TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

வறுமை ஒழிப்புத்திட்டங்கள் - 3





31. சொர்ண ஜெயந்தி கிராம சுவரோஜ்கார் யோஜனா (SJGSRS) - 1999

·         சுயவேலைவாய்ப்பு மூலம் ஊரகவேலையின்மை , வறுமை ஒழிப்பு

·         வங்கிக்கடன் , ஆரசு மானியம் மூலம் ஊரக ஏழைப்பெண்கள் முன்னேற்றம் .


·         சுய உதவிக்குழுக்கள் மூலம் நுண்கடன்கள் அளித்தல் .

·         வேலைவாய்ப்பு பயிற்சி கடன் , தொழில்நுட்ப உதவி அளித்தல் .


·         மத்திய அரசு 75 % , மாநில அரசு  25 % உதவி அளிக்கிறது .

·         இதனுடன் இணைக்கப்பட்ட திட்டங்கள்
§  TRYSEM
§  DNCRA
§  MWS
§  கங்கா கல்யாண்




32 . பிரதான மந்திரி கிராமோதயா திட்டம் – 2000


·         வறுமை ஒழிப்புக்கோட்டிற்கு கீழே  அதிகம்பேர் வாழும் கிராமங்களில் அடிப்படை வசதி ஏற்படுத்தல் .





33 . வந்தே மாதரம் திட்டம் – 2004

·         கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு , தனியார் ஒத்துழைப்பு மற்றும் மருத்துவ பயிற்சி .

·         தாய்நலம் காத்தல , இறப்பை தடுத்தல் .




34. ஜனனி சுரக்சா யோஜனா திட்டம் – (JSY) 2005

·         வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள கருவுற்ற தாய்மார்களுக்கு மருத்துவப்பாதுகாப்பு , குழந்தை நலம்

·         சேவை மற்றும் பண உதவி

·         100% மத்திய அரசு உதவி


·         பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் , பெண் சமூக ஆர்வலர்கள் மூலம் , குழந்தை மற்றும் தாய் இறப்பை தடுத்தல் .


35. பாரத் நிர்மான் திட்டம் – 2005

·         6 பகுதிக்கு முக்கியத்துவம்
1.   நீர்ப்பாசனம்
2.   குடிநீர்
3.   வீட்டுவசதி
4.   சாலை வசதி
5.   தொலைபேசி
6.   மின்சாரம்

·         இதன் கொள்கை  , A STEP TOWARDS VILLAGE

·         கிராம அடிப்படை வசதிகளை மேம்படுத்தலே இதன் நோக்கம் .




36. ஸ்வாதர் திட்டம் – 2001

·         ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்க்கை மேம்பாட்டு திட்டம் .

·         அவர்களுன் சமூக அதிகாரத்தை காப்பாற்றும்படி உருவாக்கப்பட்டது .




37.தேசியதொழுநோய் ஒழிப்பு திட்டம் – 1983

·         NATIONAL LAPRACY ERADICATION ACT


38. MEMPER OF PARLIAMENT LOCAL AREA DEVELOPMENT SCHEME – MPLAD (1993)






நரசிம்மராவ்

·         அறிமுகப்படுத்திய பிரதமர் – நரசிம்மராவ்

·         இருஅவை உறுப்பினர்களும் , இந்நிதியினைப்பெற தகுதியானவர்கள்


·         இதன்மூலம் , 1 ஆண்டுக்கு , ஒரு தொகுதிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும் .

·         இத்திடத்தின் மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு (சாலை , மின்விளக்கு , சாக்கடை) , அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும் .


·         மத்திய அரசின் அமலாக்க துறையினால் நடைமுறைப்படுத்தப்பட்டது .



39. சப்லா – ( SAPLA ) – 1999

·         18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கானது .

·         குடும்பநலம் , சமூகசேவை , உடல்நலம் பற்றின விழிப்புணர்வு .


·         பலமுனை பிரச்சனைகளுக்கான தீர்வு


40 . ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் – ICDS

·         6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நல மேம்பாடு


·         கருவுற்ற தாய்மார்களுக்கு , ஊட்டச்சத்து , சுகாதாரா வசதி .


இந்த பதிவை PDF- ல் டவுன்லோட் செய்ய இங்கே அழுத்தவும்



தொடர்புடைய பதிவுகள் 



Share:

தமிழ் இலக்கணம் - சொல் - 2

சென்ற பகுதியில் வினைச்சொல்லின் வகைகள் பார்த்தோம் . இப்பதிவில் , அவற்ளைப்பற்றிய , விளக்கங்களை எ.காவுடன் காணலாம் .

முற்று

·         ஒரு பொருள் செய்த தொழிலை குறித்துவந்த, முற்று பெற்ற சொல் .

·         திணை , பால் , எண் , இடம் , ஆகியவற்றுடன் காலத்தையும் காட்டும் .

·         பெயர்ச்சொல்லுக்கு துணை நின்று , வாக்கியத்தின் பொருளை முடித்துக்காட்டுவது வினைமுற்று .

எ.கா

புலவர் பாடினார் .

மேலே உள்ள வாக்கியத்தில் , புலவர் என்பது பெயர்ச்சொல் என்று அறிவீர்கள் . அதை முடிவு செய்யும் பொருட்டு ‘பாடினார்’ என்ற வினைச்சொல் வருகிறது .



முற்று இரண்டு வகைப்படும்
1.   தெரிநிலை வினைமுற்று
2.   குறிப்பு வினைமுற்று.

தெரிநிலை வினைமுற்று

·         செய்பவன் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் என ஆறையும் உணர்த்துவது  , தெரிநிலை வினைமுற்றாகும் .

·         மேலே உள்ளவற்றில் , சில குறைந்து வந்தாலும் , காலம் மட்டும் தெளிவாக காட்டப்படும் .

எ.கா
எழிலரசி மாலை தொடுத்தாள் .

இதில் ,
செய்பவன்
எழிலரசி
கருவி
நார் , பூ ,கை
நிலம்
அவளின் இருப்பிடம்
செயல்
தொடுத்தல்
காலம்
இறந்த காலம்
செயபொருள்
மாலை


இதில் கருவி என்பது நார் , பூ , கை என்பது மறைந்து வந்துள்ளது . அவளின் இருப்பிடமும் உணர்த்தப்படவில்லை . ஆனால் , வேலை நடந்த காலம் , இறந்த காலம் என்று தெளிவாக தெரிகிறது .


குறிப்பு வினைமுற்று

·         செய்பவனை மட்டும் வெளிப்படையாக உணர்த்தி , பிறவற்றை குறிப்பால் உணர்த்தும் .

·         இது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது .

·         6 வகைப்பெயர்களில் வரும் .

புகழேந்தி பொன்னன்
பொருட்பெயர்
வேலவன் மதுரையான்
இடப்பெயர்
நடராஜன் திருவாதிரையான்
காலப்பெயர்
வள்ளல் செங்கண்ணன்
சினைப்பெயர்
ராமன் இனியன்
பண்புபெயர்
அஜித் நடிகன்
தொழிற்பெயர்


இது மட்டுமின்றி இன்னும் ஏவல் வினைமுற்று மற்றும் வியங்கோள் வினைமுற்றும் பாடப்பகுதியில் உள்ளன . அதையும் , ஒரு லைன் பார்த்துவிடலாம் .



ஏவல் வினைமுற்று

·         முன்னிலை இடத்தாரை , ஒரு செயலை செய்யுமாறு கட்டளையிட்டு ஏவுவது , ஏவல் வினைமுற்றாகும் ..

·         இது எதிர்காலம் காட்டும் .

·         ஒருமை-பன்மையை உணர்த்தும் .


எ.கா –

நீ படி .

(ஒருமையில் படிக்கவேண்டும் என்று கட்டளையிடுதல்)

நீர் வாரும்

(பன்மையில் வரவேண்டும் என்று கட்டளையிடுதல்)


வியங்கோள் வினைமுற்று

க , இய , இயர் எனும் விகுதிகளை பெற்று  , வாழ்த்துதல் , வைதல் , விதித்தல் , வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்றுகள் .
இவை , மூவிடங்கள் (தன்மை , முன்னிலை , படர்க்கை) மற்றும் ஐம்பால் (ஆண், பெண் , ஒன்றன் , பலவின் , பலர்)களிலும் வரும் .

எ.கா

வாழ்க = வாழ் + க
வாழிய = வாழ் + இய
வாழியர் = வாழ் + இயர்

அடுத்து ,

வாழ்க = வாழ்த்துதல்
ஒழிக = வைதல்
செல்க = விதித்தல்
ஈக = வேண்டல்




உடன்பாட்டு (ம) எதிர்மறை

·         அனைத்து வினைமுற்றுகளும் , உடன்பட்டோ , எதிர்த்தோ வருதல் .

·         தொழில் நிகழ்ந்நால் உடன்பாட்டு வினைமுற்று .

·         தொழில் நிகழவில்லையெனில் , எதிர்மறை வினைமுற்று .

எ.கா
உடன்பாட்டு
எதிர்வினை
தெரிநிலை
தொடுத்தான்
தொடுத்திலன்
ஏவல்
செல்வீர்
செல்லாதீர்
வியங்கோள்
சொல்லுக
சொல்லற்க


அவ்வளவு தான் நண்பர்களே !  வினைமுற்று முடிந்தது . அடுத்த பகுதியில் எச்சம் பற்றி பார்க்கலாம்



நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
Share:

புகைவண்டி பற்றிய கணக்குகள்


புகைவண்டி பற்றிய கணக்குகள்



நண்பர்களே ! ப்ளாக்கரில் , Formula- க்களை சரிவர அப்லோட் செய்யமுடியாத காரணத்தினால் , இப்பதிவை  Image வடிவில் கொடுத்துள்ளேன் . சரியானபடி படிக்கமுடியவில்லை எனில்  , கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கும் டவுன்லோட் வசதி மூலம் , டவுன்லோட் செய்து படியுங்கள்









இந்த பதிவை , PDF வடிவில் டவுன்லோட் செய்திட இங்கே அழுத்துங்கள்






தொடர்புள்ள பதிவுகள்-

கணிதம்-தனிவட்டி பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
கணிதம்-ஆட்கள் ,வேலை பற்றி படிக்க இங்கே அழுத்துங்கள்
கணிதம்-பகுதி1 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்

கணிதம்-பகுதி2 ஐ படிக்க இங்கே அழுத்துங்கள்






நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .
Share:

தமிழ் இலக்கணம் - சொல் - 1

சொல்

ஒர் எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது , சொல் எனப்படும்

வேறுபெயர்கள் – பதம் , மொழி , கிளவி

சொல் , 4 வகைப்படும்
1.   பெயர்ச்சொல்
2.   வினைச்சொல்
3.   இடைச்சொல்
4.   உரிச்சொல்

பெயர்ச்சொல்

பெயரை உணர்த்தும் சொல் , பெயர்ச்சொல் ஆகும் .

பொருள் , இடம் , காலம் , சினை (உறுப்பு), குணம் (பண்பு) , தொழில் என்ற ஆறில் எதாவது ஒன்றை உணர்த்தும் வகையில் இருக்கும் . இந்த ஆறும் , பொருளாது ஆறு (அ) பொருள் முதலாறு என்றும் அழைப்பர் .

பொருட்பெயர்
மனிதன் , பசு , மயில் , புத்தகம்
இடப்பெயர்
சேலம் , ஈரோடு ,நாமக்கல் ,
காலப்பெயர்
மணி, நாள் , மாதம் , வருடம்
சினைப்பெயர்
கை ,கால் , மூக்கு , கண்
பண்புபெயர்
நீளம் , இனிமை ,வெண்மை, வட்டம்
தொழிற்பெயர்
படித்தல் , எழுதல் , உண்ணல்

மூவகை மொழி

(மொழி = சொல்)

இது ,
1.   தனிமொழி
2.   தொடர்மொழி
3.   பொதுமொழி

என மூவகைப்படுத்தலாம் . நன்கு புரிந்து கொள்க . மொழி எத்தனை வகைப்படும் என்றால் , 3 என்பதுதான் விடை . சொல் என்றால் மாத்திரமே 4 வகைப்படும் என்று விடையளிக்கவேண்டும் .

தனிமொழி

ஒரு சொல் , தனித்து நின்று பொருளை உணர்த்தல் .
எ.கா
மனிதன் , நிலம்

தொடர்மொழி
ஒன்றிற்கு மேற்பட்ட சொற்கள் வந்து ,ஒன்று (அ) பல பொருளை உணர்த்தல் .
எ.கா
நிலங்கடந்தான்

இதில் , நிலம் என்ற சொல்லும் , கடந்தான் என்றான் சொல்லும் வருகிறது.  இதன்மூலம் இரு சொற்கள் வந்து ¸நிலத்தை கடந்தான் எனும் பொருளை தருகிறது .


பொதுமொழி
தனிமொழிக்கும் , தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது .

ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் , தொடர்ந்து நின்று, வேறொரு பொருளையும் உணர்த்துவது .

எ.கா
தாமரை
இச்சொல் , தாமரை எனும் மலரைக்குறிக்கிறது . அதுவே தா + மரை என்று பிரியும்போது , தாவுகின்ற மான் என்று குறிக்கிறது .

வினைச்சொல்

ஒரு பொருளின் வினை (செயல்)யை உணர்த்தும் சொல் .

முடிவு பெற்ற வினைச்சொல் , முற்று எனவும் ; முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் என்றும் வழங்கப்படும் .




முற்று இரண்டு வகைப்படும் = 1. தெரிநிலை வினைமுற்று , 2, குறிப்பு வினைமுற்று

எச்சம் இரண்டு வகைப்படும் = 1. பெயரெச்சம் , 2. வினையெச்சம்

Share:

தமிழ் இலக்கணம் – எழுத்து -2 | Tamil Illakkanam Notes


முதல் பகுதியைப்படிக்க , இங்கே அழுத்துங்கள்




4. ஒற்றளபெடை

ஒற்று + அளபெடை

ஒற்றெழுத்து , தமக்குரிய அரைமாத்திரையிலிருந்து , நீண்டு ஒலித்தல் . இதைப்பற்றி அறிந்து கொள்ள தேவையில்லை . அப்படியே நான் விளக்கி கூறினாலும் , குழப்பம் தான் வரும் .

5. குற்றியலுகரம்

குறுமை + இயல் + உகரம்

ஒருமாத்திரையளவு ஒலிக்கவேண்டிய ‘உ’ கரம் , அரைமாத்திரயாக ஒலிப்பது , குற்றியலுகரம் எனப்படும் .

க , ச , ட , த , ப , ற எனும் வல்லின எழுத்துகளுடன் , ‘உ’கரம் இணைந்து  , கு , சு , டு , து, பு, று எனும் வார்த்தைகள் தோன்றும் . இந்த எழுத்துகள் , தனிநெடில் உடனோ ,பல எழுத்துகளை தொடர்ந்து , கடைசியில் வந்தாலோ , அவ்வார்த்தையில் வரும் ‘உ’கரம் , அரைமாத்திரயளவே ஒலிக்கும் .

எ.கா – 1 .தனிநெடிலுடன் வரும் போது ,

காசு – இவ்வார்த்தைச்சொல்லி பார்த்தால் , காஸ்+உ என்றே நாம் உச்சரிப்போம் .’சு’க்கு பதில் , ‘உ’ என்றுதான் கடைசியில் வரும் .

எ.கா – 2 . பல எழுத்துகள் சேர்ந்து வருதல் .

பந்து  - இதில் வரும் வார்த்தையை சொல்லிப்பாருங்கள் . ‘பந்த்’ + உ என்றே சொல்லுவோம் . ‘து’க்கு பதில் , கடைசியில் உச்சரிப்பின்போது ‘உ’ மாத்திரமே வரும் . இவ்வாறு வருதலே , குற்றியலுகரம் .

இன்னும் புரியவில்லையெனில் , CASTLE எனும் ஆங்கில வார்த்தையை எவ்வாறு நாம் உச்சரிப்போம் ? கேஸில் என்று தானே ! அவ்வார்த்தையில் வரும் T ஆனது , மறைந்து வருகிறதல்லவா ? அதேபோல் தான் , இதுவும் . (இது சும்மா ஒரு எ. கா வுக்கா . ஒரிஜினல் இலக்கணம் வேறுமாதிரி வரும்)


குற்றியலுகரம் , ஆறு வகைப்படும் .

எ.கா
வகை
நாடு
நெடில்தொடர் குற்றியலுகரம்
எஃகு
ஆய்ததொடர் ‘’
வரகு
உயிர்த்தொடர்
பத்து
வன்தொடர்
பந்து
மென்தொடர்
மார்பு
இடைத்தொடர்



6. குற்றியலிகரம்

குறுமை + இயல் + இகரம் .

மேலே பார்த்தவாறு இதுவும் ஒன்றே தான் .’உ’கரத்திற்கு பதில் ‘இ’கரம் , அரைமாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .

எ. கா

நாடு + யாது = நா(ட் + உ) + யாது  = நாடியாது
இவ்விடத்தில் , வரும் ‘உ’கரம் , முதலில் வரும் ‘ய’வின் காரணமாக , ‘இ’கரமாக மாறியுள்ளது . அவ்வாறு மாறினாலும் , அதன் மாத்திரை , அரை மாத்திரையே ஆகும் . செம குழப்பமா இருக்கா ? குற்றியலுகரம் , இகரமாக திரிவது தான் குற்றியலிகரம் .


7. ஐகாரக்குறுக்கம்

ஐ என்பதற்கு இரண்டு மாத்திரை . அது , ஒன்றரை மாத்திரையாகவும் , ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலித்தலே , ஐகாரக்குறுக்கம் . என்னடா இது ? ஒன்றரையாவும் குறையுது , ஒன்னாவும் குறையுதுனு பாக்குரிங்களா ?

ரொம்ப சிம்பிள் . ஒரு வார்த்தையின் முதல் சொல்லாக ‘ஐ’ வந்தால் , ஒன்றரை மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்ம.
எ.கா – ஐந்து . இந்த இடத்துல , ‘ஐ’ங்ற சொல்ல , இரண்டு விநாடி நம்மால சொல்ல முடியுமா ? முடியாது . சும்மா , நீங்களே சொல்லிப்பாருங்க  .

வார்த்தையின் நடுவே வரும்போது , ஒரு மாத்திரையாக குறைந்து ஒலிக்கும் .
எ.கா  - வளையல் . இத சொல்லும்போது , ‘ஐ’ங்றது , அடங்கிப்போயிருக்கும் .

8. ஔகார குறுக்கம்

இது முதல் சொல்லாகத்தான் , ஒரு வார்த்தையில் வரும் . அப்படி வரும் போது , இரண்டு ஆத்திரையிலிருந்து , ஒன்றரையாக குறைந்து ஒலிக்கும் . அவ்வளவு தான் .

9. மகரக்குறுக்கம்

 ‘ம்’ ங்ற சொல் , அதன் அரைமாத்திரையிலிருந்து , கால் மாத்திரையாக குறைந்து ஒலித்தலே , மகரக்குறுக்கம் .

10 .ஆய்த குறுக்கம்
‘ஃ’ ஆய்த எழுத்து , தம்க்குரிய அரை மாத்திரையிலிந்து , கால் மாத்திரையாக ஒலித்தல் .

எ.கா
கல் + தீது = கஃறீது
இதை சொல்லிப்பாருங்கள் .அக்கு என்று தனியாக இருக்கும் போது அழைக்கப்படும் ஆயுத எழுத்து , மேலே உள்ள வார்த்தையுடன் படிக்கும்போது ஹ என்று SILENT ஆக இருக்கும் .




குறுக்கம் என்றாலே , சுருக்குதல் என்று பொருள் . நமது சிலபஸ்ஸில் , எழுத்து பற்றிய சிலபஸ் இல்லையெனினும் , இதை முதலில் லைட்டாக அறிந்து கொண்டால்தான் , பின்னால் வரும் இலக்கணங்களை , வெயிட்டாக படிக்கமுடியும் . சும்மா , ஒரு டைம் படிங்க . அடுத்து வரும் , சொல் இலக்கணம் , நமக்கு சிலபஸ்ஸில் உள்ளது .


=============================================================================



தொடர்புடைய பதிவுகள்




நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இந்த தளத்தின் பதிவுகளை முகநூலில் உள்ள குழுமங்களில் சரியானபடி வெளியிடமுடியவில்லை . அதனால் , இத்தளத்தை பார்க்க , இதன் முகவரியான tnpsculagam.blogspot.in (TNPSCஉலகம்.ப்ளாக்ஸ்பாட் .ஐஎன்) என்று டைப் செய்தோ , அல்லது GOOGLE உட்பட்ட தேடுபொறிகளில் TNPSCULAGAM BLOG என்று டைப்செய்தோ அடையலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் GOOGLE PLUS –ன் வழியே என்னை பாலோ செய்து , என் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .மேலும்  உங்களின் கருத்துகளை  மறக்காமல் பதிந்துவிட்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன் .



Share:

Popular Posts

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *