் அட்சக்கோட்டிற்கு அன்டார்டிக் வட்டம் என்று பெயர்.


v  90°வட அட்சத்திற்கு ஆர்க்டிக் துருவம் அல்லது வட துருவம்.90° தென் அட்சத்திற்கு அன்டார்டிக் துருவம் அல்லது தென் துருவம்.

v  அட்சக்கோடுகள் புவியின் வெப்பநிலையை கணக்கிட உதவுகிறது.

தீர்க்கக்கோடுகள்

v  உலக உருண்டையில்,செங்குத்தாக அல்லது வடக்கு தெற்காக வரையப்படுபம் கற்பனைக்கோட்டிற்கு தீர்க்கக்கோடுகள் எனப்பெயர்.

v  இக்கோடுகள், வட மற்றும் தென் துருவத்தை இணைக்க உதவுகிறது.


v  இது புவியில், நேரத்தை கணக்கிட உதவுகிறது.

v  இரு தீர்க்கக்கோடுகளுக்கு இடையேயான இடைவெளி 111 கி.மீ


v  ஒரு தீர்க்கக்கோட்டை கடக்க சூரிய ஒளி எடுத்துக்கொள்ளும் நேரம் 4 நிமிடம்

v  GMT – Greanwitch Mean Time


v  புவியின் மையத்தில் வரையப்பட்டிருக்கும் 0° கோட்டிற்கு , கிரின்விச்  மையக்கோடு எனப்பெயர்.

v  இக்கோட்டை மையமாக வைத்துதான் உலகின் நேரம் கணக்கிடப்படுகிறது.


v  பூமி,மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுவதால் , கிரின்விச் தீர்க்கரேகையிலிருந்து மேற்கே செல்லச்செல்ல நேரம் குறையும்.கிழக்கே செல்ல நேரம் அதிகரிக்கும்.

v  180° தீர்க்ககோடு , சர்வதேச தேதிக்கோடு எனப்படுகிறது.


v  180° மேற்கு மற்றும் 180° கிழக்கு ஆகியவை ஒரே கோடாகும்.

v  இந்தியாவில் மொத்தம் 29 தீர்க்கக்கோடுகள் செல்கின்றன.


v  இந்தியாவின் திட்டநேரம் ,82½ ° கிழக்குத்தீர்க்ககோடு செல்லும் அலகாபாத்தை மையமாக வைத்து கணக்கிடப்படுகிறது.

v  இந்தியாவில் சூரிய உதயத்தைக்கானும் முதல்மாநிலம், அருணாச்சல பிரதேசம்.(97° கி,தீர்க்ககோடு)


v  இந்தியாவில் கடைசியாக சூரிய உதயத்தைக்காணும் மாநிலம், குஜராத்(68° கி.தீகோ)

v  அ.பிரதேசத்திற்கும் குஜராத்திற்கும் இடையேயுள்ள சூரிய உதய நேரம், 1 மணி 56 நிமிடங்கள்.


v  உலகின் சூரிய உதயத்தைக்காணும் முதல்நாடு, ஜப்பான்.

v  உலகில் உள்ள நேரமண்டலங்களின் எண்ணிக்கை, 24.


இந்த பதிவை PDF-ல் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள்

பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்

என்னுடைய பயணம்@டைம் மெஷின்-கதையை படிக்க  இங்கே அழுத்துங்கள்
Share:

பக்தி இலக்கியம் பகுதி -2


பக்தி இலக்கியம் பகுதி -2
இதன் முந்தைய பதிவைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
திருநாவுக்கரசர்:-
Ø  திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் எனும் ஊரில் வேளாளர் மரபில் தோன்றியவர்.
    Ø  இயற்பெயர்           -          மருள்நீக்கியார்
Ø  பெற்றோர்            -          புகழனார்,மாதினியார்
Ø  தமக்கை              -          திலகவதியார்
Ø இவர் சமண சமயம் சார்ந்து தருமசேனர் எனும் பெயர் பெற்றார்.
Ø  இவர் காலம் 7-ம் நூற்றாண்டு
Ø  இவர் கடுமையான சூளை நோய்(வயிற்றுவலி) காரணமாக தம் தமக்கையிடம் வந்து திருநீறு பூச குணமானார்.அன்று முதல் இவர் சைவர் ஆனார்.
Ø  இவர் சைவத்திற்கு மாறியதை அறிந்த மகேந்திரவர்ம பல்லவன் பல தீங்கு இழைத்தான்.பின்னர் அவனே சைவர் ஆனார்.
Ø  இறைவன் முன் தன்னை தாசனாக பாவித்துக்கொண்டார்.அதனால் இவரது நெறி தசமார்க்கம் (அ) தொண்டு நெறி
Ø  என் கடன் பணி செய்து கிடப்பதே”என்று கோவில் தோறும் உளமாற பணி செய்தார்ழ
Ø  வேறு பெயர்கள் -     ஆளுடைய அரசு,அப்பர்(கூறியவர்-ஞானசம்பந்தர்),வாகீசர்,சைவ உலகின் செந்நாயிறு,தாண்டக வேந்தர்
Ø  இவர் பாடியது 4900 பதிகங்கள்.கிடைத்தது 3066 பாடல்களே.இதுவே 4,5,மற்றும் 6 ஆம் திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.
Ø  இறைவன் இவரை ஆட்கொண்ட இடம்-திருவதிகை
Ø  இறைவனடி சேர்ந்த இடம் –திருப்புகழூர்
Ø  இவர் பாடல் அமைப்பு –கெஞ்சுதமிழ்
Ø  இவர் செய்த அற்புதம்
அப்பூதி அடிகளின் மகனை அரவு தீண்ட அவ்விடத்தை ‘ஓன்று கொலாம்’ எனும் பதிகம் பாடி நீக்கினார்.
மூவர் முதலிகளில் அதிக காலம் வாழ்ந்தவர்.
Ø  பாடல்கள்
“தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்”
“ஆரியன் கண்டாய் தமிழைக்கண்டாய்”
“நெஞ்சகமே கோவில் நினைவே சுகந்தம்”
“ஈசன் எந்தன் இணையடி நிழலே”
“சிவபெருமானே! உனையும் உணர்வேண் நன்காய்”
“நாமார்க்கும் குடியெல்லாம் நமனை அஞ்சோம்”(இப்பாடல் பாரதியை அச்சமில்லை அச்சமில்லை எனப்பாட வைத்தது)

அப்பர் (அ) சுந்தரர்
Ø  பிறப்பு                -          திருநாவலூர்
Ø  இயற்பெயர்           -          ஆரூரார்
Ø  பெற்றோர்            -          கடையனார்,இசைஞானியார்
Ø  தன்னை அடிமை எனக்கூறிய இறைவனை பித்தா எனக்கோவித்துக்கொண்டவர்.பின் இறைவன் ஆட்கொண்ட பிறகு இறைவனே தன்னை பித்தா எனப்பாடுமாறு வேண்டியதால்“பித்தா பிறைசூடி பெருமாளே அருளானார்” எனப்பாடினார்.
Ø  இவர் வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்திலே வாழ்ந்தார்.
Ø  இறைவனுக்கு இவர் தோழர் ஆனதால் தம்பிரான் தோழர் என்றழைக்கப்பட்டார்.
Ø  திருவாரூர் கோவிலில் திருத்தொண்டர் தொகைப்பாடினார்.இதன் முதல் வரி “தில்லைவாழ் அந்தணர்தம்”.
Ø  வேறுபெயர்
ஆளுடைய நம்பி,திருநாவலூரார்,வன்தொண்டர்,ஆலால சுந்தரனார்.
Ø  இவருடைய நெறி சகமார்க்கம்(அ) தோழர்
Ø  இறைவன் இவரை ஆட்கொண்ட இடம் – திருவெண்ணெய் நல்லூர்
Ø  இறைவனடி சேர்ந்த இடம் – கைலாயம்
Ø  இவரின் பாடல் அமைப்பு – மிஞ்சு தமிழ்
Ø  இவர் நிகழ்த்திய அற்புதம்
திருப்புகழூரில் செங்கல்லை பொன்னாக்கினார்
அவினாசியில் முதலைவாயிலிருந்து பிள்ளையைக்காப்பாற்றினார்
திருவையாற்றில் காவிரிநீர் பெருக்கை அடக்கி வழிவிட பதிகம் பாடினார்.
Ø  பாடல் வரிகள்
“இறைவன் ஏழிசையாய் இசைப்பவனாய் உள்ளான்”
“பொன்னாற் மேனியை பூங்கொடியாய்”

மாணிக்க வாசகர் :-
Ø  ஊர்             -          திருவாதவூர்
Ø  காலம்          -          9-ம் நூற்றாண்டு
Ø  இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராக இருந்து தென்னவன் பிரம்மராயன் எனும் பட்டம் பெற்றார்.
Ø  இறைவன் இவர் பொருட்டு நரியை பரி ஆக்கினார்.வைகை நதியைப்பெருக்கெடுத்து ஓட வைத்தார்.பிட்டுக்கு மண் சுமந்தார்.
Ø  இவர் எழுப்பிய ஆவுடையார் கோவில்,திருப்பெருந்துறை(புதுக்கோட்டை)யில் உள்ளது.
Ø  இவர் எழுதிய திருவாசகம்(சைவ வேதம்) 658 பாடல்கள் கொண்டது.
Ø  இந்நூலை G.U.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Ø  இவர் திருவெம்பாவை(மார்கழி மாதத்தில் பாடுவது) எனும் நூலை எழுதியுள்ளார்.இதன் முதல்வரி “ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”.இது 400 பாடல்கள் உடையது.
Ø  இறைவன் இவரிடம் “பாவைப்பாடிந வாயால் கோவைப்பாடுக” என வேண்டியதால் திருக்கோவைப்பாடினார்.
Ø  வேறுபெயர்
அழுது அடியடைந்த அன்பர்,ஆளைடைய அடிகள்,உத்தம சீலன்,பேரரையன்
Ø  திருவாசகத்தின் வேறு பெயர்
தமிழ்வேதம்,சைவ வேதம்,அழகிய வாய்மொழி,
Ø  இவரின் நெறி சற்குரு மார்க்கம்
Ø  இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் – திருப்பெருந்துறை
Ø  இறைவனடி சேர்ந்த இடம் – சிதம்பரம்
Ø  “உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விட புலமை,உழைப்பு,துன்பம் பொறுத்தல்,இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்பவர் யாரும் இல்லை” என G.U.போப் பாராட்டியுள்ளார்.
Ø  பாடல் வரிகள்
“உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன்”
“தென்னாடுடைய சிவனே போற்றி”
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி”
“அம்மையே யப்பா ஒப்பில்லா மணியே”

என்னுடைய பயணம்@டைம் மெஷின்-கதையைப்படிக்க  இங்கே அழுத்துங்கள்

என்னுடைய நேற்று,நாளை,இன்று சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
என்னுடைய பூமி-சிறுகதையைப்படிக்க இங்கே அழுத்துங்கள்
மற்ற TNPSC பதிவுகளைப்படிக்க இங்கே அழுத்துங்கள்


Share:

இலவச மாதிரிவினாத்தாள்கள் | Model Question Papers



நண்பர்களே!! நான் பிற தளங்களில் இருந்து டவுன்லோட் செய்த PDF மாதிரி வினாத்தாள்களை இங்கு பாடவாரியாக பதிவிட்டுள்ளேன்.டவுன்லோட் செய்து படியுங்கள்.உங்களுக்கு மிக உபயோகமானாதாக இருக்கும்.

பொது வினாத்தாள்-1 PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

பொது வினாத்தாள்-2 PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

பொது வினாத்தாள்-3 PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

பொது வினாத்தாள்-4 PDF Freeடவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

பொது வினாத்தாள்-5 PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

வரலாறு-1 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

வரலாறு-2 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

இயற்பியல்-1 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

இயற்பியல்-2 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

இயற்பியல்-3 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

இயற்பியல்-4 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

வேதியியல்-1 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

வேதியியல்-2 மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

தமிழ் மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

அறிவியல் மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்

உயிரியல்-மாதிரிவினாத்தாளை PDF Free டவுன்லோட் செய்ய இங்கே அழுத்துங்கள்


பிற TNPSC பதிவுகளுக்கு இங்கே அழுத்துங்கள்

Share:

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *