TNPSC, TET, TRB, UPSC, SSC, BANKING ,மாதிரி வினாத்தாள், பாடங்கள், ஆன்லைன் தேர்வுகள், வேலைவாய்ப்புத் தகவல்கள்

TNTET / PG TRB - 6th to 12th Study Materials / Model Question Papers With Answer Keys

தமிழ் அறிஞா்கள் - ந.பிச்சமூர்த்தி

புதுக்கவிதை

புதுக்கவிதைத் தோற்றம்

·         அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனின் , புல்லின் இதழ்கள்  புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகிறது .
·         டி.எஸ்.எலியட் எழுதிய பாழ்நிலம் (THE WASTE LAND) எனும் கவிதைநூல் , நோபல் பரிசு பெற்றது . இது புதுக்கவிதை உலகில் புதுத்தாக்கத்தினை ஏற்படுத்தியது .
·         வால்ட் விட்மனின் முறையை பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி , நகரம் என்ற தன் கட்டுரையில் , மகான் என்று அவரைக் குறிப்பிடுகிறார் .
·         தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
·         பாரதி எழுதிய புதுக்கவிதை , ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது .
·         தமிழில் புதுக்கவிதையைத் தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி – ந.பிச்சமூர்த்தி .
·         தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
·         புதுக்கவிதை வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த இதழ்கள் – எழுத்து , நடை , கலாமோகினி , கசடதபற , வானம்பாடி .
·         வல்லிக்கண்ணன் , ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
·         ‘புதுக்கவிதை இலக்கணம்’ எனும் நூலை எழுதியவர் – ராஜேந்திரன் .


ந.பிச்சமூர்த்தி

·         பிறப்பு – 15.08.1900 , மறைவு – 04.12.1976 , ஊர் – கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
·         பெற்றோர் – நடேச தீட்சிதர் , காமாட்சி அம்மாள்
·         இயற்பெயர் – வேங்கடமஹாலிங்கம் .
·         1924 – 1938 வரை வழக்குரைஞர் பணி .
·         1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்தார் .
·         பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரின் படைப்புகளாகும்.
·         1934-ல் மணிக்கொடி இதழில் வெளிவந்த ‘காதல்’ எனும் கவிதை , தமிழில் வெளியான முதல் புதுக்கவிதையாகும் .
·         இவரது ‘புதுக்குரல்கள்’ எனும் கவிதைத்தொகுதிதான் , தமிழில் வெளிவந்த முதல் புதுக்கவிதைத் தொகுப்பாகும் .
·         ‘நவ இந்தியா’ எனும் பத்திரிக்கையில் சிறிதுகாலம் ஆசிரியராக பணிபுரிந்தார்.
·         ‘கலைமகள்’ எனும் பத்திரிக்கையில் சிறுகதை ஆசிரியராக அறிமுகமானார்.
·         இவரின் எழுத்துகள்ள ‘சுதேசமித்திரன்’ , ‘சுதந்திர சங்கு’ , ‘தினமணி’ போன்ற பத்திரிக்கைகளில் வெளிவந்தன .

சிறப்புப்பெயர்

·         புதுக்கவித இரட்டையர் – ந.பிச்சமூர்த்தி , கு.ப.ராசகோபாலன் (அழைத்தவர் - வல்லிக்கண்ணன்)

சிறந்த கவிதை நூல்கள்

·         காட்டுவாத்து , வழித்துணை , பூக்காரி , ஆத்தோரான் மூட்டை , கிளக்கூண்டு , கிளிக்குஞ்சு

சிறுகதை

·         மாயமான் , ஈஸ்வர லீலை , இரும்பும் புரட்சியும் , பாம்பின் கோவம் , முள்ளும் ரோஜாவும் , கொலுபொம்மை .

சிறந்த தொடர்கள்

·         நீயன்றி மண்ணுன்டோ விண்ணுன்டோ ஒளியுண்டோ நிலவுமுண்டோ

·         காமனை எரித்த ருத்ரன் கண்சிமிட்டில் தணிந்து போவான் .
Share:

1 comment:

தங்கள் கருத்துகளை இங்கே பகிராலாமே!!!

Popular Posts

Blog Archive

Totat Views So Far

Contact Form

Name

Email *

Message *