TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - நாமக்கல் கவிஞா்.வெ.ராமலிங்கம்பிள்ளை

நாமக்கல் கவிஞர் . வெ. ராமலிங்கம் பிள்ளை

·         பிறப்பு –  19 – 10 – 1888 .
·         பிறந்த ஊர் – மோகனூர் , நாமக்கல் மாவட்டம் .
·         பெற்றோர் – வெங்கட்ராமன் , அம்மணி அம்மாள் .
·         வளர்ப்புத்தாய் – பதுல்லா பீவி எனும் இஸ்லாமிய பெண் .
·         நாமக்கல் கவிஞர் ஓவியக்கலையிலும் திறமை பெற்று விளங்கினார் . இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் – ராமகிருஷ்ண பரமஹம்சர் .
·         இவர் , அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னனுக்கு பாரதமாதா முடிசூட்டுவது போல படம்வரைந்து தங்கப்பதக்கம் பெற்றார் .
·         மேலும் திருச்சி மாவட்ட காங்கிரஸின் செயலாளர் ஆகவும் கரூர் மற்றும் நாமக்கல் வட்டார காங்கிரஸில் தலைவராகவும் பணியாற்றினார் .
·         1932-ம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு அதன் வழிநடை பாடலாக ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்ற பாடலை பாடினார் .
·         தமிழக அரசின் முதல் அரசவைக் கவிசராக விளங்கினார் .
·         சாகித்திய அகாதமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார் .
·         மேலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார் .
·         இராமலிங்கம்பிள்ளை , கோவிந்தராசு ஐயங்காருடன் இணைந்து ‘லோகமித்ரன்’ என்ற இதழை நடத்தினார் .

சிறப்புப்பெயர்கள்

·         ஆஸ்தான கவிஞர் , காந்தியக்கவிஞர், நாமக்கல் கவிஞர், காங்கிரஸ் கவிஞர் , ஆட்சிமொழி காவலர் .

எழுதிய நூல்கள்

·         அவனும் அவளும் , இலக்கிய இன்பம் , சங்கொலி , தமிழன் இதயம் , கவிதாஞ்சலி, காந்தியஞ்சலி, தமிழ்வேந்தன் , தமிழ்த்தேர் , அன்பு செய்த அற்புதம் , திருக்குறள் – புது உரை .
·         மலைக்கள்ளன் – மர்மச்சுவை நிறைந்த நாவல்
·         என் கதை – சுய சரிதை .

நாமக்கல் கவிஞர் மறைவு

·         இவர் 24 – 08 – 1972 அன்று மறைந்தார் .
·         நாமக்கல்லில் உள்ள இவரது இல்லம் , நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது .
·         தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது .
·         நடுவணரசு பத்ம்பூசன் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது .

புகழுரை

·         திலகர் விதைத்த வித்து பாரதியாக உரைத்தது
காந்தி தூவிய விதை நாமக்கல்ல கவிஞராக தோன்றியது
-    ராஜாஜி

நாமக்கல் கவிஞரின் கவிதைகள்

·         தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு
( தமிழன் இதயம் என்ற நூலில் இடம்பெற்ற பாடல் இது )
·         சத்தியம் நம்மில் குறைந்ததால்
பல சங்கடங்கள் வந்து நிறைந்தது.
·         கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் .
·         புரட்சி வேண்டும் புரட்சி வேண்டும்
·         தமிழனென்று சொல்லடா , தலைநிமிர்ந்து நில்லடா
·         கூட்டுறவில் சேருங்கள் கூடிவாழ பழகுங்கள் .
·         பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்
பணமென்ற மோகத்தின் விசைதீரவேண்டும்
·         அன்பும் ஆர்வமும் அடக்கமும் சேர்ந்தும்
உண்மை தன்மையையும் உறுதியும் மிகுந்தும்
·         கலையென்ற கடலுக்கு கரைகண்ட புனையா
நிலைகொண்ட அறிவுக்கு நிகரற்ற துணையாம் .
·         காந்தியை மறக்காதே என்றும் காந்தியை இழக்காதே
·         காந்தியம் நம் உடைமை – அதைக்காப்பது நம் கடமை
·         இந்திய நாடிது என்னுடை நாடே
என்று தினந்தினம் நீயதைப் பாடே
·         காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி .
Share:

No comments:

Post a Comment

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *